tag:blogger.com,1999:blog-191465652024-03-14T11:58:29.538-04:00"ரேகுப்தி...!!"Unknownnoreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-19146565.post-79108209909009091302009-02-18T14:36:00.003-05:002009-02-18T14:40:51.862-05:00முகம்வழி நுரைத்தொழுகும் சூனியம்<span style="font-size:85%;"><br />1.<br /><br />பிரியங்களின் மென் ஸ்பரிசங்கள் மீது<br />கரும்போர்வை விரித்து<br />கேள்விகளும் குழப்பங்களும்<br />சயனித்துக் கொண்டிருக்கின்றன<br />புத்தனைப் போல<br />நானோ போதிமரக்கிளையேந்திய சங்கமித்தையாய்<br />அலைந்து கொண்டிருக்கிறேன் ரணங்களைக் காவிக்கொண்டு<br /><br /><br />2.<br /><br />எங்கிருந்தோ வந்து தவறுதலாக அறைக்குள் அடைபட்டுவிட்ட<br />மாட்டிலையானின் ஓல ரீங்காரம்<br />தலையைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும்<br />ஆயிரமாயிரம் வெளின்ற ஈசல்களின் வன்மத்தை<br />நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது<br />நான் விட்டுச்செல்ல விரும்புகிறேன்,<br />என் காலடியின்கீழ் துளிர்விடும் அரும்பொன்றை<br />அதில் துளிக்கும் நேசத்தை<br /><br /><br />3.<br /><br />மாறிக்கொண்டிருக்கும் நிலப்பரப்புகள்<br />வேரோடு பிடுங்கப்பட்டு<br />மாற்றான் தோட்டத்தில் நடப்பட்டதாய்<br />சற்றும் தகவமையா வாழ்வு<br />'இதைவிட வடிவானதென் தோட்டம்<br />இதைவிடப் பரந்தது'<br />வரண்டு வெடித்து வாய்பிளந்த நாடுவிட்டு<br />வலசை வந்த பறவைகளின் ஏக்கம்<br />பனிப்புலத்தை உருக்கி உருவழிக்கும்<br />பைன் மரங்களும் பூச்சாடிகளும்<br />மிகுதயக்கத்துடன் முணுமுணுத்திருக்க<br />கால்கள் சிறகுகளற்ற வெண்ணிலத்து செடிகள்<br />தலையசைத்தெதிர்க்கும் - சந்தர்ப்பங்கள்<br />தங்களைத் தாங்களே நிகழ்த்திக்கொண்ட<br />குளிர்காலப் பகற்பொழுதொன்றில்<br />நான் நானற்றவளாயானேன்<br /><br /></span>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-19146565.post-20327681098623633182009-02-10T13:13:00.004-05:002009-02-10T13:23:02.050-05:00செதுக்கும் சிற்பியும் செதுக்கப்படும் கல்லும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDhkFS_jptPqC1U1YEIYR_L97Z4NaMOcgu50x5Dg-G36Jh2EGCDFHAHDVKyg9LlwrxIAcolWFEtKLresyBwzigicqprGekWyj1vXB5I8tGk-80SCHFjvFLQYDMhHQ66iLp87nIeg/s1600-h/448px_salvador_dali1_1000.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 316px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDhkFS_jptPqC1U1YEIYR_L97Z4NaMOcgu50x5Dg-G36Jh2EGCDFHAHDVKyg9LlwrxIAcolWFEtKLresyBwzigicqprGekWyj1vXB5I8tGk-80SCHFjvFLQYDMhHQ66iLp87nIeg/s320/448px_salvador_dali1_1000.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5301234132912474066" border="0" /></a><br /><span style="font-size:85%;"><br /><span style="font-weight: bold;">*இரு தெரிவுகள் எங்கள் முன்:</span> <span style="font-weight: bold; font-style: italic;"><br />ஒன்றில், பயங்கரவாதியாயிருத்தல் அல்லது</span> <span style="font-weight: bold; font-style: italic;"><br />பயங்கரவாதத்தை எதிர்த்தல்</span><br /><br /><span style="font-weight: bold;">எதிர்மறைத் தத்துவத்தின்படி:</span> <span style="font-weight: bold; font-style: italic;"><br />ஒன்றில் B, அல்லது B அன்று</span> <span style="font-weight: bold; font-style: italic;"><br />**ஒரேநேரத்தில் இரண்டாகவும் இருப்பதும் (சாத்தியமில்லை)</span> <span style="font-weight: bold; font-style: italic;"><br />இரண்டாகவும் அல்லாதிருப்பதும் (சாத்தியமில்லை)</span><br /><br /><span style="font-weight: bold;">அரசியல் கற்றுக்கொடுத்தது:</span> <span style="font-weight: bold; font-style: italic;"><br />பயங்கரவாத எதிர்ப்பென்ற பெயரில்</span> <span style="font-weight: bold; font-style: italic;"><br />மகா பயங்கரவாதியாக.. - அல்லது</span> <span style="font-weight: bold; font-style: italic;"><br />இரண்டையும் எதிர்த்தபடி </span> <span style="font-weight: bold; font-style: italic;">நடுநிலைமையாளனாக..</span><br /><br />குழந்தைகள் உறங்கியபடியிருந்த ஒரு<br />குளிர்கால நடுநிசியில், எனதன்ப<br />நான் கல்லாயிருந்தேன் - நீ<br />என்னைச் செதுக்கும் சிற்பியாயிருந்தாய்<br />காதல் ஒரு செடியென<br />ஆத்மாவின் ஈரமுறிஞ்சி வளர<br />என்மீது<br />கோபுரங்கள் தாதுகோபங்கள் எழுந்தன<br />உடல் துளைத்து பாதைகள் நீண்டன<br />உளியின் ஆங்காரம் பொறுத்திருந்து பொறுத்திருந்து<br />நான் கடவுளானேன்<br />பூதமானேன்<br />மனிதனுமானேன்<br />பயங்கரவாதப் புழுதி மண்டியிருந்த தெரு<br />மனிதர்களை சிற்பங்களாக்கி விட்டிருந்தது<br />நெரிவுண்டு நொறுங்குண்டு<br />எஞ்சியிருந்த குறுணிக்கற்களும்<br />சிதறிக்கொண்டிருந்தவோர் நாளில்<br />நானொரு<br />சிற்பியுருவங்கொண்ட கல்லாய்ச் சமைந்து போனேன்<br />அல்லது, கல்லாலான சிற்பியாய் அலைந்தேன்<br />இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கவுமில்லை<br /><br /><br /><span style="font-style: italic;">*நன்றி: திரு.ஜோர்ஜ்.டபிள்யு.புஷ், திரு.கோத்தபாய ராஜபக்ஷ</span> <span style="font-style: italic;"><br /><br />**தத்துவவியல் இந்நிலையைப் 'போலி' என்கிறது<br /><br />படம்: சல்வடோர் டாலி<br /></span><br /></span>Unknownnoreply@blogger.com16tag:blogger.com,1999:blog-19146565.post-14211229739937589992009-01-05T09:33:00.000-05:002009-01-05T09:34:57.446-05:00Come Gather Round People Wherever You Roamby VK Perera<br /><br />Facebook was one place that disillusioned me of the future chances our island has. It is a place that informed me that peace, for this island, is a journey through a moonless night without a single match in your pocket.<br /><br />I'm sorry. But, I have seen extremist, non-compromising racist assholes. I've seen them on the road. I've seen them in the market place. I have seen them in govt offices. I've seen them in academic chairs. I have seen them disguised, half-disguised and i have seen them naked and proud about it too. I have seen them on Facebook too. I have, in fact, seen that non-compromising, chauvinist, uncritical and -- in that sense --- ignorant psyche going haywire on Facebook. Education doesn't change people, dudes. Computers, internet, exposure doesn't change these people. They are, in their depths, no different from the noisy lumpan elements, for whom, the capture of Killinochchi is heaven with the pearly gates all open.<br /><br />This island has failed to cultivate a multiethnic consciousness. Of course, people entrusted with power have successfully faked a multy-ethnic ethic for their thin political agendas. Surely, the President made his address at the UN in Tamil. Coming on TV, after Kilinochchi was entered, he played a contained sequel of the same -- a couple of lines in Tamil contrived. But, in a 70% Sinhala majority any achievement / development that is groomed in the absence of a naturalized multi-ethnic consciousness would ultimately / inevitably translate into being a victory of but the Sinhala Buddhist. That is how power operates. Where consciousness is absent power does not facilitate the minority or the marginal. Isn't this what the Tamil liberation struggle --- (the basis of the struggle, and not necessarily the means of it) -- was all about , leading upto the 1982 violent break out?<br /><br />One cannot dismiss the pre-LTTE attempts by the TULF that pressed for a recognition of Tamil sovereignty. These attempts, often crushed with state violence, was because a multi-ethnic consciousness was of want in the post-independent Sri Lanka. This was because the Sinhala extrimists sidelined the numerically minor ethnic identities in their policy-making and their act of "nation building".<br /><br />Dudes, the Tamil community in this island lost their socio-cultural richness in this prolonged military crisis. It was, alongside their economic and political "sense", drained away worldwide. And, today, they have come the full circle... Cos, the forces (NOT cosisting of, but) backed by an island's racist mob has entered Kilinochchi. They have entered this town, but the multi-ethnic consciousness is of want in the armoury which the people carry. The celebrations down in Southern Sri Lanka, to me, spelt more the celebration of a "Sinhala victory"...than a "Sri Lankan victory".<br /><br />Perhaps, "Sri Lanka" is just a label we use for convenience. Maybe, it is simply used to fake it all the more. It was ironic how the president made a bilingual speech on TV (well, the speech was in sinhala...but a bit of heavily contrived Tamil was inserted just to show that "multiculturalism rocks") that ended with the national anthem....which is purely and totally monolingual: Sinhala.