முதல் படைப்பு
நான்
வடிவம் பெறாத நானாக இருந்தேன்
அந்த நான்
தனது காட்சித்தெளிவால்
தண்ணீராய் உருமாறியது
நீ
உனது காட்சித்தெளிவால்
தீப்பிழம்பானாய்
தீ அலகொன்று நீர்மீது மிதந்தது
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக் கதை
இந்த மண்ணுலகத்தைச் சேர்ந்த 'என்'னின் தாகம்
ஆறென ஓடிய 'உன்'னில்
தாகசாந்தியடைந்தது.
இந்த மண்ணுலகத்தைச் சேர்ந்த 'என்'னின் கனவுதான்
உன்னை
அந்த மரச்செறிவில் கண்டது.
நமது
எனது உனது
உடலின் நறுமணம்-
படைத்தல் என்பதன் மெய்ப்பொருள் இதுதான்
இந்தப் பேரண்டம் படைக்கப்பட்டது
இதற்குப் பிறகுதான்.
முதல் நூல்
நான் அங்கிருந்தேன்
நீயுங்கூட இருந்தாயோ என்னவோ
உன் மூச்சுக்காற்று என் காதில் படும் தூரத்தில்-
அல்லது
ஒரு அரிய தரிசனத்தின் இருளில்-
சூழலும் சித்தத்தைச் சுழட்டும் புள்ளியில்-
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக் கதை.
நமது
உனது எனது
இருப்பாக இருந்ததுதான்
உலகத்தின் முதல் மொழியானது.
'என்'னை 'உன்'னை
அடையாளங்காணவே சொற்கள் உருவாயின.
அவை
அந்த முதல் மொழியில் முதல் நூலை எழுதின.
நமக்கு விதிக்கப்பட்ட சந்திப்பு, நமது சந்திப்பு
இதுதான்
கற்படுக்கையில் நாம் உறங்கினோம்
நமது கண்கள், உதடுகள், விரல் நுனிகள்
உனது உடலின்
எனது உடலின்
சொற்களானது.
பிறகு அந்த ஆதிநூலை
மொழிபெயர்த்தார்கள்
ரிக் வேதம் இயற்றப்பட்டது கூட
இதற்குப் பிறகுதான்.
முதல் சமயம்
உனது இருப்பை
ஆடையென சுற்றிக்கொண்டவுடன்
நமது உடல்கள் உள்நோக்கி
தியானத்தில் அமர்ந்தன.
ஆன்மாவின் சந்நிதியில்
பின்னிப்பிணைந்திருந்த நமது கைகளும் கால்களும்
மாலையாகக் கோர்க்கப்பட்ட மலர்களாக-
நானும் நீயும்
வேள்வித்தீயில் கரையும் கற்பூரமாக
நமது உதடுகளிலிருந்து தப்பியோடிய
நமது பெயர்கள்
திருவாசகங்களாயின
அது
எனக்கும் உனக்குமான
புனிதச் சடங்கு
ஏனையச் சமயச்சடங்குகளும்
பிறகு வந்தவைதான்.
முதல் ஓவியம்
அங்கு நானிருந்தேன்
நீயுங்கூடத்தான்
அங்குமிங்கும் அலைந்துதிரிந்த நிழலுருவங்களில்
நானும் ஒரு உருவமாக
ஒருவேளை நீயும் ஒரு மெல்லிய நிழலாக
அன்று அலைந்தாயோ என்னவோ
எங்கும் போர்த்தியிருந்த இருட்டில்
சாம்பல் பூத்த நிழல்களாக நாம்
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக்கதை.
இரவுகளில், மரஞ்செடிகளில்
அப்பியிருந்த இருட்டுதான்
நமது
எனது உனது ஆடையானது.
சூரியனின் ஒளிக்கீற்று உள்ளே நுழைந்து
நமது உடலினூடாக
உனது எனது உடலினூடாக
மின்னிப் பாய்ந்தது
அதன் ஒளிச்சிதறல்கள்
கற்களின்மீது விழுந்து
அவற்றைச் செதுக்கியெடுத்தது.
அச்சமயம்
ஒளியேறிய இந்த வடிவான கைகளும் கால்களும்தான்
இந்தப் பேரண்டம் தீட்டிய முதல் ஓவியம்.
அந்த ஓவியத்துக்கு
இலைகள் தமது பசுமையை வழங்கின
வானம் தனது சாம்பல் நிறத்தை
மலர்கள்
சிவப்பை
இரத்தச் சிவப்பை
மஞ்சள் நிறத்தை வழங்கின.
ஓவியக்கலை உருவானது இதற்குப் பிறகுதான்.
முதல் இராகம்
அங்கு நான்
நீயும்தான்
வரம்பற்ற மௌன அமைதி
நம்முடன்
காய்ந்த உலர்ந்த சருகாய்
கடற்கரை மண்துகள்களாய்
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக்கதை.
பாதைகள் சந்திக்கும் இடத்தில்
உன்னை நோக்கிக் குரல் கொடுத்தேன்
நீயும் பதில் ஒலி அளித்தாய்
காற்றின் தொண்டையில் ஒரு நடுக்கம்
மண்துகள்கள் உயிர்பெற்றன.
நீரோடைகள் இசைக்கத்தொடங்கின
மரக்கிளைகள் இறுகின
இலைகளில் சலனம்
சிறிய மொட்டொன்று கண்சிமிட்டியது
பறவையொன்று சிறகுகளை உசுப்பி விறைத்திருந்தது
செவிகளுக்கு எட்டிய முதல் பாடல் இதுதான்
யாழ் இசைக்கும் சப்தஸ்வரங்கள் பிறந்ததெல்லாம்
இதற்குப் பிறகுதான்.
- அம்ரிதா ப்ரீதம் (தமிழில்: வ.கீதா)
Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts
Friday, January 19, 2007
Thursday, July 27, 2006
*மகா காலம் வியாபித்த அழியாத் துயர்...
பிரிவு என்னைப் பொறுத்தவரை பொய்..!
1.
என்னைப் பற்றியும்
உன்னைப் பற்றியும்
சொல்வதற்கு இனியேதுமில்லை
காலங்கடத்திப் போட்ட
தலைமுறையொன்றின் பிறள்வில்
சரிந்து கிடக்கிற
எம் வாழ்வின் மீது
ஒரு பனிக்காலத்தின் குளிர்மை
வசந்தகாலம் முழுதும்
சிறகடித்தொதுங்கும்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறக்குவியல்
மழைக்காலத்தின் செழுமை
இனியெதுவும் வேண்டாம்
வாழ்வின் அலைச்சலில்
எதையெதையோ பொய்யாக்கி
இனியும் யாரிடம் சொல்லப் போகின்றோம்
கேட்பதற்கும் சொல்வதற்கும்
யாருமேயற்ற நாளொன்றில்
நானும் நீயும்
நினைவுகளாய் கரைந்தொழுகி...
உன்னொத்த நண்பர்களை
இனியெங்கு தேடிப்போவேன்...
வாழ்வின் கரைசல்களில்
எல்லாம் வந்து போகிறது
அசைவற்றுப் போகின்ற உணர்வுகளில்
உள்மனம் எதையோ
வேண்டிக் கிடக்கிற கணங்களில்
நினைவுகளாய் மீண்டும்
ஏன் வந்து போகிறாய்
எதற்காக வெளிக்கிட்டோம்
இரு தசாப்தங்களைத்
தொலைத்த நாளொன்றில்
இன்னும் வெறுமையாய்
தோற்றுப் போனதென்ற பிரமையில்
நான்... நீயெப்படியோ...
நானும் நீயும்
நாமெல்லோரும்
காலங்கடத்திய
அந்த நாட்களும்
என்னில் அழிந்து போவதாய்
உணரும் போதெல்லாம்
வெடித்துச் சிதறுகிறது
மனப் பெருவெளி...
போர்க்காலத்தின் நெரிசலும்
வரண்டுபோன இந்த வாழ்வும்
சிதைந்து போன கனவுகளும்
இப்போதெல்லாம்
சுகமெனத் தெரிகிறது என்னில்.