<br /><br />Dudes who cracked fireworks yesterday, dudes who changed their profile pics into three-legged lion flags when Pooneryn fell, dudes who are now happy and think that the worst is past, dudes who think that the "ethnic issue" is now settled, dudes who now sigh sighs of relief........ do yourselves a favour: marry, if you must, but DO NOT have kids. Cos, this ain't over. This will not be over. Your kids will have to pay for this utter ignorance we display...the utter ignorance which the politicians sponsor, so as to flourish their parochial agendas.<br /><br />Do not be fooled... Pirabaharan or whoever is just an individual. The struggle is a part of a consciousness. And a consciousness does not necessarily require an individual to live and to breed.<br /><br />Teach yourself to be compromising. Teach yourself to be informed. Teach yourself to be critical. Teach yourself and your loved ones the history of this issue. The present. The future to be.Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19146565.post-63338787293614110142008-09-22T13:36:00.008-04:002008-09-22T15:11:10.128-04:00பாம்படக் கிழவியும் காற்றில் கரைந்துபோன ஒரு மூட்டை அன்பும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-lnHPRyNQ4B2YPl_vodwbyRHDRX_N_ZlncxsUsdiLTdUHWKPOr8FB6BPCComD_HbyZedN97fVzS-rBror5oi5ZWu05R_6DAY8Ljnpshm1LxcFn07-8DU3A3DTycByhou-l1RDCg/s1600-h/old_women2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-lnHPRyNQ4B2YPl_vodwbyRHDRX_N_ZlncxsUsdiLTdUHWKPOr8FB6BPCComD_HbyZedN97fVzS-rBror5oi5ZWu05R_6DAY8Ljnpshm1LxcFn07-8DU3A3DTycByhou-l1RDCg/s320/old_women2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5248904126953411122" border="0" /></a><br />1.<br /><br /><span style="font-size:85%;">எல்லாம் வேடிக்கையெனத் தோன்றுகிறதின்று<br />இந்தச் சுவர்களுக்குள் அடைந்துகொண்டிருக்குமென்<br />பெருமூச்சுக்களை<br />கம்பிவலையிட்ட சன்னலின் சிறுதுவாரங்களினூடு<br />பிதுக்கி வெளியேற்றுவதுதான் வாழ்வென்றிருந்திருந்தால்<br />நேசிக்காதிருந்திருப்பேன் எவரையும்<br />படிப்பு, எழுத்து, பேச்சு<br />ஆர்வம், துடிப்பு, தேடல்<br />இந்தப் புள்ளியில் அனைத்தும் தொலையுமென்றிருந்திருந்தால்<br />சிந்திக்கப் பழகாதிருந்திருப்பேன் அன்றைக்கே<br />காத்திருப்பை வேண்டும்<br />சட்டகங்களுக்குள் சிக்கிக்கொண்ட<br />பலிபீட வாழ்வு<br />இனியும் அன்பென்ன அன்பு..<br />கனவிலொரு கழுகு வரைந்து<br />அதன் கால்விரல்களிடை காதலனுப்பி<br />அந்தப்புரத்தில் தவளைக்கும் தேருக்குமாய்<br />காத்திருந்து சுகங்காணத் தெரிந்தவர்களுக்கெல்லாம்<br />முடிவதில்லை,<br />என்னைப்போல<br />கருணை வரண்டு மூர்க்கம் பிடித்த<br />பாம்படக் கிழவியாயிருக்க<br />இருந்துவிட்டுப் போகிறேன்<br />திமிர்க் கிழவியாயில்லையென்றாலும்,<br />அவளது சிலிர்த்தாலும் நிமிராத<br />ஒரு கற்றை சுருள் மசிராகவாவது..<br /><br /><br />2.<br /><br />நடுங்கும் விரல்களுடன்<br />தடித்த சாக்கு ஊசிக்குள்<br />தட்டுத் தடுமாறி நூல்கோர்க்க விழையும்<br />ஒரு கிழவியின் தீவிர கவனத்துடன்<br />கடக்க வேண்டியிருக்கிறது இந்த நாட்களை<br />சாவை சில்லறைகளாய் கணக்கிட்டுக் கொண்டிருக்கும்<br />நாட்டிலிருந்து எந்தச் செய்திகளும் வேண்டாமென<br />என்னைப்போலவே நூல்பின்னிக்கொண்டிருக்கும்<br />இன்னொருத்தி பதற்றத்துடன் கூறுகிறாள்<br />வெகுதொலைவுக் கிராமமொன்றில்<br />பெண்ணுறுப்பைக் கீறியெடுக்க மறுக்கும்<br />பருவமடைந்த ஆபிரிக்கப் பெண்ணின் அலறல்<br />வளையங்களால் நிரப்பப்பட்ட அவள் சகோதரியின் கழுத்து<br />எமக்கென இல்லாமற்போன<br />நாகரிகமொன்றுக்கு சாட்சியமாகிறது<br />யன்னல்களுக்குப் பின்னால் முகங்களைப் புதைத்துக்கொண்டு<br />என்னால் சகோதரிகள் குறித்தும்<br />ஆதங்கப்பட முடிவது வேடிக்கைதான்<br />இன்னும் என்னைத் தேற்றிக்கொள்ளவும்..<br />அந்தக் கிழவி நிமிர்ந்து பார்த்து சிரித்தபடியே<br />செம்மறியாடுகளை ஓட்டிச் செல்கிறாள்<br />பசும்புல்வெளி தேடி<br />அவள் பொக்கை வாய்க்குள் எதிரொலிக்கும்<br />நீரோடை பற்றியதோர் பாடல்<br />எழுதுமேசை மீண்டு,<br />நானும் கிழவியாய்ப் பிறவாததன் விசனத்தை<br />ஒரு கவிதையாக்கி<br />கிழவியாய்ப் பிறந்து குழந்தையாய் சாகவேண்டும்<br />என் (கடவுளர்க்கான) விண்ணப்பங்களுடன்<br />நாட்குறிப்பின் பக்கமொன்றினுள்<br />பத்திரமாய் ஒளித்துக் கொள்கிறேன் மறுபடியும்<br />தலைகீழ் வாழ்வு சிறு எலுமிச்சைச் செடியென<br />துளிர்விடத் தொடங்கும்<br />என் இன்றிராக் கனவுக்குள்<br /><br /><br /></span>Unknownnoreply@blogger.com15tag:blogger.com,1999:blog-19146565.post-39534747777798319022008-09-19T10:43:00.005-04:002008-09-19T12:03:15.400-04:00மரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள்<span style="font-size:85%;"><span style="font-size:100%;"><span style="font-weight: bold;">- றொமிலா தாப்பருடன் ஓர் நேர்காணல்<br /></span></span></span><span style="font-size:85%;"><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">இந்தியாவில் இன்றைய பெண்களின் நிலையானது எப்போதும் மரபுகளின் மிகையான தாக்கத்துக்குட்படுத்தப்பட்டதாகவே பண்புருவமைக்கப்பட்டு வருகிறது. மரபுகளை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள், அவை எவ்விதம் எமது வாழ்வைப் பாதிக்கின்றன? </span><br /><br />பொதுவாக குறித்ததோர் நடத்தையை, மனப்பான்மையை அல்லது ஒழுக்காற்றமைவை வற்புறுத்த வேண்டுகையில், அது காலங்காலமாக தன்னிலை மாறாது புழக்கத்திலிருந்து வந்து இன்று எம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கற்பிதங்கொண்டு, நாம் மிகச் சாதாரணமாக, "இது மரபார்ந்தது" என்கிறோம். இந்தத் தற்புனைவு மிகத் தவறானது. காரணம், மரபுகள் ஒருபோதும் - பிறிதொரு தலைமுறைக்குக் கையளிக்கப்படுகையிலும் கூட வெறுமனவே இயக்கமற்று உறைந்திருப்பதில்லை.<br /><br />ஒரு தலைமுறையிலிருந்து மற்றைய தலைமுறைக்கு மரபின் கூறுகளைக் கையளிக்கும் செயற்பாட்டின்போது அம்மரபு இயல்பாகவே மாற்றத்துக்குள்ளாகிறது. அத்துடன், இன்று எம்மால் மரபெனக் குறிப்பிடப்படுவது சமயங்களில் வெறும் நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். எதுவுமே முற்றுமுழுதாகத் தொன்னலம் வாய்ந்த வடிவத்துடன் நூற்றாண்டுகளைக் கடந்து எம்மை வந்தடைவதில்லை.<br /><br />மரபுகள் மாற்றமுறுவதை இனங்கண்டுகொள்வதைத் தொடர்ந்து ஏன், எப்போது அக்குறித்த மாற்றம் நிகழ்ந்ததென கேள்வியெழுப்பவேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, வேறுபட்ட தொல்பிரதிகளில் பெண்கள் சித்தரிக்கப்படுமாற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை மரபார்ந்த இந்தியப் பெண்மையின் சித்தரிப்பாகக் கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மகாபாரதத்தில் இடம்பெறும் சகுந்தலையின் கதையில், துஷ்யந்தன் சகுந்தலையைக் கன்வ முனிவரின் பர்ணசாலையில் சந்திக்கும்போது அவர்களிருவரும் வெளிப்படையாக உரையாடுவதுடன், எவ்வித சடங்கு சம்பிரதாயங்களையும் வேண்டாத காந்தர்வத் திருமணத்தில் இணைவதற்கு துஷ்யந்தன் அவளுக்கு அழைப்பு விடுக்கிறான். சகுந்தலையோ, தமக்குப் பிறக்கும் மகனை துஷ்யந்தன் தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் சம்மதிக்கிறாள். காந்தர்வ மணத்தினைத் தொடர்ந்து துஷ்யந்தன் பிரிவதோடு, அவளுக்கு மகனும் பிறக்கிறான். சில வருடங்களுக்குப் பின், அவள் தனது மகனுடன் துஷ்யந்தனின் சபைக்குச் சென்று முடிக்குரிய வாரிசாக மகனது உரிமையை எடுத்துக் கேட்கிறாள். துஷ்யந்தனோ அவளது வேண்டுகோளை நிராகரிப்பதுடன் அவளை அவமதிக்கவும் செய்கிறான். ஆனால், பின்னர் ஒரு அசரீரி அது துஷ்யந்தனின் சட்டரீதியான புதல்வனேயென எடுத்துக் கூறுகிறது. அதைக்கேட்ட துஷ்யந்தனும், அந்தப் புதல்வன் தனது சட்டரீதியான முடிக்குரிய வாரிசென நிரூபிப்பதற்கான ஆதாரம் வேண்டியே தான் அவ்வாறு சகுந்தலையைக் அடையாளங் காணாதது போல பாவனை செய்ததாகக் கூறுகிறான்.<br /><br />ஆனால், காளிதாசர் இக்கருத்தினை எடுத்தாளுகையில் சகுந்தலையின் குணவியல்பினை முற்றுமுழுதாக மாற்றியமைத்து விடுகிறார். தற்றுணிவுடனும், முன் நிபந்தனையுடனும் திருமணத்தினுள் புகும் ஒரு தன்முனைப்புடைய பெண்ணின் நிலையிலிருந்து அவள் பணிவமைதியுடைய, இணங்கிப் போகின்ற, பின்வாங்கும் இயல்புடைய இளம் பெண்ணாக மாறுகிறாள். தனக்கான உரிமைகளுக்காகக் கூட வாதிட முடியாதளவு துஷ்யந்தன் மீதான காதலினுள் அவள் மூழ்கிப் போகிறாள். அத்துடன், தனதும் தனது புதல்வனதும் உரிமைகளுக்காக சகுந்தலை வாதாடுவதல்லாமல், அவள் சபையை நீங்கிச் சென்றதும் தனது செயலையெண்ணி மனம் விரக்தியுற்று துஷ்யந்தனே தனது முடிக்குரிய புதல்வனையும் தொலைந்த காதலையும் மீட்டெடுக்க தவித்தலைகிறான்.