- பி. ரவிவர்மன்
2.
யார் எங்கு போனார்கள்
எதற்கு எதுவுமே புரியவில்லை
என்றென்றைக்குமான அகதியாய்
ஓர் மூலையில் ஒதுங்கி
எதை இழந்தேன்
எதைப் பெறத் தோற்றேன்
வெற்றுக் கரத்துடன் வீதியில் இறங்கினேன்
வேதனையில் யாரோ விம்முகிறார்கள்
எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி
எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது
வேண்டாம்!
அவலம் தரும் பிரிவு வேண்டாம்
பாழ்பட்ட பிரிவினைப்
பழிப்பேன் நான்
வலம் வந்த
இரக்கமற்ற நினைவுகளைப்
பழிப்பேன் நான்
தூக்கமற்று புரள்வதற்காய்
இரவுகள் வருகின்றன
பித்துப் பிடித்தலைவதற்காய்
பகல்கள் காத்திருக்கின்றன
விதியைப்பற்றி எச்சலனமும் இன்றில்லை
வேகமாக அதிர்ந்ததிர்ந்து
ஓயும் கணங்கள் இனியில்லை
இனி எவரும் வரப்போவதில்லை
இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும்
பாழ்வெளியில்
பறவைகளைப் பார்த்து ஏங்கி
குறுகுறுத்து ஓய வேண்டும்
- அஸ்வகோஷ்
3.
ஆசைமகனே என் அன்பான கண்மணியே
நேசத்துரையே நெடுந்தூரம் போனாயோ
உந்தன் தலையரிந்து ஓலைக் குடலைகட்டி
சென்று சென்று விற்றனரோ! தின்று பசியாறினரோ
அம்மாவென அழைக்கும் ஆசைத் திருக்குரலை
எம்மாதுளக் கொளுந்தே நான்கேட்ட தென்னாளோ
ஓங்கிய கத்தி விழும்போது உடல் நடுங்க
ஏங்கியெனை நினைத் தென்னம்மாவே என்றாயோ
- விபுலானந்தர்
* நன்றி - எம்.பௌசர்
1.
என்னைப் பற்றியும்
உன்னைப் பற்றியும்
சொல்வதற்கு இனியேதுமில்லை
காலங்கடத்திப் போட்ட
தலைமுறையொன்றின் பிறள்வில்
சரிந்து கிடக்கிற
எம் வாழ்வின் மீது
ஒரு பனிக்காலத்தின் குளிர்மை
வசந்தகாலம் முழுதும்
சிறகடித்தொதுங்கும்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறக்குவியல்
மழைக்காலத்தின் செழுமை
இனியெதுவும் வேண்டாம்
வாழ்வின் அலைச்சலில்
எதையெதையோ பொய்யாக்கி
இனியும் யாரிடம் சொல்லப் போகின்றோம்
கேட்பதற்கும் சொல்வதற்கும்
யாருமேயற்ற நாளொன்றில்
நானும் நீயும்
நினைவுகளாய் கரைந்தொழுகி...
உன்னொத்த நண்பர்களை
இனியெங்கு தேடிப்போவேன்...
வாழ்வின் கரைசல்களில்
எல்லாம் வந்து போகிறது
அசைவற்றுப் போகின்ற உணர்வுகளில்
உள்மனம் எதையோ
வேண்டிக் கிடக்கிற கணங்களில்
நினைவுகளாய் மீண்டும்
ஏன் வந்து போகிறாய்
எதற்காக வெளிக்கிட்டோம்
இரு தசாப்தங்களைத்
தொலைத்த நாளொன்றில்
இன்னும் வெறுமையாய்
தோற்றுப் போனதென்ற பிரமையில்
நான்... நீயெப்படியோ...
நானும் நீயும்
நாமெல்லோரும்
காலங்கடத்திய
அந்த நாட்களும்
என்னில் அழிந்து போவதாய்
உணரும் போதெல்லாம்
வெடித்துச் சிதறுகிறது
மனப் பெருவெளி...
போர்க்காலத்தின் நெரிசலும்
வரண்டுபோன இந்த வாழ்வும்
சிதைந்து போன கனவுகளும்
இப்போதெல்லாம்
சுகமெனத் தெரிகிறது என்னில்.
- பி. ரவிவர்மன்
2.
யார் எங்கு போனார்கள்
எதற்கு எதுவுமே புரியவில்லை
என்றென்றைக்குமான அகதியாய்
ஓர் மூலையில் ஒதுங்கி
எதை இழந்தேன்
எதைப் பெறத் தோற்றேன்
வெற்றுக் கரத்துடன் வீதியில் இறங்கினேன்
வேதனையில் யாரோ விம்முகிறார்கள்
எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி
எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது
வேண்டாம்!
அவலம் தரும் பிரிவு வேண்டாம்
பாழ்பட்ட பிரிவினைப்
பழிப்பேன் நான்
வலம் வந்த
இரக்கமற்ற நினைவுகளைப்
பழிப்பேன் நான்
தூக்கமற்று புரள்வதற்காய்
இரவுகள் வருகின்றன
பித்துப் பிடித்தலைவதற்காய்
பகல்கள் காத்திருக்கின்றன
விதியைப்பற்றி எச்சலனமும் இன்றில்லை
வேகமாக அதிர்ந்ததிர்ந்து
ஓயும் கணங்கள் இனியில்லை
இனி எவரும் வரப்போவதில்லை
இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும்
பாழ்வெளியில்
பறவைகளைப் பார்த்து ஏங்கி
குறுகுறுத்து ஓய வேண்டும்
- அஸ்வகோஷ்
3.
ஆசைமகனே என் அன்பான கண்மணியே
நேசத்துரையே நெடுந்தூரம் போனாயோ
உந்தன் தலையரிந்து ஓலைக் குடலைகட்டி
சென்று சென்று விற்றனரோ! தின்று பசியாறினரோ
அம்மாவென அழைக்கும் ஆசைத் திருக்குரலை
எம்மாதுளக் கொளுந்தே நான்கேட்ட தென்னாளோ
ஓங்கிய கத்தி விழும்போது உடல் நடுங்க
ஏங்கியெனை நினைத் தென்னம்மாவே என்றாயோ
- விபுலானந்தர்
* நன்றி - எம்.பௌசர்
Saturday, June 17, 2006
ஒன்றும்.. எல்லாமும்.. அற்றுப்போய் யாதுமாகி!
சகித்தல்களின் எல்லைகளை மீறிய சம்பவங்களுக்காகவும்.., மௌனிக்க மறுத்த கணங்களுக்காகவும்..
1. மனித உரிமையாளன் பற்றி...
எவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானவர்களும் சித்திரவதையாளர்களும் ஒரே
இடத்தில் சமாதானமாகி வாழ முடியும்? ஒடுக்குமுறையால்
பீதியூட்டப்பட்ட ஒரு நாட்டில் வெளிப்படையாகப் பேசுவது பற்றிய பயம்
இன்றளவும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் எவ்வாறு அந்த
நாட்டை வேதனையிலிருந்து மீட்க முடியும்?
பொய்யே வழமையாகி விட்டபோது உண்மையை எப்படித்தான் எட்டுவது?
வரலாற்றின் கைதிகளாக நாம் ஆகாமல் எப்படி கடந்த காலத்தை
உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது? வருங்காலத்திலும் இவை நேரலாம்
என்று கருதாமல் எவ்வாறு அதை முற்றிலும் மறத்தல் முடியும்?
சமாதானத்தை நிச்சயப்படுத்துவதற்காக உண்மைகளை தியாகம்
செய்யத்தான் வேண்டுமா?
கடந்த காலத்தை நாம் மறுத்து விடும்போதும் நிராகரிக்கும் போதும்
உண்மை நம்மிடம் வந்து முணுமுணுக்கும் போதும் கதறும் வேளையிலும்
அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? இராணுவ அத்துமீறல் பற்றிய
பயம் என்றென்றும் இருக்குமானால் மக்கள் நீதியையும் சமத்துவத்தையும்
தேடிச்செல்வது எங்ஙனம் சாத்தியம்?