<br /><br />இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில், இன்று சகுந்தலையின் கதை குறித்து உரையாடும் போதெல்லாம் நாம் காளிதாசரின் விளக்கத்தையே முன்னெடுக்கிறோம். ஆனால் மரபினைப் பற்றி ஒருவர் உரையாடுகையில், மகாபாரதக் கதைவடிவம் பரவலான ரசிகர்களைக் கொண்டதாயிருந்திருக்கும். அக்கதைவடிவத்தினைச் செவிமடுப்போர் அதிகமாயிருந்திருப்பார்கள். காளிதாசரின் கதைவடிவமோ வெகு சிலருக்கே பரிச்சயமாயிருந்திருக்கும்.<br /><br />இன்று, காளிதாசரின் கதைவடிவத்தினை மட்டுமே கருத்திற்கொள்வதன் மூலம் நாம் ஒரு தற்சார்புப் போக்குக்கு எம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வடிவத்தினைத் தெரிவுசெய்து அதனை மரபார்ந்த விம்பமாகக் கட்டமைக்கக் காரணம், பெண்ணை தற்றுணிவுடையவளாகவும், திருமண வேண்டுகோளொன்றை ஏற்றுக்கொள்ள முன்னர் முன் நிபந்தனையொன்றை வற்புறுத்துபவளாகவும், மன்னன் தன்னை அடையாளங்கண்டுகொள்ளத் தவறுகையில் அசாத்தியமான மனவலிமையுடன் தன்பக்க நியாயத்துக்காக எதிர்வழக்காடுபவளாகவும் சித்தரிக்குமொரு கதைவடிவத்தினை விட, அவளைத் தயக்கமும், பணிவும், பின்னிற்கும் மனப்போக்குமுடையவளாகச் சித்தரிக்கும் ஒன்றை முன்னிறுத்துவதானது இன்றைய எமது சமூகத்தினைப் பொறுத்தவரை பயனுடையதும் கூட. தற்காலச் சமூகம் ஒரு மரபுத் தெரிவை மேற்கொள்ளும் முறையானது பெண்கள் குறித்தான சமூகத்தின் நிகழ்காலத்து மனப்பான்மையினால் ஏலவே வரையறுக்கப்பட்டு விடுகிறதெனலாம்.<br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">இராமாயணத்தைப் பொறுத்தவரையிலும் இதனையொத்த கதை/திரிபு வடிவங்கள் உருவாக்கப்பட்டனவென நீங்கள் நினைக்கிறீர்களா? </span><br /><br />இன்று அதிகம் பேசப்படுவதும், புகழ்பெற்றதும், தொலைக்காட்சிகளில் கூட காட்டப்பெறுவதும் வால்மீகியினதும் துளசிதாசரதும் கதைவடிவங்கள்தான். இவற்றினைவிடவும் வேறு பல வடிவங்களிருப்பது மக்களுக்குச் சொல்லப்படவில்லை. அவற்றுள் சில வால்மீகியினதை விடவும் காலத்தினால் முற்பட்டதாக இருந்திருக்கக் கூட வாய்ப்புண்டு.<br /><br />பௌத்த ஜாதக இலக்கியங்களில், இராமாயணத்தின் சில பகுதிகளுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய குறுங்கதைகள் காணப்படுகின்றன. அவ்வாறான கதையொன்று இராமனும் சீதையும் சகோதரர்களெனவும், தமது சிறிய தாயின் கொடுமைகளுக்கஞ்சி இலக்குமணனுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறுகிறது. தசரதனின் மறைவுக்குப் பின்னர், அவர்களது இளைய சகோதரன் இராமனிடம் வந்து அவனை நாட்டுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுக்கிறான். அஞ்ஞாதவாசக் காலம் முடியுமுன் திரும்ப மறுக்கிறான் இராமன். அவர்கள் நாடு திரும்பியதும், சீதை இராமனின் துணைவியாகவும் பட்டத்து இராணியாகவும் ஆகிறாள்.<br /><br />சகோதரனுக்கும் சகோதரிக்குமிடையிலான இந்த உறவு அக்காலத்துச் சமூகம் மீதான கற்பிதங்கள் குறித்து பெருமளவு விளக்கத்தை எடுத்துக் கூறுகிறது. பௌத்த பிரதிகளினடிப்படையில் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தின் தோற்றமானது சகோதரன் - சகோதரி இணைவினது வழிவந்ததாகவே நிறுவப்படுகிறது. இவ்வுறவு நேருண்மைப் பொருளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை. இம்மரபுவழியில் ஏதோவொரு தனித்துவமான அம்சம் காணப்படுவதும், இதற்கும் ஏனையவற்றுக்குமிடையில் சமூக எல்லை வரையறையொன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கலாமென்பதுவுமே இங்கு குறியீட்டுப் பொருளில் எடுத்துக்கூறப்படுகிறது.<br /><br />எனவே, இராமாயணத்தின் பிரபலமான கதைவடிவமொன்று 'இராமாயணப் பரம்பரை' என ஒரு மரபினை முன்னிறுத்துகையில், இதேபோல வேறும் பல கதைவடிவங்கள் நிலவுவதாகவும், இது ஒற்றைப்படையான மரபல்ல, மாறாக வேறுபட்ட மக்கள் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு விதங்களிலும் மாற்றியமைக்கப்பட்ட கதைகளாலான நிலையற்ற மரபெனவும் மக்களுக்குக் கூறவேண்டியது அவசியமாகிறது. இப்படித்தான் பெரும்பாலான காவியங்கள் உருவாக்கப்படுகின்றன. கதைகள் சேகரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றமைக்கப்படுகின்றன. இந்நிலையற்ற, மாறுமியல்புடைய மரபினை வால்மீகியின் கதைவடிவம் குறித்தவொரு நோக்கில் ஒன்றமைக்குமாயின், பௌத்த மற்றும் ஜைனக் கதைவடிவங்கள் அதையே வேறோர் நோக்கில் ஒன்றமைக்கக் கூடும்.<br /><br />இவைதவிர நாட்டுப்புற மற்றும் தென்கிழக்காசியக் கதைவடிவங்களும் நிலவுகின்றமை குறிப்பிடத்தகுந்தது. அவற்றுள் சிலதில், சீதை இராவணனின் மகளாகவும், இன்னும் சிலதில் இராவணனுடன் ஏதோவொரு வகையில் உறவு பூண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். கதை புதிய புதிய இடங்களுக்குப் பயணிக்க, அப்பகுதிகளின் சமூகக் கட்டமைப்பு, குடும்ப மற்றும் இனங்களுக்கிடையிலான உறவுகள், நம்பிக்கைகள், அவற்றின் கட்டமைவு என்பன அப்பகுதி மக்கள் அக்கதையை தமது ஒழுக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்குமேற்ப தமக்கேயான முறையில் மீளுருவாக்கம் செய்வதில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.<br /><br />இதுதான் இராமாயணத்தின் மிகவும் ஆர்வமூட்டும் பகுதி. கருத்தமர்வுகளின்போது அறிவுலகினர் பெரும்பாலும் பிரதியின் ஒருங்கிணைவிலும் வேறுபட்ட கதைவடிவங்களுக்கிடையே ஒத்த தன்மையைக் காண்பதிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். நோக்கின், இந்த ஒத்திசைவின்மையே அதிகம் சிக்கலானதும், பிரதிகளை மேலும் செறிவூட்டக்கூடியதும், இன்னும் ஆராயப்படவேண்டியதுமாகும். உதாரணமாக, ஜைனக் கதைவடிவமானது முக்கியமானதோர் மாற்று வடிவமாகும். பிராகிருதத்தில் எழுதப்பட்ட இது, Paumacharyam என அழைக்கப்படுகிறது. வால்மீகியின் வடிவத்தில் மேலோங்கிக் காணப்படும் பிராமணீய நோக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நோக்கினை இது முன்னிறுத்துகிறது. உண்மையில் வால்மீகியின் மூலக் கதைவடிவத்தின் தகவல்கள் குறித்து நாம் எதுவித முடிவுகளுக்கும் வர முடியாமலுமுள்ளது, காரணம் இன்று எம்மிடமிருக்கும் வால்மீகியின் கதைவடிவமானது ஆரம்பத்தில் உலகியல் சார்ந்ததாகவிருந்து பின்னர் காலப்போக்கில் பிராமணர்களால் புனிதப்படுத்தப்பட்ட ஓர் பிரதியேயாகும்.<br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">ஜைனக் கதைவடிவத்து சீதை வால்மீகி வடிவத்துடன் ஒப்பிடப்படுகையில் எவ்வகையில் வேறுபடுகிறாள்?</span><br /><br />ஜைனக் கதைவடிவத்து சீதை மிகவும் தற்றுணிவும் உறுதியுமுடையவள். இராவணன் சீதையைக் கடத்திச் செல்வது நிகழ்ந்தாலும் அதுவே மைய நிகழ்வல்ல. இராமனும் இலக்குமணனும் பல அரச சபைகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் வெறுமனவே காடுகளினூடு பயணிக்கவில்லை. எனவே, கடத்தலானது பல நிகழ்வுகளைக் கொண்ட கதையின் ஒரு பகுதி மாத்திரமே. கதையின் முழு குவிமையமுமே அதுவல்ல.<br /><br />அடுத்தது, சீதைக்கும் இராவணனுக்குமான உறவும் வேடுபடுகிறது. இராவணன் ஒரு அரக்கனாகச் சித்தரிக்கப்படவில்லை. அவன் துறவறம் பூண்டு அதன் விளைவாக பல வரங்களையும் சக்திகளையும் பெற்றுக்கொண்ட ஒரு ஜைனன்/ சமணன். தனிப்பட்டளவில் அவன் சீதையின் பால் ஈர்க்கப்படுகிறானேயொழிய அவ்வுறவில் எவ்வித வக்கிரம் நிறை காமவுணர்வோ, கொடூரமோ காணப்படவில்லை. தனது காதலுக்கு சீதையிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கும் அவன், அவள் அவ்வாறு நடந்துகொள்ளாததால் ஏமாற்றமடைகிறான். சீதை தான் அஞ்சி நடுங்கத்தக்க ஒரு அரக்கனை எதிர்கொள்ளவில்லை. மாறாக, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முகங்கொடுப்பதைப்போலவே அவள் நடந்துகொள்கிறாள். அவனுக்குச் சாதகமாகப் பதிலளிப்பதற்கும் மறுப்பதற்குமான உரிமை அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.<br /><br />இறுதியில், இராமனும் தசரதனும் சமண முனிவர்களாகின்றனர். இராவணனைக் கொல்வது இலக்குமணனேயொழிய இராமனல்ல. ஒரு உயிரைப் பறித்ததற்குப் பொறுப்பேற்க வேண்டியிராத இராமன் தொடர்ந்தும் கறைபடியாதவனாயிருக்கிறான். வால்மீகி இராமாயணத்தைப் போலல்லாது, சத்திரிய அறத்துக்கு மாறாக, சமண அறமே இங்கு இறுதியில் வெல்கிறது. இக்கதைவடிவத்தில் சீதை முக்கிய கதாபாத்திரமாகவுமில்லை, அதேவேளை முக்கியமற்றவளாகவுமில்லை.<br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">இதுவிடயத்தில் துளசிதாசரின் இராமாயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?</span><br /><br />பெண்களைக் கருத்திற்கொள்கையில், துளசிதாசரின் இராமாயண வடிவமானது மிகவும் மனவழுத்தத்துக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது. பெண்களும் சூத்திரரும் அடிக்கப்பட/ வதைக்கப்பட வேண்டியவர்கள் என்ற புகழ்பெற்ற அவரது வரிகளுக்குமப்பால் பெண்களின் இயற்கை குறித்து விசனத்துக்குட்படுத்தும் வேறும் பல விமர்சனங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. துளசிதாசரின் சீதை பலவீனமானவளாக, பின்னிற்பவளாகக் காணப்படும் அதேவேளை புனிதத்துவத்தை மேற்கொணரும் முயற்சியில் அவரது கதாபாத்திரங்கள் பெருமளவு இறுகிய மரபார்ந்தவையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வால்மீகியின் கதைவடிவத்திலிருந்தான மிக முக்கிய வேறுபாடெனப்படுவது, பொய்த்தோற்றங்களில்/ மாயையில் ஏமாறும், மருட்சி மிக்கவளாக சீதை சித்தரிக்கப்படும் விதமேயாகும். <br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">ஒரு கதை அதன் காவிய வடிவத்திலிருந்து தெய்வத்தன்மையால் ஆக்கிரமிக்கப்பட்டதாக மாற்றமுறுவது குறித்து..?