இந்த நிலைமைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால்
வன்முறை தவிர்க்கப்படக் கூடியதாகவா இருக்கிறது? மிக மோசமாக
வன்முறைக்கு உள்ளாகிய மக்களுக்கு முன்னால், பாதிக்கப்பட்ட
மக்களுக்கு முன்னால் எவ்வளவு தூரம் குற்றவுணர்ச்சி கொண்டவர்களாக
நாம் இருக்கிறோம்?
எல்லாவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய மனத்துயரம் யாதெனில் தேசத்தின்
ஜனநாயக ஸ்திர நிலையை உருவாக்கும் மனோநிலையை அழித்துவிடாமல்
இவ்விஷயங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?
2. கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
நான் ஒரு கைதியாக அவர்களிடம் இல்லையென்று
அவர்கள் சொன்னால்
நீங்கள் அதை நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள் நிச்சயமாக
அவர்கள் அதை
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
என்னை விடுதலை செய்துவிட்டதாக
அவர்கள் சொன்னால்
அதை நீங்கள் நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள் நிச்சயமாக அவர்கள்
தாங்கள் பொய் சொன்னதாக
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
நான் கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டதாக
அவர்கள் சொன்னால்
நீங்கள் அதை நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள்
நான் கட்சிக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன்
என்பதை
ஒப்புக் கொள்வார்கள்.
அவர்களை நம்பவேண்டாம்
நம்பவே வேண்டாம்
அவர்கள் சொல்கிற எதையும்
நம்ப வேண்டாம்
அவர்கள் சத்தியம் செய்கிற எதையும்
அவர்கள்
சுட்டிக் காண்பிக்கிற எதையும்
அவர்களை நம்ப வேண்டாம்
கடைசியாக அந்த நாள் வரும்போது
அவர்கள் உங்களிடம் வந்து
என் உடம்பை
அடையாளம் காட்டச் சொல்லும்படி
கேட்கும்போது
ஒரு குரல் சொல்லும்:
நாங்கள் இவனைக் கொன்றோம்
இந்த அயோக்கியன் செத்துப்போனான்
இவன் செத்தான்
நான் முழுமையாக
முற்று முழுதாக நிச்சயமாக
இறந்துவிட்டேன் என்று அவர்கள்
சொல்லும் போதும்
அவர்களை நம்ப வேண்டாம்
அவர்களை நம்ப வேண்டாம்
அவர்களை நம்ப வேண்டாம்.
மூலம்:- ஆரியல் டோப்மேன் (இலத்தீன் அமெரிக்கக் கவிஞர்)
மொழிபெயர்ப்பு:- யமுனா ராஜேந்திரன்
3. ஆயிஷாவுடன் என் கடைசிநாள்
இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்
காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று
இரவின் வானத்துள் வீசியது
சந்திரன் நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது
சொல்வதற்கு உன்னிடம் நிறைய இருந்தன
ஆனால் மௌனம் நம்மைச் செவிடாக்கியது
வேதனையால் மௌனித்து
ஜெருசலேம் தன் குழந்தைகளைப் புதைப்பதைப்
பார்த்தவாறு நாம் உட்கார்ந்திருந்தோம்
அந்தச் சிறிய புதைகுழியில்
நான் எனது கையை வைத்தேன்
ஒரு கண்ணீர்த் துளியை வழிய விட்டேன்
நாம் இருவரும் கவனித்ததைப் போல்
அது மிகவும் சிறியது
ஊர்க்குருவியின் உடைந்த சிறகுகளையும்
இரத்தம் தோய்ந்த தலையையும்
எனது மென் துப்பட்டியால் போர்த்தினேன்
ஜெருசலேத்தின் துயரத்தின் கரையில்
முஅத்தீனின் அழைப்பு ஒலித்தபோது
அதை நான் மக்காவை நோக்கித்
திருப்பி வைத்தேன்
இப்போது மௌனமாக
அசைவற்றுக் கிடக்கும் ஊர்க்குருவியைப் போல்
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர
உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை
பலஸ்தீன் மீதுள்ள உனது காதல்
ஆகாயத்தைக் கொழுத்தி உயிர்ப்பிக்கும் படிக்கு
வலிக்கும் உன் உடலை
நீ பூமியின் விளிம்பின் மீது வைத்தாய்
இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்
காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று
வானங்களுக்குள் வீசியது
சந்திரன்
நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது.