</span><br /><br />அயோத்தி மற்றும் இலங்கை பற்றிய ஏராளமான கதைகள் சுற்றிலும் வழக்கிலிருந்து வருகின்றன. அவையனைத்துமிணைந்தே இராம கதையாக உருவெடுத்துள்ளன. ஏறத்தாழ கிறிஸ்து வருடத்துக்கு முந்தைய, வெகு நெருங்கிய நூற்றாண்டுகளில் (வீர)நாயகன் கடவுளின் திருவவதாரமாக உருவகிக்கப்படும் முதலாவது மாற்றம் இடம்பெற்றது. இவ்வாறே இந்தியக் காவியங்கள் கிரேக்க காவியங்களிலிருந்து வேறுபடவாரம்பித்தன. கிரேக்க காவியங்களில் கடவுளர் வீரர்களுடன் சேர்ந்து பங்குபற்றினர்; இந்தியக் காவியங்களிலோ - அவை மீளெழுதப்பட்ட காலகட்டத்தில், நாயகர்கள் கடவுளரின் மறு அவதாரமாக்கப்பட்டனர்.<br /><br />இவ்வாறாக, இந்தியக் காவியங்கள் நிலைமாற்றத்துக்குள்ளாகின. சபைகளிலும், விழாக்களிலும் எடுத்துக்கூறப்பட்ட வீர காவியங்கள் பிரதிகள் மீளெழுதப்பட்டு நாயகர்கள் புனிதமான கதாபாத்திரங்களாக மாற்றமடைந்ததை இயல்பென ஏற்றுக்கொண்டன. இருந்தும், புராதன கதைவடிவத்தின் சில எச்சங்கள் நவீன பிரதிகளிலும் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, வாலியை இராமன் முதுகுப்புறமாக அம்பெய்து வீழ்த்துவது, பிந்தைய காலங்களில் இழிவானதாகக் கருதப்பட்டாலும் (18ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஓவியங்களில் இராமன் வாலியின் மார்பில் அம்பெய்து வீழ்த்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளமை), யுத்தத்தின் விதிகள் வேறுவிதமாக வரையறுக்கப்பட்டிருந்திருக்கக்கூடிய ஆரம்ப காலங்களில் அவ்வாறாக கருதப்படாமலுமிருந்திருக்கலாம்.<br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">பெண்களின் கற்பனையில் சீதை பற்றிய உருவகம் ஏற்படுத்தும் தொடர்ச்சியான பாதிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?</span><br /><br />சீதை மிக சுவாரசியமான ஒரு உருவகம். அவளொரு சராசரி சத்திரிய பெண்ணல்ல. அவளது பிறப்பு - நிலத்தை உழுகையில் ஜனகனால் கண்டறியப்பட்டதால் - அசாதாரணமானது. அவள் சத்திரியப் பெண்ணுக்குரிய விழுமியங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்துகொள்வாளா இல்லையா என எவராலும் உறுதிகொள்ள முடியாதிருந்த நிலையில், இறுதியில், அத்தனை பரீட்சிப்புகள் இன்னல்களையும் கடந்து, மீளவும் பூமியன்னையை அடையுமிடத்து, அவளதேயான விதத்தில் அவள் வெல்கிறாளென்றே கூறவேண்டும். 'உன்னால் நானடைந்தது போதும்' என்ற தோரணையுடன் அவள் தனது தோற்றுவாயை நாடித் திரும்புகிறாள்.<br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">ஏதோவொரு வித எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக தீக்குளித்து மரணிக்கும் எல்லாப் பெண்களையும் போலவா?</span><br /><br />சீதையைக் கருத்திற்கொள்ளுமிடத்து, இந்நிகழ்வானது வெறும் தற்கொலை அல்லது ஏதேனுமொன்றை நிறுவுவதென்பதை விடவும் சற்று மேலானது. 'நான் மாறுபட்டவள்; மண்ணிலிருந்து பிறந்தவள்; இவையனைத்தினூடாகவும் நான் வாழ்ந்திருந்து என்னை நிரூபித்து விட்டேன், இப்போது எனதேயான, எனக்குரித்தான இடத்துக்கு நான் திரும்பிச் செல்கிறேன்; நான் உனக்குச் சொந்தமானவளல்ல' என்பதான எழுதப்படாத, பேசப்படாத கூற்றை அது எடுத்துரைக்கிறது. ஆழுணர்வார்ந்ததாயினும், இது பரந்த கவனிப்புக்குரியதொன்றெனவே நான் நினைக்கிறேன்.<br /><br />சீதையின் பிரபல்யம், ஒரு வகையில், வழக்கத்திலுள்ள வேறும் பல பெண் உருவகங்களையொத்த - முன்னுதாரணமான 'பெண்'ணென்ற அவளது விம்பத்தின் வழிவந்ததாகவிருப்பினும், இன்னுமொரு பார்வையில் - ஆழ்நோக்கில் - தான் எதிர்கொண்ட துன்பங்களிலிருந்து தனக்கேயான தனித்துவமான வகையில் விடுபடலைக் கண்டடைந்தவளாக அவளைக் காண்கின்றமையே பெண்கள் மத்தியில் அவள் பிரபலமடைந்தமைக்கு காரணமெனலாம். இந்தவகையில் சீதை ஒரு compensatory model ஆகவும் வெளிப்படுகிறாள்.<br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">அக்னிச் சோதனையின் குறிப்பிடத்தக்க அம்சம் எது?</span><br /><br />அது பல குறியீட்டமைவுகளைக் கொண்டது. நெருப்பு ஒரு தூய்மையாக்கி; சடங்குகள் அதனைச் சுற்றியே இடம்பெறுகின்றன. மாசடைந்து கொண்டிருக்கும் இறந்த உடல் நெருப்பிலிடப்படுவதால் தூய்மையாகிறது; ஆன்மா விடுதலையடைகிறது. அதேபோல, மிகத் தூய்மையான ஒரு பெண் மட்டுமே நெருப்பிலிருந்து தப்பிப் பிழைப்பாள். சீதையைப் பொறுத்தவரை அது அவளது கற்பினைப் பரிசோதிக்கும் முயற்சி. புராதன இந்திய சமூகங்களில் நீதியை நிலைநிறுத்தும் - குற்றத்தை அல்லது நிரபராதியென்பதை நிரூபிக்கும் - ஒரு சோதனையாக அக்னிப் பரிசோதனைக்கு முக்கிய இடமிருந்து வந்தது. சில பின்தங்கிய பிரதேசங்களில் அது இன்னமும் புழக்கத்திலிருந்து வருகிறது.<br /><br />பிற்காலக் கருத்துருவாக்கமான 'சதி'யுடன் இந்த அக்னிப் பரிசோதனை ஏதோவொரு விதத்தில் உறவுகொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன். கணவரின் சிதையில் தானும் வீழ்வதன் வாயிலாக அவருக்குத் தான் நேர்மையாகவிருப்பதை நிரூபிக்க/ எடுத்துக் காட்ட முயல்கிறாளா அந்தப் பெண்? ஒரு பெண்ணின் கற்பினைப் பரிசோதிக்கும் வழிமுறையாக தீக்குளிக்கும் வழக்கத்தினை எடுத்துக்கொள்வது வேதகாலத்துப் பிரதிகளில் இடம்பெற்றிருக்கவில்லை.<br /><br />ஆர்வமூட்டும் வகையில், முதலாயிரமாண்டுகளின் இறுதிப் பகுதியில் தோன்றிய இராமாயணக் கதைவடிவங்களில் அக்னிப் பரிசோதனையானது ஒரு மாறுபட்ட வடிவமெடுப்பதுடன், இதன் தாக்கம் துளசிதாசரின் இராமாயணத்திலும் பிரதிபலிப்பதைக் காணலாம். சீதை கடத்தப்படுவதற்கு முன்பு, இப்போது கடவுளின் திருவவதாரமாக்கப்பட்ட இராமன் அவளை ஒரு அக்னிச் சடங்குக்கு உள்ளாக்குகிறான். அதன் வாயிலாக உண்மையான சீதை பாதுகாப்பாக இருக்கும் அதேவேளை போலி சீதையே உலகில் தொடர்ந்திருந்து கடத்தல் தொடக்கம் அனைத்து இன்னல்களுக்கும் ஆளாகிறாள். இராமன் இராவணனை வென்றதன் பிற்பாடு, மீளவும் உண்மையான சீதை உலகுக்குத் திரும்புமுகமாகவே அக்னிச் சோதனை இடம்பெறுகிறது.<br /><br />வெளிப்படையான விளக்கங்களுக்குமப்பால் இது அத்வைத தத்துவத்தையும், 'மாயை' என்ற கருத்துருவாக்கத்தையும் சார்ந்து இயங்குவது குறிப்பிடத்தக்கது. கதையில் இடம்பெற்றிருக்கும் இம்மாற்றம், சீதை அக்னிச் சோதனைக்கு ஆளாக வேண்டி வந்ததை கேள்வியுடன் எதிர்கொள்ள வைக்கிறது. இந்த மாற்றத்தின் நோக்கம் - 'சதி', புறவய நோக்கில் இதனையொத்ததாக இருந்தாலும், உண்மையில் பலியிடும் வழக்கமேயொழிய ஒரு சோதனையல்ல என்பதை எடுத்துக்காட்டவும், இரண்டுக்குமிடையே குழப்பங்கள் ஏற்படாமல் தடுப்பதற்குமா? அல்லது, சக்தி வழிபாட்டு முறையின் கீழ் பெண் தெய்வங்கள் புகழ்பெற்று வருகையில், சீதையும் அவ்வாறு - பெண் தெய்வமாகக் - கருதப்பட்டு விடக்கூடாதென்ற காரணத்தாலா?<br /><br /><br /><br /><span style="font-weight: bold;">நன்றி:</span><br /><span style="font-style: italic;">Traditions versus Misconceptions: Romila Thapar</span><br /><span style="font-style: italic;">Published by: Social Scientists' Association, 1997</span><br /><span style="font-style: italic;">Reproduced from Manushi, Sep-Dec 1987</span><br /><span style="font-style: italic;">(மொழியாக்கம்: நிவேதா)</span><br /></span>Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-19146565.post-70098913422206716332008-06-20T10:01:00.013-04:002008-06-20T13:15:19.921-04:00பிரதிகளை பெண்ணாய் மீள்வாசித்தல்<span style="font-size:85%;"><strong><span style="font-size:100%;color:#000000;"><span style="color:#663333;">-Susan Schibanoff ன் 'Taking the gold out of Egypt' ஐ முன்வைத்து</span><br /></span></strong><br /></span><div><span style="font-size:85%;"><em><strong></strong></em></span></div><div><span style="font-size:85%;"><em><strong>The only phenomenon which, in all parts of the world, seems to be linked with the appearance of writing... is the establishment of hierarchical societies, consisting of masters and slaves and where one part of the population is made to work for the other part... And when we consider the first uses to which writing was put, it would seem clear that it was connected first and foremost with power... exercised by some men over other men and over worldly possessions.<br /></strong>(Claude Levi-Strauss)</em><br /><br />அறிவும் கல்வியும் இன்றும் ஓரளவு வசதியானவர்களைத்தான் சார்ந்திருக்கின்றன என்றார் அண்மையில் சந்தித்த எழுத்தாளரொருவர். வாசிக்கவும் எழுதவும் தொடங்கிய ஆரம்பகாலங்களில் நல்ல புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தானடைந்த சிரமங்களை நினைவுகூரக் கேட்க முடிந்தது இன்னுமொருவரிடமிருந்து. அறிவை உடனுக்குடன் புதுப்பிக்க நூலகங்களை நம்பிப் பயனில்லை. புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளின் விலையோ ஒரு சராசரி வாசகரின் இயலுமையைக் கடந்து எட்டாத் தொலைவில். இந்தியாவிலிருந்து வரும் தமிழ்ப் பிரதிகளுக்கே இந்நிலையெனில் ஆங்கில/ வெளிநாடுகளிலிருந்துவரும் புத்தகங்களைப்பற்றிக் கூறவேண்டியதில்லை.<br /><br />அறிவும் கலையும் எந்தளவு செல்வத்தில் தங்கியிருக்கின்றனவோ அதேபோல அல்லது அதைவிடவும் இறுக்கமாக எழுத்தும் வாசிப்பும் அதிகாரத்தோடு பிணைந்து நிற்கின்றன. படைப்பென்பது செல்வமும் அதிகாரமும் ஒன்றையொன்று இடைவெட்டிக் கொள்ளும் புள்ளியாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. பெண்ணியப் பிரதிகளும் விளிம்புநிலைப்படுத்தப்பட்டவர்களின் இலக்கிய எழுச்சியும் இந்த இறுகிய பனிப்பாளத்தைத் தகர்த்தெறிய முயற்சிக்கினும், மரபுகளின் பெயராலும், ஏலவே நிறுவப்பட்ட செவ்விலக்கிய மேற்கோள்களின் துணையுடனும் இவ்வாதிக்கமானது தொடர்ந்தும் வன்மையாக நிலைநிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.<br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr7eKs8KnbTn41psxcoiw6A4Tlux20Q_NY_F-uYFeniUdZ3MavFQwEKCq14eTr7dyowurv8mHheq2ZwJaueVnbvuPs4SNg-Zt4aKTFtyNkJ9KsjooL_G-Ei1icrGIGy2MNREQW_A/s1600-h/book.jpg"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5213972157213051922" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr7eKs8KnbTn41psxcoiw6A4Tlux20Q_NY_F-uYFeniUdZ3MavFQwEKCq14eTr7dyowurv8mHheq2ZwJaueVnbvuPs4SNg-Zt4aKTFtyNkJ9KsjooL_G-Ei1icrGIGy2MNREQW_A/s200/book.jpg" border="0" /></span></a><span style="font-size:85%;"> Susan Schibanoff தனது 'Taking the gold out of Egypt' எனும் கட்டுரையில் - கட்டுக்களையும் மீறித் தெறிக்கும் தீவிரமான பெண் வெறுப்புடன் கூடிய - பேரிலக்கியங்களையும் பெரும் படைப்பாளிகளையும் ஒரு பெண்ணாய் எதிர்கொள்ள நேர்வதன் துன்பியல் அனுபவத்தை எடுத்துக் கூறுகிறார். மத்தியகாலப் படைப்புகளில் மேலோங்கிக் காணப்படும் misogyny (பெண் வெறுப்பு?) பெண் வாசகர்களை மிகவும் மனவுளைச்சலுக்காளாக்கக் கூடியது. ஆண்களை மையப்படுத்திய படைப்பொன்றில் பெண்களுக்கெதிரான/ பெண்களை இழிநிலைக்குட்படுத்திய வாசகங்கள் இடம்பெறுவது ஆண் வாசகர்களைப் பொறுத்தவரை ஒருவித உற்சாகப்படுத்தலாகவும், நிறைவேறாமற் போன காதலொன்றின் வேதனைப் பிடியிலிருந்து விடுவிக்கும் ஆறுதலாகவும் அமையும் அதேவேளை அப்படைப்பு ஒரு பெண்ணின் மனதில் நேரெதிர் உணர்வுகளை ஏற்றிச் செல்கிறது. பதினான்கு மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் படைப்பாளிகளின் முக்கிய இலக்கு ஆண்களாகவேயிருந்தமையினால் பெண்களுக்கெதிரான வாசகங்கள் மிகச் சாதாரணமாக இடம்பெற்றாலும், சிலர் அவற்றுக்காக பெண் வாசகர்களிடம் நாடகப் பாங்கில் மன்னிப்புக் கேட்கும் வழமையுமிருந்தது. அவ்வாறு மன்னிப்புக் கேட்பவர்களும் அச்சொற்றொடர்கள் தங்களால் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல, மாறாக மாமேதைகளாலும் புகழ்பெற்ற எழுத்தாளர்களாலும் காலங்காலமாக வழிமொழியப்பட்டு வந்தவையென்பதையும் மறக்காமல் குறிப்பிட்டு, ஆகவே அத்தகைய மாமனிதர்களால் எடுத்துரைக்கப்பட்ட வாசகங்கள் ஒருபோதும் பொய்த்துப் போவதில்லை <em>('He could not believe that so true a man and noble a philosopher as 'Socrates' should write otherwise than truth'</em>); அழிந்துவிடுவதுமில்லை; விரும்பியோ விரும்பாமலோ தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டவாறேயிருக்குமெனவும் மறைமுகமாக நிறுவத்தலைப்பட்டு விடுகின்றனர். Chaucer, Jean de Meun போன்ற அனைவரும் இதில் உள்ளடக்கம்.<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>Implicit in this self-excuse by source is the threat that the written texts of anti-feminism are 'fixed': they are autonomous entities that may be neither altered nor discontinued. The female reader is to understand, then, that when writers must choose between pleasing her and venerating the written traditions of anti-feminism created by wise men of the past and noble ancient philosophers, patriarchy has first claim on their loyalty.<br /></strong>(pg223. - Feminist Readings in Middle English Literature: Edited by Ruth Evans and Lesley Johnson)</em><br /><br />இலக்கியவுலகில் நிறுவப்பட்டுவிட்டதோர் பாரம்பரியத்தை எடுத்தாளுகின்றன இவ்வரிகள். மேலைத்தேய இலக்கியங்களில் மட்டுமல்ல, இங்கும் இத்தகைய ஆனானப்பட்ட பாரம்பரியங்கள் - பாரதியும் திருவள்ளுவரும் கூறுவது வேதவாக்கியமென்பதாய் - இன்றும் நடைமுறையிலுண்டு. இப்பாரம்பரியங்கள் ஒரு பெண் வாசகர் மீது அதீதமான அழுத்தத்தைப் பிரயோகித்து அவளைப் பலவீனமானவளாக்குகின்றன. மேலும், அவள் ஒரு பெண்ணாகவல்லாது ஆணாக அப்பிரதியை அணுகவும் நிர்ப்பந்திக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் தான் ஒரு பெண்ணாய் படைப்பொன்றை எதிர்கொள்ளவேண்டியதன் தேவையும், அதன் அசாத்தியமும் புலப்படத் தொடங்குகிறது. பழைய பிரதிகளைக் கலைத்துப்போட்டு அவற்றை மீள்வாசிப்புக்குட்படுத்தவேண்டியது இவ்விடத்தே அவசியமாகின்றது. இந்த மீள்வாசிப்பென்பது என்ன, அதை எவ்வாறு மேற்கொள்வதென்பது ஒரு முக்கியமான, ஆராயப்படவேண்டிய விடயம்.<br /><br />Susan Schibanoff மேற்கொள்ளும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அவதானிப்பு, எழுத்தறிவுக்கும் பெண்களின் சுயசார்புக்குமிடையிலான முரண்பாடு. மேலோட்டமான நோக்கில் எழுத்தறிவு அல்லது கல்வியறிவு ஒரு பெண்ணின் தன்னம்பிக்கைக்கும் தற்றுணிவுக்கும் வழிவகுக்கிறதென்ற முடிவை வந்தடைகிறோம். ஆனால், யதார்த்தமும் சான்றுகளும் இதற்கு நேர்மாறானதாகவே இருந்து வந்திருக்கின்றன. எழுத்தறிவற்ற பெண்களை விடவும் அதிக பிரதிகளை கற்றறிந்த பெண் அன்றாட வாழ்வில் பின்னிற்கவே செய்கிறாள். இதற்கான காரணத்தைத் தேடும் Susan Schibanoff மறுமலர்ச்சிக் காலத்தின் பாரிய சமூக மாற்றங்களினிடத்து அதைக் கண்டடைகிறார். தீவிர பழமைவாதிகள் கூட பெண் கல்வியைத் தீவிரமாக ஆதரித்த காலமது. எழுத்தறிவு பெறுவதற்கும், கற்பதற்கும் அதிக வாய்ப்பும் பெண்களுக்குக் கிடைத்து வந்தது. ஆனால், தமது எழுத்தறிவினால் முதன்மைப் பயன்பெறுபவர்கள் பெண்கள்தானா என்ற கேள்வியுடன் இந்த முன்னேற்றத்தையும் நாம் மீள்வாசிப்புச் செய்யவேண்டும். பெண்களின் அதிகரித்த எழுத்தறிவு வீதமானது இன்னுமின்னும் அதிகமாக ஆண்வயப்பட்ட பிரதிகளுக்கு பெண்களை நெருக்கமாக்கியதேயொழிய (மாற்றுப் பிரதிகள் அக்காலத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்பட்டிருந்தன) சுயசிந்தனையையும் தேடுதலையும் வளர்ப்பதற்கு தவறிவிட்டதென்றே கூறவேண்டும். படைப்புகள் பொதுவாக ஆண்களின் பார்வையில் நாணம், பணிவு, 'கற்பு'டன் கூடிய இலட்சியப் பெண்ணொருத்தியை வடிப்பதிலேயே குறியாயிருந்தன. மறுமலர்ச்சிக் காலத்து கல்விசார் எழுத்தாளர்களும் பெண்கள் வாசிக்கப் பழகுவதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தினர், அறிவதற்காகவல்ல, நல்ல பெண்களாவதற்காக. அந்தளவு வாசிப்பு பெண்களை அறிவுப்பாதையிலல்லாது, 'சிறந்த' பெண்களாவதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. அதேவேளை, எழுத்தறிவானது தொடர்ந்தும் அதிகாரஞ்செலுத்தும், பலவீனப்படுத்தும் வினைத்திறனான உத்தியாக தன்னை நிலைநாட்டிக் கொண்டிருந்தது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுப் பெண்களின் சமூக நிலையானது நலிவடைந்தும், அவர்களது சமூகப் பங்களிப்பு மிகக் குறுகியும் போனமைக்கு அதிகரித்த எழுத்தறிவு வீதமும் ஒரு காரணமாகலாம். இன்னுமொரு விதத்தில் இந்த எழுத்தறிவு சில பெண்களுக்கு பெண்ணிய எதிர்ப்புப் பிரதிகளை மீள்வாசிப்புச் செய்யவும், அதனூடாகத் தமதான வரலாற்றைக் கட்டியெழுப்பவும் உதவிபுரிந்திருந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் அது மிகக் குறைவே.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw9UKF-5Xy2TxiBaiOTNe94dYmhhB0dKnLyn2W2wIjVAjBHTXw8N32iejhtWIQmfD6F6qHhNhMF2A08j2-9BlSpvn0jD0mqSuQHzLnCMpgUMjdTGZjFbJJYfqEVUbTNSZUPHFncQ/s1600-h/Christine_de_Pisan_-_cathedra.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5213981602995568402" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 172px; CURSOR: hand; HEIGHT: 230px" height="191" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw9UKF-5Xy2TxiBaiOTNe94dYmhhB0dKnLyn2W2wIjVAjBHTXw8N32iejhtWIQmfD6F6qHhNhMF2A08j2-9BlSpvn0jD0mqSuQHzLnCMpgUMjdTGZjFbJJYfqEVUbTNSZUPHFncQ/s200/Christine_de_Pisan_-_cathedra.jpg" width="177" border="0" /></a> ஒரு பெண்ணாய் வாசிப்பது/ பிரதியொன்றை அணுகுவதென்பது வெறுமனவே பிரதியும் வாசிப்பும் சார்ந்தது மட்டுமல்ல. Susan Schibanoff கூறுவது போல, சக பெண்களுடன் உரையாடுவதும், அன்றாடப் பெண்களிடமிருந்து தான் கேட்டதற்கும், பெண்களைப் பற்றி ஆண்கள் எழுதி வைத்திருப்பதற்குமிடையிலான முரண்பாடுகளை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் புள்ளியிலிருந்துதான் பெண்ணிய வாசிப்பு ஆரம்பமாகிறது. இதுதான் முறையான மீள்வாசிப்பும். விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள், கலந்துரையாடற் பட்டறைகள் போன்ற வாய்வழிப் பெண்ணிய மரபு இந்த மீள்வாசிப்பில்/ பெண்ணாய் வாசிப்பதில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.<br /><br /><em><strong></strong></em></span></div><div><span style="font-size:85%;"><em><strong>Christine de Pisan did likewise and found it just hard to reconcile what she heard from them with the written opinions of male authorities on women's base and immoral character. If one of the mainsprings which motivated Christine's rereadings was the conflict between what she heard from women and what she read by men, then perhaps it is well for us to remember that modern feminist oral traditions have a vital role to play in the otherwise intellectual and literate act of rereading, reading as women.