மூலம்:- அமினா கசக் (ஆங்கிலத்தில் எழுதும் பலஸ்தீனக் கவிஞர், 1960 ல் நியூஸிலாந்தில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்.)
மொழிபெயர்ப்பு:- எம்.ஏ.நுஹ்மான்
4. ஒன்றைப்பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக
நான் ஒன்றைப்பற்றி பேசும்போது
இன்னொன்றைப்பற்றி பேசுவது போல இருக்கிறது
என்கிறாய்.
மெய்தான் -
இந்த நாளில் ஒன்றை விலக்கி இன்னொன்றைக்
காணுவது இயலாத காரியந்தான்.
மன்னாரிலிருந்து வெளிக்கிட்ட தற்கொலைப்
போராளியின் உடல்
ஜெருசலேம் நகரில் வெடித்துச் சிதறுகிறது.
மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப்படுவோனது
அடையாள அட்டை
இஸ்ரேலியப் படையினனிடம் ஒரு
பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றது.
திருகோணமலை முற்றவெளியில் பொலிஸ் தேடும்
சந்தேக நபர்
சிறீ நகரில் இந்தியப்படையினரால்
கொண்டுசெல்லப்படுகிறார்.
பினோஷேயின் சிலேயில் காணாமல் போகின்றவர்கள்
சூரியகந்தவிலும் செம்மணியிலும்
புதையுண்டார்கள்.
கொழும்புச் சோதனைச்சாவடியில்
சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல் நாய்கள் தடுப்பு மறியலில்
கடித்துக் குதறுகின்றன.
வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால்
அனுமதி மறுக்கப்படுகிறான்.
எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது.
எல்லாச் சிறைக்கூடத்துச் சுவர்களும்
ஒரே சூளையின் அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன.
உலகின் எல்லாத் தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்.
துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்துகொண்டிருக்கிறான்.
யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள் வடிக்கப்பட்டன.
சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
காசா நகரத்தின் மீது விழுந்து கொண்டிருக்கிறன.
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பாமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச் சரிக்கின்றன.
கியூபா மீதான் அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமல் தடுக்கிறது.
புலம்பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளக்ஸ்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது.
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது.
காஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது.
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த்தொழிலாளிக்காகப் போராடுகிறான்.
கொலம்பியாவில் விரிகின்ற விடுதலைப்போர்
இலங்கை விவசாயிகளின் விமோசனத்துக்கானது.
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது.
ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன.
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன.
எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.
- சிவசேகரம்
--------------------------------------------------------------
(தேடல்களின் ஒவ்வொரு கட்டத்திலும் - இருந்தும் இல்லாமலும் - துணைநின்ற மைத்துனனுக்கு.....)
1. மனித உரிமையாளன் பற்றி...
எவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானவர்களும் சித்திரவதையாளர்களும் ஒரே
இடத்தில் சமாதானமாகி வாழ முடியும்? ஒடுக்குமுறையால்
பீதியூட்டப்பட்ட ஒரு நாட்டில் வெளிப்படையாகப் பேசுவது பற்றிய பயம்
இன்றளவும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் எவ்வாறு அந்த
நாட்டை வேதனையிலிருந்து மீட்க முடியும்?
பொய்யே வழமையாகி விட்டபோது உண்மையை எப்படித்தான் எட்டுவது?