</strong></em><br /><br />முன்கூட்டியே நிறுவப்பட்டுவிட்ட ஆண்மையவாத படைப்புகளை மீள்வாசிப்புச் செய்வதனூடாக எமக்கான வரலாற்றைக் கண்டடைவதன் மூலமே பெண்ணிய வாசிப்புச் சாத்தியமாகின்றதெனலாம்.<br /><br /><br /></span><span style="font-size:78%;">(Susan Schibanoff இன் 'Taking the gold out of Egypt' கட்டுரையைத் தழுவி.. நீண்ட கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்கள் மட்டும். நன்றி: <em>Feminist Readings in Middle English Literature: Edited by Ruth Evans and Lesley Johnson</em> )</span></div><span style="font-size:78%;">Image: </span><a href="http://en.wikipedia.org/wiki/Image:Christine_de_Pisan_-_cathedra.jpg"><span style="font-size:78%;">Christine de Pisan lecturing to a group of men</span></a>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19146565.post-456620323782642272008-06-12T08:52:00.002-04:002008-06-12T09:09:58.484-04:00மனப்பாழ்வெளியினூடொரு தேசாந்திரியாய்..!!<span style="font-size:85%;"><strong>- 'சஞ்சாரம்' படமும் சில குறிப்புகளும்<br /></strong><br /><br />ரஷ்யக் கலாசார மையத்தில் Women and Media Collective னரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு திரைப்பட விழா.. ஓரினப் பாலுறவாளர்கள் பற்றிய மலையாளத் திரைப்படம் 'சஞ்சாரம்'. Fire போன்ற இன்னபிற படங்களைப்போல அதிகம் வர்த்தகமயப்படுத்தப்படாத படம். மிகச் சுருக்கமாகக் கதையைச் சொல்வதானால்:<br /><br />காடு, நீர்வீழ்ச்சி, ஆறுகளுடன் கூடிய ஒரு அழகான கிராமம். கிரண், டிலைலா - சிறுவயதிலிருந்தே மிக நெருங்கிய தோழிகள். டிலைலா தந்தையை இழந்தவள், அம்மாவுடனும், அம்மம்மாவுடனும் வாழ்ந்து வருகிறாள். கிரண் ஒரு கவிஞை. காது கூட குத்தாமல், நகைகள் அணிய பிரியப்படாமல் தனது சுயவிருப்புடன் வளர்ந்தவள். அவளது அனைத்தையும் ஆதரிக்கும் ஒரு அப்பா அவளுக்கு வாய்த்திருக்கிறார். வளரும் பருவத்தில் கிரணுக்கு டிலைலா மீது ஈர்ப்பு வருகிறது. இவர்களது வகுப்பைச் சேர்ந்த ஒருவனும் டிலைலாவுக்குப் பின்னே அலைகிறான். டிலைலாவை நெருங்க கிரணின் உதவியை நாடும் அவன் மூலம் தனது ஈர்ப்பை அவளுக்கு வெளிப்படுத்த கிரணால் முடிகிறது. டிலைலாவும் சம்மதிக்க, அவர்களுக்கிடையிலான நெருக்கம் தொடர்கிறது. ஒருகட்டத்தில் அவர்களது வகுப்பாசிரியைக்கு இது தெரியவருவதுடன், டிலைலாவில் நாட்டம் கொண்டிருந்த அந்த மாணவனுக்கும் இது தெரியவர, டிலைலாவின் தாயிடம் உண்மையைக் கூறிவிடுகிறான். அதிர்ச்சியடைந்த டிலைலாவின் அம்மா மகளுக்கு விரைவில் திருமணம் முடிக்க அவசரப்படுகிறாள். டிலைலாவும் தமக்கிடையிலான இந்த உறவு சமூகத்தாலும், ஏன் அம்மாவாலுமே கூட ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லையென அறிந்து, திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். இதுதெரியவந்த கிரண் வீட்டை விட்டு வெளியேறுவோமென முடிவெடுத்தாலும், டிலைலா அதற்கு உடன்படவில்லை. இறுதியில், டிலைலாவுக்குத் திருமணம் நடைபெறுகிறது, முதலில் தற்கொலைக்கு முயற்சிக்கும் கிரண் பின் மனம் மாறி, தன் வாழ்வின் போக்கைத் தானே தீர்மானிப்பவளாக மாறுகிறாள்.<br /><br />நிகழ்வு ஒருங்கமைப்பாளர்கள் மீது ஏராளமான விசனம், சிங்கள மொழியில் மட்டும் subtitle போட்டது, கலந்துரையாடல் சிங்களத்தில் மட்டுமே இடம்பெற்றதென. தம்மருகிலிருக்கும் சிறுபான்மையினரைப் புறக்கணித்துக் கொண்டு எப்படி விளிம்புநிலைப்படுத்தப்பட்ட இன்னுமொரு குழுமத்தினரைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட முடிகிறது, அதனூடாக எத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டுமென எதிர்பார்க்கிறார்களென்பதும்.. அவற்றைப் புறந்தள்ளி, படத்தைப் பார்த்தாலும், இத்தகைய படங்களை, அல்லது நாவல்களை எடுத்துக்கொண்டால் சிந்தனையில் இடறுமொரு விடயம், ஓரினப் பாலுறவிலும் ஆண் - பெண் என்ற எதிர்நிலைகள் கட்டமைக்கப்படுவது ஏன் என்பது. உடலமைப்பில் - அதாவது பால் ரீதியாக இருவரும் பெண்களாயிருந்தாலும், அங்கு ஒருவர் ஆண் என்ற - பாலினக் கட்டமைப்பினடிப்படையிலும் (ஆணாக உடையுடுத்துவது, தலைமை தாங்குவது...) மற்றவர் பெண்ணாகவும் (பயந்த சுபாவமுடைய, அழகாக வெளிக்கிடுவதில் நாட்டமுடைய, கொஞ்சம் பின்னிற்கும்) காட்டப்படுவது ஏன் என்ற கேள்வி குடைந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஆண் என்ற பாத்திரத்தையும், மற்றுமொருவர் பெண் என்ற பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. ஓரினப் பாலுறவிலும் இந்த ஆண்-பெண் எதிர்நிலை கட்டமைக்கப்படுவது ஊடக மற்றும் mainstream னரின் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வா அல்லது இயற்கையானதா என்ற சந்தேகம் எழுகிறது. நண்பரொருவர் அதுவே இயற்கையாகவிருக்கலாம் என்றார். ஆனாலும்.., அதது அவர்களவர்களால் தான் பேசப்பட்டாக வேண்டும். அப்போதுதான் அது நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கக்கூடும். நாம் எமது பாட்டில் சிந்திப்பதும், முடிவெடுப்பதும் கடைசியில் பெண்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்க முனைந்ததைப்போல, அவ்விளிம்புநிலைப்படுத்தப்பட்டவர்கள் மீதான மற்றுமொரு வன்முறையாகத்தான் அமையும். நாங்கள் செய்யக்கூடியதெல்லாம் இப்படியும் விடயங்களிருக்கின்றன என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைவதும், அவர்களையும் எம்மைப்போன்ற அதே உணர்வுகள் கொண்ட மனிதர்களாக மதிக்கும் மனப்பக்குவத்தை எம் ஒவ்வொருவரின் மனதிலும் வளர்த்துக் கொள்வதாகுமென்று நினைக்கிறேன்.<br /><br />......................<br /><br />கலந்துரையாடலின் போது ஒருங்கமைப்பாளர்களுள் ஒருவர் இத்தகைய சமூக நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த என்ன செய்யலாமென நினைக்கிறீர்களெனக் கேட்டார். பார்வையாளரொருவர் வேடிக்கையாக, வருடத்துக்கு இப்படி இரண்டு திரைப்பட விழாக்களை ஒங்குபடுத்துங்கள் என்றுகூற, அரங்கு முழுதும் சிரிப்பலை பரவியது, என்ற ஒரு உழுத்துப்போன சொற்றொடரை எடுத்தெறிந்து கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.<br /><br />சமூக மாற்றம் அல்லது விழிப்புணர்வு.. (தனியே ஓரினப் பாலுறவாளர்கள் பற்றி மட்டுமல்ல, இன்னபிற controversial issues அனைத்தையும் பற்றிய) இதைக் கொண்டுவர என்னசெய்யலாமென்பது பொதுவாக இத்தகைய விடயங்களில் ஆர்வமுடைய, சமூக அக்கறையுடைய ஒவ்வொருவரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய முக்கியமான கேள்வி. அதிகம் பகிரங்கமாகப் பேசப்படாத இவ்விடயங்களை, விளிம்புநிலை மக்களின் குரலை எழுத்தில் பதிவது ஒரு வழி, திரைப்படங்கள் போன்ற காட்சியூடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது இன்னொன்று, அடுத்தது களத்திலிறங்குவது. இவையொவ்வொன்றும் தமதேயான வழிமுறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த துணைநிற்கின்றன. களத்திலிறங்குவதற்கு முதல் எழுதி வைக்கவேண்டும், ஆவணமாகப் பதியவேண்டுமென சொல்லித்திரிவதும், எழுதிக்கிழித்து என்ன பிரயோசனம் செயற்பட மட்டுமே வேண்டுமெனக் கூறுவதும் இரண்டும் பயனற்றவை. தண்டவாளங்கள் எப்போதும் சமாந்தரமாகப் பயணித்தாக வேண்டும். ஆவணங்களும் பதிவுகளும் முறையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதும், மக்கள் மத்தியில் இயங்கும் இயக்கங்களின் செயற்பாடுகள் பதிவுசெய்யப்படுவதுமென எழுத்தும் செயற்பாடும் தமக்கிடையே இடையீடு செய்தபடியிருந்தால் மட்டுமே ஏதேனுமொரு சிறிய மாற்றமாவது ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவும். இரண்டும் ஒரே நபரால் நிறைவேற்றப்படுவதும், தமக்கு விருப்பமான, சாத்தியமான வழிவகையைத் தேர்ந்துகொண்டு தன்னாலான பங்களிப்பை வழங்குவதும் அவரவரது தெரிவு. இதில் எந்தவொரு வழிமுறையும் நூற்றுக்கு நூறு வீதம் சரியானதுமல்ல, நூறுவீதம் சமூக மாற்றத்துக்கான சாத்தியக்கூற்றினைத் தனக்குள் கொண்டதுமல்ல.<br /><br />ஆனால், இந்தக் களத்திலிறங்குவது அல்லது செயற்படுவதென்றால் என்னவென்பது அடுத்த கேள்வி. ஏதோவொரு அமைப்பில் சேர்ந்துகொண்டு விடுதலை வேண்டும், சமத்துவம் வேண்டுமென கொடிகளும், பதாகைகளும் தூக்கிக்கொண்டு திரிந்தாற்போல சாத்தியமாகக்கூடிய விடயங்களல்ல இவை. சமூகமென்பது தனிமனிதர்களின் தொகுதி. தனிமனித விழிப்புணர்வு ஏற்படாத ஓரிடத்தில் சமூக மாற்றமும் சாத்தியமில்லை. எந்தவொரு விடயமும் முதலில் தனிமனிதனிலிருந்து ஆரம்பித்தாக வேண்டும்.<br /><br />ஒரு மனிதன் தனக்குத்தானே நேர்மையுடையவனாயிருந்து, எந்தவொருவரையும் அடிமைப்படுத்தாமலோ, காயப்படுத்தாமலோ, அதிகபட்ச புரிந்துணர்வுடன் உறவுகளை அணுகி, தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் அவரவரது பலவீனங்களுடன், சக மனிதப்பிறவியாகக் கருதி நேசிப்பானேயாகில் அந்த மனிதனிலிருந்துதான் மாற்றம் தனது முதற்காலடியை எடுத்துவைக்கத் தொடங்குகிறது. தனது தாயை, சகோதரியை, மனைவியை நேசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாத ஒருவனால் பெண் விடுதலை அல்லது சமத்துவம் - அவன் என்னதான் தெருவிலிறங்கி போராடினாலும், ஆயிரமாயிரம் பெண்களைக் 'கரையேற்றினாலும்' - சாத்தியப்படக்கூடுமாவென்பது சந்தேகமே. அதேவேளை இந்தப் 'பெண்ணியம், ஆண் மேலாதிக்கம், தந்தை வழி சமுதாயம்' போன்ற பெரிய பெரிய வார்த்தைகளின் அர்த்தம் தெரியாத ஒரு சாதாரண ஆண் தனது குடும்பத்தினருடன், சக பெண்களுடன் நடந்துகொள்ளும் முறையினூடாக தன்னைச் சுற்றியிருக்கும் ஏனைய ஆண்களின் மனதில் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம், அதுவே முக்கியமானதும். அவனிலிருந்து அவனைச் சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்களென வியாபிக்கும் அவ்வதிர்வு காலப்போக்கில் மிக இயல்பானவொன்றாக ஏற்றுக்கொள்ளப்படவும் கூடும். அதேபோல, 'எனக்காக இதைச் செய், அதைச் செய், இதைப்போடு, அதைப்போடு, இப்பதான் வடிவாயிருக்கிறாய், இல்லாட்டி அசிங்கமாயிருப்பாய்,' என்றெல்லாம் கமெண்ட் அடித்துக்கொண்டிராமல், 'இவனோடு பேசாதே, அவனோடு பழகாதே, என்னை மட்டுமே நினை, எனக்காக மட்டுமே கவலைப்படு,' என்று அதிகாரம் செலுத்தாமல், 'நீ நீயாக இருப்பதைத்தான் நேசிக்கிறேன்' என்றுகூறும் மனப்பக்குவம் வாய்த்திருக்கும் ஒரு ஆணால் களத்திலிறங்கிப் போராடுபவனை விட அதிகம் சாதித்துவிட முடியும்.<br /><br />ஆதிக்கம் என்பது எப்படி ஆண்களின் உயிரோடும் உடலோடும் வேரோடிக் காணப்படுகிறதோ அதேபோலத்தான் அடிமைத்தனமும் பெண்களும்.. நகை நட்டணிந்துகொண்டு, 'வடிவாக' வெளிக்கிடுவதில் பிரியமுடைய ஒரு பெண் எப்படி தன்னை விடுதலையடைந்தவளாக அல்லது அடைய முற்படுபவளாக, பிரயாசைப்படுபவளாகக் காட்டிக்கொள்ள முடியுமென்பது குறித்து சந்தேகம் கொள்கிறேன். அது உடலைக் கொண்டாடுவதென யாரும் கூறி தமக்குள் ஆசுவாசப்படலாம். ஆனால், கொண்டாடுவதற்கும் கொண்டாட்டத்துக்குத் தயார்படுத்துவதற்குமிடையே வேறுபாடுகளிருக்கின்றன. உடலைக் கொண்டாடுவதென்பது உடலை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்வதும், நேசிப்பதும். அதாவது, மற்றுமொரு பார்வையில் தனது நிர்வாணத்தை நேசிப்பது. என்று காதில் துளை குத்தி தோடு அணியவும், மூக்கில் மூக்குத்தி அணியவும் தொடங்குகிறோமோ அன்று எமது உடலின் இயல்பைக் குலைக்கிறோம், அதைச் சிதைத்து 'இதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு' என்று கட்டமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் ஒரு விம்பத்தை அவசர அவசரமாக அணிந்து அலங்கரித்துக் கொள்கிறோம். இந்நிலையில் பெண்ணுடம்பு பண்டமயமாக்கப்படுவதையும், போகப்பொருளாக எடுத்து நோக்கப்படுவதையும் எப்படிக் குறைகூற..<br /><br />ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கும் பெண் பற்றிய விம்பங்களிலிருந்தான விடுதலையுணர்வு ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தானாக எழாதவரையில் யார் என்ன சமூக மாற்றத்துக்காய், எப்படியெப்படிப் போராடினாலும், திரும்பத் திரும்ப ஒரே செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருந்தாக வேண்டும்.<br /><br />நாங்கள் எதற்காகப் போராடுகிறாமோ, எந்த மாற்றத்தை வேண்டுகிறோமோ முதலில் அது குறித்த பூரண விழிப்புணர்வும், நேர்மையும் எமக்கிருக்க வேண்டும். நாங்கள் வழிகாட்டிகளாக முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டவேண்டும். எமது வாழ்வும் நடவடிக்கைகளும் இன்னும் ஒரேயொரு மனிதனை தனது எண்ணம், சிந்தனை குறித்து சுய விமர்சனம் செய்துகொள்ளத் தூண்டுமாயின் அதுவே மிகப்பெரிய சாதனை.<br /><br />...........................<br /><br />மற்றையது, உறவுகள்.. டிலைலாவுக்குத் திருமண ஏற்பாடுகள் இடம்பெறுவது அறிந்ததும் கிரண் வீட்டை விட்டு வெளியேற அழைக்கிறாள். அதை மறுக்கும் டிலைலா, திருமணத்துக்குப் பிற்பாடும் தாம் இதேபோல இருக்கமுடியும், தமது உறவைக் கொண்டுசெல்ல முடியும் என்கிறாள். படத்தில் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவொரு பகுதியல்லவெனினும், அந்த உரையாடல் என்னைப் பாதித்திருந்தது.<br /><br />நேர்மை.., ஒரு உறவிலிருந்து, அதன் பிடிப்பிலிருந்து முற்றாக விடுபடாமல் இன்னொரு உறவில் நுழைவதென்பது இரண்டையும் சிதைப்பதாகும். புதிய உறவொன்றில் நுழைவதற்கு ஒரு நேர்மை இருந்தாக வேண்டும். முறிந்து போன, அல்லது முறிக்கப்பட்ட உறவின் நினைவிலிருந்து விடுபட, தப்பியோட அல்லது பழிவாங்குமுகமாக இன்னொருவரை நேசிக்கத் துணிபவர்களின் நேசத்தின் மீது சந்தேகங்கொள்ளவே முடிகிறது. உண்மையான அன்பு பச்சாதாபத்தின் மீதோ, நன்றியுணர்வுடனோ, அல்லது வேறேதேனும் காரணம் பற்றிக்கொண்டோ எழுவதில்லை.<br /><br />அடுத்தது இந்தப் பாலும், பாலினமும்.. ஆண்குறி கொண்டவர்களெல்லாம் 'ஆண்'களாக இருப்பதுமில்லை; ஆண்குறியற்றவர்கள் அனைவருமே 'ஆண்'களாக இல்லாமலுமில்லை. இந்த ஆண்குறி தொடக்கம் இன்னபிற உறுப்புக்கள் எல்லாம் பால் - அதாவது இயற்கை உடலமைவுடன் தொடர்புடையவை; மற்றும்படி ஆணாக இருப்பது, பெண்ணாக இருப்பதென்பது பாலினம் - சமூகம் கட்டமைத்திருக்கும் வரைமுறைகள், விதிகளுடன் தொடர்புடையவை. விமர்சிக்கப்படவேண்டியதும், மறுக்கப்பட வேண்டியதும் இந்தப் பால் வேறுபாடல்ல, பாலின வேறுபாடே.<br /><br />இவையனைத்தின் பின்னமைவிலும் ஒரு படத்தை ஆழமாக இரசிக்க முடிந்தது..</span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19146565.post-6661052723445063092008-06-05T14:11:00.009-04:002008-06-05T15:14:38.280-04:00<br><br><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix-HFWIj6m9EH4oKuxPo-rkl0da9jkj-Ho-JBn9VYYXxiZIm4jrWMdkVn83RFZHeyNzsOAz_Gw3CQuOxyv8CfKtSFnbZX8LG2yFFAktf6p-BULOW1Sd8AfFNm1r-xh5eIaoG9oqQ/s1600-h/24AnnaMaria.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5208474462154744354" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix-HFWIj6m9EH4oKuxPo-rkl0da9jkj-Ho-JBn9VYYXxiZIm4jrWMdkVn83RFZHeyNzsOAz_Gw3CQuOxyv8CfKtSFnbZX8LG2yFFAktf6p-BULOW1Sd8AfFNm1r-xh5eIaoG9oqQ/s200/24AnnaMaria.jpg" border="0" /></a> <span style="font-size:85%;">கடலொன்று காத்திருந்தது எம்மிருவருக்கும் மத்தியில்<br />நீயோ நானோ இப்படியிருந்திருக்க வேண்டியவர்களல்ல<br />அடிவானத்தைப் பார்த்து<br />நான் உரக்கக் கத்த வேண்டியிருந்தது,<br />மனிதர்களை நேசிப்பவளெனினும்<br />காற்றில் கலந்த என் குரலை<br />சூரியன் விழுங்கி ஏப்பம் விட்டதாக<br />அவர்கள் பேசிக்கொண்டார்கள்<br />எனக்குத் தெரியும்,<br />படகெடுத்து கையுளைய துடுப்பு வலித்து<br />புயல்கள் கடந்து உன் கரையை வந்தடையும் முன்பு<br />ஓங்கிக் குரலெழுப்பி சலித்துப்போய்<br />நீ திரும்பிக் கொண்டிருப்பாய்...<br />கரைகள் என்னைக் கைவிட்டுவிட்டதாகப் புலம்பிக்கொண்டு<br />நானொரு கடற்கன்னியாகியிருப்பேன்.<br />...................<br /><br />கண்முன்னே பிணமொன்று செத்துவீழ்கிறது<br />என் சாயலுடன்<br />அதன் அங்க அசைவுகளும் உதட்டுச் சுழிவும்கூட<br />என்னதையே ஒத்திருப்பதாக அக்கா முணுமுணுத்தாள் காதுக்குள்<br />பட்டுப்போன இதயம்..<br />தீய்ந்துபோன உதடு..<br />கருகிய மூளை..<br />'இதுவொரு மனித உயிரியா என்ன'<br />சா வீட்டில் அனைவருக்கும் சந்தேகம்<br />நான் உயிரைச் சுருட்டியெடுத்து பைக்குள்ளிட்டு<br />இரைப்பையின் ஆழத்தில் புதைத்து விட்டிருந்தேன்<br />நாற்பது நாள் கடந்து,<br />நானொரு பிணமென நடமாடுவதாய்<br />அம்மா சலித்துக்கொள்வாள் அனைவரிடமும்<br /></span><br /><span style="font-size:85%;"><br /></span><span style="font-size:85%;"></span><span style="font-size:85%;"><span style="font-size:78%;">ஓவியம்: சல்வடோர் டாலி</span><br /></span><span style="font-size:85%;"></span>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-19146565.post-60246262882284747852008-04-27T10:07:00.004-04:002008-05-13T08:37:31.711-04:00எனக்கும் மேலால் அழுதுகொண்டிருக்கும் ஒரு வானம்..<span style="font-size:85%;"><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">பித்தேறி மூளை அச்சகன்று சுழலத் தொடங்கிய பொழுதொன்றில்</span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">குரல்வளை கீறிப்பிளந்தொரு குரல்</span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">தெருவழி ஊரத் தொடங்கியதென </span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">ஆதிகாலக் கதைகள் </span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">பாப்பிரஸ் புல்லிலிருந்து மெல்ல நழுவியவாறு</span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">சொல்லித் திரிகின்றன</span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">ஓங்கிக் குரலெடுத்து ஒரு கிழவி ஓலமிடுகிறாள்</span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">இன்னுமொரு தல்கோனை வயலின் மடியிலமர்ந்து </span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">பால்வெளியை விழுங்கக் காத்திருக்கிறாள் </span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">தொன்மங்கள் கனவுகளில் வடிகின்றன</span><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">கனவுகள் தொன்மங்களை வடித்துக்கொண்டிருக்கின்றன</span><br /><br /><br />'<span style="FONT-STYLE: italic">கண் விழித்துப் பார்த்தபோது கரைந்த வண்ணமே </span><br /><span style="FONT-STYLE: italic">உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே'</span><br /><br />கடந்துகொண்டிருக்கிற தேநீர்க் கடையிலயிருந்து கேட்கிறது பாட்டு.. ஒருகாலத்தில் என்னைப் பைத்தியமடையச் செய்திருந்த பாட்டு.. ஒருகணம் நின்டு அடுத்த வரியையும் கேட்க வேணும் போல இருக்கு.. குரல் உச்சஸ்தாயிக்கு ஏறுது..