வரலாற்றின் கைதிகளாக நாம் ஆகாமல் எப்படி கடந்த காலத்தை
உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது? வருங்காலத்திலும் இவை நேரலாம்
என்று கருதாமல் எவ்வாறு அதை முற்றிலும் மறத்தல் முடியும்?
சமாதானத்தை நிச்சயப்படுத்துவதற்காக உண்மைகளை தியாகம்
செய்யத்தான் வேண்டுமா?
கடந்த காலத்தை நாம் மறுத்து விடும்போதும் நிராகரிக்கும் போதும்
உண்மை நம்மிடம் வந்து முணுமுணுக்கும் போதும் கதறும் வேளையிலும்
அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? இராணுவ அத்துமீறல் பற்றிய
பயம் என்றென்றும் இருக்குமானால் மக்கள் நீதியையும் சமத்துவத்தையும்
தேடிச்செல்வது எங்ஙனம் சாத்தியம்?
இந்த நிலைமைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால்
வன்முறை தவிர்க்கப்படக் கூடியதாகவா இருக்கிறது? மிக மோசமாக
வன்முறைக்கு உள்ளாகிய மக்களுக்கு முன்னால், பாதிக்கப்பட்ட
மக்களுக்கு முன்னால் எவ்வளவு தூரம் குற்றவுணர்ச்சி கொண்டவர்களாக
நாம் இருக்கிறோம்?
எல்லாவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய மனத்துயரம் யாதெனில் தேசத்தின்
ஜனநாயக ஸ்திர நிலையை உருவாக்கும் மனோநிலையை அழித்துவிடாமல்
இவ்விஷயங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?
2. கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
நான் ஒரு கைதியாக அவர்களிடம் இல்லையென்று
அவர்கள் சொன்னால்
நீங்கள் அதை நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள் நிச்சயமாக
அவர்கள் அதை
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
என்னை விடுதலை செய்துவிட்டதாக
அவர்கள் சொன்னால்
அதை நீங்கள் நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள் நிச்சயமாக அவர்கள்
தாங்கள் பொய் சொன்னதாக
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
நான் கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டதாக
அவர்கள் சொன்னால்
நீங்கள் அதை நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள்
நான் கட்சிக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன்
என்பதை
ஒப்புக் கொள்வார்கள்.
அவர்களை நம்பவேண்டாம்
நம்பவே வேண்டாம்
அவர்கள் சொல்கிற எதையும்
நம்ப வேண்டாம்
அவர்கள் சத்தியம் செய்கிற எதையும்
அவர்கள்
சுட்டிக் காண்பிக்கிற எதையும்
அவர்களை நம்ப வேண்டாம்
கடைசியாக அந்த நாள் வரும்போது
அவர்கள் உங்களிடம் வந்து
என் உடம்பை
அடையாளம் காட்டச் சொல்லும்படி
கேட்கும்போது
ஒரு குரல் சொல்லும்:
நாங்கள் இவனைக் கொன்றோம்
இந்த அயோக்கியன் செத்துப்போனான்
இவன் செத்தான்
நான் முழுமையாக
முற்று முழுதாக நிச்சயமாக
இறந்துவிட்டேன் என்று அவர்கள்
சொல்லும் போதும்
அவர்களை நம்ப வேண்டாம்
அவர்களை நம்ப வேண்டாம்
அவர்களை நம்ப வேண்டாம்.
மூலம்:- ஆரியல் டோப்மேன் (இலத்தீன் அமெரிக்கக் கவிஞர்)
மொழிபெயர்ப்பு:- யமுனா ராஜேந்திரன்
3. ஆயிஷாவுடன் என் கடைசிநாள்
இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்
காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று
இரவின் வானத்துள் வீசியது
சந்திரன் நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது
சொல்வதற்கு உன்னிடம் நிறைய இருந்தன
ஆனால் மௌனம் நம்மைச் செவிடாக்கியது
வேதனையால் மௌனித்து
ஜெருசலேம் தன் குழந்தைகளைப் புதைப்பதைப்
பார்த்தவாறு நாம் உட்கார்ந்திருந்தோம்
அந்தச் சிறிய புதைகுழியில்
நான் எனது கையை வைத்தேன்
ஒரு கண்ணீர்த் துளியை வழிய விட்டேன்
நாம் இருவரும் கவனித்ததைப் போல்
அது மிகவும் சிறியது
ஊர்க்குருவியின் உடைந்த சிறகுகளையும்
இரத்தம் தோய்ந்த தலையையும்
எனது மென் துப்பட்டியால் போர்த்தினேன்
ஜெருசலேத்தின் துயரத்தின் கரையில்
முஅத்தீனின் அழைப்பு ஒலித்தபோது
அதை நான் மக்காவை நோக்கித்
திருப்பி வைத்தேன்
இப்போது மௌனமாக
அசைவற்றுக் கிடக்கும் ஊர்க்குருவியைப் போல்
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர
உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை
பலஸ்தீன் மீதுள்ள உனது காதல்
ஆகாயத்தைக் கொழுத்தி உயிர்ப்பிக்கும் படிக்கு
வலிக்கும் உன் உடலை
நீ பூமியின் விளிம்பின் மீது வைத்தாய்
இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்
காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று
வானங்களுக்குள் வீசியது
சந்திரன்
நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது.
மூலம்:- அமினா கசக் (ஆங்கிலத்தில் எழுதும் பலஸ்தீனக் கவிஞர், 1960 ல் நியூஸிலாந்தில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்.)
மொழிபெயர்ப்பு:- எம்.ஏ.நுஹ்மான்
4. ஒன்றைப்பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக
நான் ஒன்றைப்பற்றி பேசும்போது
இன்னொன்றைப்பற்றி பேசுவது போல இருக்கிறது
என்கிறாய்.
மெய்தான் -
இந்த நாளில் ஒன்றை விலக்கி இன்னொன்றைக்
காணுவது இயலாத காரியந்தான்.
மன்னாரிலிருந்து வெளிக்கிட்ட தற்கொலைப்
போராளியின் உடல்
ஜெருசலேம் நகரில் வெடித்துச் சிதறுகிறது.
மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப்படுவோனது
அடையாள அட்டை
இஸ்ரேலியப் படையினனிடம் ஒரு
பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றது.
திருகோணமலை முற்றவெளியில் பொலிஸ் தேடும்
சந்தேக நபர்
சிறீ நகரில் இந்தியப்படையினரால்
கொண்டுசெல்லப்படுகிறார்.
பினோஷேயின் சிலேயில் காணாமல் போகின்றவர்கள்
சூரியகந்தவிலும் செம்மணியிலும்
புதையுண்டார்கள்.
கொழும்புச் சோதனைச்சாவடியில்
சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல் நாய்கள் தடுப்பு மறியலில்
கடித்துக் குதறுகின்றன.
வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால்
அனுமதி மறுக்கப்படுகிறான்.
எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது.
எல்லாச் சிறைக்கூடத்துச் சுவர்களும்
ஒரே சூளையின் அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன.
உலகின் எல்லாத் தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்.
துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்துகொண்டிருக்கிறான்.
யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள் வடிக்கப்பட்டன.
சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
காசா நகரத்தின் மீது விழுந்து கொண்டிருக்கிறன.
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பாமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச் சரிக்கின்றன.
கியூபா மீதான் அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமல் தடுக்கிறது.
புலம்பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளக்ஸ்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது.
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது.
காஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது.
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த்தொழிலாளிக்காகப் போராடுகிறான்.
கொலம்பியாவில் விரிகின்ற விடுதலைப்போர்
இலங்கை விவசாயிகளின் விமோசனத்துக்கானது.
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது.
ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன.
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன.
எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.
- சிவசேகரம்
--------------------------------------------------------------
(தேடல்களின் ஒவ்வொரு கட்டத்திலும் - இருந்தும் இல்லாமலும் - துணைநின்ற மைத்துனனுக்கு.....)
Subscribe to:
Posts (Atom)