<br /><br /><span style="FONT-STYLE: italic">'கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே</span><br /><span style="FONT-STYLE: italic">இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது விம்பமே'</span><br /><br />குண்டுவெடிப்பொன்டுக்கு அடுத்த நாள், அதுவும் ஞாயிற்றுக்கிழமையொன்றில் கொழும்பைப் பார்க்கவேணும் நீங்கள்.. அப்படியொரு அமைதி.. காலி வீதி, மிகப் பரபரப்பான அந்த றோட்டிலயே அங்கையொன்டும் இங்கையொன்டுமாய் தான் வாகனம்.. நடக்கிற சனத்தை கண்ணுக்கு எட்டின தூரம் வரை காணோம்.. மழை நாள்.. எனக்கு அதில் நடக்கப் பிடிச்சிருந்தது.. கொள்ளுப்பிட்டி சந்தியிலயிருந்து பம்பலப்பிட்டி சந்திவரை, பிறகு அங்கையிருந்து திரும்பி அவ்வளவு தூரம், அதையும் தாண்டி அலரி மாளிகை கடந்து.... நடுவில் ஆகக்குறைந்தது ஒரு ஐந்தாறு இடத்திலாவது மறிச்சிருப்பாங்கள்.. ஒவ்வொரு முறையும் ஒரு முறைப்போட, எரிச்சலோட எதிர்கொள்ளுற இந்த மறியல்கள் இண்டைக்கு ஒருவித ஏக்கத்தோட, என்னை இப்படியே மறிச்சு வைக்க மாட்டீங்களா, என்னை பிடிச்சுக்கொண்டு போக மாட்டீங்களா என்டு கெஞ்சுற மாதிரி.. சிங்கத்துட குகைக்குள்ள தானாய் விரும்பி தலையைக் குடுக்கிற ஆடு மாதிரி என்டு அந்த இடத்தில் என்ட நிலையை எவராவது விபரிச்சிருக்கலாம்.. வழக்கமாய் ஐசியில் யாழ்ப்பாணம் என்டு கண்டதுமே நிப்பாட்டி ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கிறவங்கள் இண்டைக்கு பார்த்துட்டு பேசாமல் திருப்பித் தாறாங்கள்.. ஏமாற்றம், ஏமாற்றம்.. ஒருத்தன் மட்டும், ஓ, யாழ்ப்பாணம் போல என்டு சிரிச்சுட்டு திருப்பித் தந்தான், வேற யாருமே கணக்கெடுக்கக்கூட இல்ல.. மினிஸ்டரோ யாரோ போறதுக்காய் றோட்டை மறிச்சு நடந்து போற சனத்தைக் கூட போகவிடாமல் அரை மணிநேரம் மறிச்சு வைச்சிருந்தவன் கூட என்னை ஏனென்டு கேட்கேல்லை.. நான் பரிதாபமாய் அவனுக்கு பக்கத்தில் அரை மணிநேரம் நின்டு கொண்டிருந்தன், என்ன நினைச்சானோ, ஒரு சிரிப்பு மட்டும் பதிலாய் வந்தது.. ஏன் இவங்கள் இண்டைக்கென்டு பார்த்து அநியாயத்துக்கு நல்லவங்களாய் இருக்கிறாங்கள்.. எனக்கு விசர் விசராய் வந்தது..<br /><br />தன்னந்தனிய ஒரு பொம்பிளைப்பிள்ளை அலரி மாளிகைப் பக்கம் ஏன் போறாள், அதுவும் இந்த மழைக்குள்ள, கையில் குடையொன்டும் இல்லாமல், என்டு நீங்கள் யோசிக்கக்கூடாது.. அப்பாக்கு மட்டும் தெரியவேணும் காலை முறிச்சுப் போடுவார்.. றோட்டின்ரை எதிர்த்திசையில் ஒருத்தர் கையில் வயலினோ, கிடாரோ பெட்டிக்குள் தூக்கிக்கொண்டு வந்தார், அதுவொரு குண்டாயிருந்து திடீரென்டு இந்த இடத்தில் வெடிச்சுடக் கூடாதா என்ற நப்பாசையில் கொஞ்சநேரம் அதே இடத்தில் தாமதிச்சுப் பார்த்தன்.. ம்ஹூம்.. அவர் தன்ரை பாட்டுக்குப் போறார், என்ரை நினைவில் ஒரு குண்டை வெடிக்க வைச்சு அதில் நானும் செத்துப் போறதாய், என்ரை ஐசி எல்லாம் பார்த்து வீட்டுக்குத் தகவல் தெரிய வாறதாய், எல்லாரும் கத்திக் குழறுறதாய் நானே கற்பனை செய்துபார்த்து திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.. சாவு அதாய் என்னைத் தேடி வரவேணும், எனக்கு அதைத்தேடிப்போக கொஞ்சம் பயம்..<br /><br />கோல்பேஸ் மூடிக்கிடக்கு.. <span style="FONT-STYLE: italic">Nangi me paththen yanna bahaa</span> (தங்கச்சி இந்தப் பக்கத்தால் போக ஏலாது).. அப்ப அந்தப் பக்கத்தால் போக ஏலுமா.. <span style="FONT-STYLE: italic">Bahaa</span> (NO!!).. கடலை மூடுறத்துக்கு நீங்கள் யாரடா.. எனக்கு நாக்கு நுனியில் இடறுது வார்த்தை.. No one wants me, not even youuu??? எனக்கு கடலைப் பார்த்துக் கேட்கவேணும் போல இருக்கு.. அதுவும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிற மாதிரி.. அலை மற்ற பக்கமாய் திரும்பி ஆழ்கடலைப் பார்த்து அடிக்கத் தொடங்கினால் எப்படியிருக்குமென்டு யோசிச்சுப் பார்த்தன்.. <span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">'Everything gonna be alright'</span>.. Alicia Keys ன் பாடல் நினைவுக்கு வந்தது..<br /><br />வாழ்க்கை என்டுறது எவ்வளவு சின்னது.. எத்தனைகாலம் வாழ்ந்திருப்பன் இந்த உலகத்தில், வெறும் இருபது வருஷம் கூட ஆகேல்லை இன்னமும்.. ஆனா, வாழ்வின் ஒவ்வொரு பருவத்தையும் இதுகாலம் வரையில் முழுமையாய் அனுபவிச்சு, அந்தந்த வயசுக்குண்டான அத்தனை குழப்படிகளையும், குறும்புகளையும் ஒன்டுவிடாமல் செய்து, இண்டைக்கு இந்த நாளில் இந்தக்கணத்தில் இப்படி வந்து நிக்கிறன் என்டது ஒரு திருப்தி.. இப்ப செத்துப்போறதென்டாலும் நிம்மதியாப் போவன்..<br /><br />நாளைக்கு என்ன, அடுத்த நிமிஷம் என்ன நடக்குமென்டு தெரியாத ஒரு வாழ்க்கை, கணப்பொழுதேயான வாழ்க்கை, அதுக்குள்ளயும் எத்தனை சண்டைகள், எத்தனை முறுகல்கள், எத்தனையோ பேரைக் காயப்படுத்திக்கொண்டு, வருத்திக்கொண்டு.. ஏனப்படி வாழவேணுமென்டிருக்கு.. எதைச் சொன்னாலும் அது பிழையாப் போய்டுமோ என்ட பயத்தில் கதைக்கவே விருப்பமில்லாமலிருக்கு.. என்னைச் சுற்றியிருக்கிறவங்களை, என்னை நேசிக்கிறவங்களை காயப்படுத்திக்கொண்டு எனக்கு வாழப் பிடிக்கேல்லை, உங்களுக்குப் பிடிக்குமா.. அப்படி காயப்படுத்தி அதில சந்தோஷம் காணுறவங்களும் இருக்கிறாங்கள்தான்.. ஆனா, ஏன் நான் அவங்களில் ஒருத்தியாயில்லை.. எனக்குத் தெரியாமலேயே என் ஒவ்வொரு நடத்தையாலும், அசைவாலும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறன், என்னவொரு வாழ்க்கை, வாழ்ந்தும் என்ன பிரயோசனம்..<br /><br />வானம் மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கு இன்னும்.. இண்டைக்கு நனைஞ்சது காணாது.. தலையில விழுற தண்ணி முகத்தால வடியுற நேரம் எல்லாத்தையும் கழுவிக்கொண்டு, அத்தனை பாரத்தையும் இறக்கிக்கொண்டு வடிய வேணும்.. It should make us feel free.. இந்த மழை அவ்வளவு வேகத்தோட தலையில் இறங்கேல்லை.. விழுந்த கொஞ்சநஞ்ச தண்ணியும் சேர்ந்து தலைக்குள்ள இறுகிப்போயிருக்கு பனிக்கட்டியாய்..<br /><br /><span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic">'தூரத்துக் கடல் என்னை அழைக்கிறது.. விடைகொடு எனதன்பே, என்றென்றைக்குமாக விடைகொடு..' </span>பிரைடா காலோவின் வரிகளோடு அப்படியே தூங்கிப்போக வேண்டும் போலிருக்கிறது.. இனியொருபோதுமே இவ்வுலகில் கண் விழிக்க வேண்டியிருக்காதென்ற நிம்மதியோடு..<br /></span>Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-19146565.post-53114230757886186272008-03-14T08:55:00.005-04:002008-03-14T13:20:38.128-04:00பெண்ணும் பயணியுமாயிருத்தல்<em><strong><span style="font-size:130%;">- Being a woman and a traveller</span> </strong><br /><br /><strong>(பெண்ணியப் பயண இலக்கியங்களை முன்வைத்து)</strong></em><br /><br /><strong></strong><br /><span style="font-size:85%;"><strong>முற்குறிப்பு</strong><br /><br />துணையின்றி தனித்துப் பயணித்தலென்பது காலங்காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வீட்டை விட்டு வெளிவரவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலங்கடந்து இன்றைக்குப் பெண்களின் வெளியுலகப் பிரவேசமானது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாடுகள், எல்லைகள் கடந்தலையும் தேசாந்திரிகளாகப் பயணிக்கவும், அதைப் பதிவுசெய்யவும் பெண்கள் முன்வர வேண்டியதன் தேவையும், இத்தகைய பயணங்களில் தாக்கம் செலுத்தும் பாலின மற்றும் உடலரசியலின் இருப்பும் குறித்த ஒரு விழிப்புணர்வினை வேண்டிநிற்பதே இங்கு எனது நோக்கமாகிறது.<br /><br /><strong>முன்னுரை </strong><br /><br />வரலாறு தொடக்கம் மானுட இருத்தலின் தடங்கள் யாவும் இதுகாலம் வரை ஆண்களால், அவர்களின் பார்வையிலேயே பதியப்பட்டிருந்தன. பெண்ணானவள் ஓர் இரண்டாமினமாகத் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறாள். உடலும் உலகமும் தம்முள் ஏராளமான மர்மங்களையும் ரகசியங்களையும் பொதிந்து வைத்திருப்பவை; தேடிக் கண்டறியப்பட வேண்டியவை. ஆனால், அதை தேடுபவர்களும் கண்டடைபவர்களும் - மார்க்கோ போலோவாயிருந்தாலென்ன, யாரென்றாலென்ன - எப்போதும் ஆண்களாகத்தானிருந்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக உடலும் உலகமும் சார்ந்த ஒரு பெண்ணிய வெளியைக் கட்டமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் பெண்களுக்கிருக்கிறது.<br /><br />பயணங்கள் வரலாற்றையும், அது தொடர்ந்து வந்த தடங்களையும் மீள்பரிசீலனை செய்பவை (இங்கு பயணங்களென நான் குறிப்பிடுபவை தம்பதி சமேதரராய் சுற்றுலா போவதையோ, குடும்ப சகிதம் கதிர்காமம் போவதையோ அல்லவென்பதைக் கவனத்திற் கொள்ளவும்). மனித நாகரிகமும், அதன் பல்வகைமையும் மீள்வாசிப்புச் செய்யப்படுவதற்கான வாய்ப்பினை பயணங்கள் வழங்குகின்றன. வரலாற்றோட்டத்தில் ஆண்களின் பெரும்பாலான பயணங்கள் நாடுகளும் இனங்களும் சூறையாடப்படுவதற்கும், இனக்குழுமங்கள் அவற்றின் பண்பாட்டம்சங்களுடன் முற்றாக அழிந்து போவதற்கும், காலனியாதிக்கத்துக்குமே வழிவகுத்திருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆரம்பகால மானுட குல வரலாற்றின் பெரும்பகுதியும் துரதிர்ஷ்டவசமாக இத்தகைய பயணிகளின் குறிப்புகளைத் தழுவியதாகவே அமைந்துமுள்ளன. இவ்வரலாற்றில் பெண்களின் வகிபாகம் எத்தகையதென ஆராய விழைகையில், ஏற்கனவே 'கண்டறியப்பட்டு எடுத்துச் சொல்லப்பட்ட' உலகை பெண்கள் தமது வழிநின்று மீள்வாசிப்புச் செய்யவேண்டியதன் தேவை புலப்படும். அம்மீள்வாசிப்புக்கான சிறந்த வழிமுறையாகப் பயணங்கள் திகழ்கின்றன.<br /><br />வெளி நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள் உள்முகமாகத் திரும்பினர். அவர்களால் படைக்கப்பட்ட இலக்கியங்கள், பிரதிகள் பெரும்பாலும் உணர்வுவழிப்பட்டனவாக அமைந்தமைக்கு இதுவே காரணமாயமைந்ததெனலாம். உள்முகமாகத் திரும்பியவர்கள் தமது உடலையும், அதனை மையப்படுத்திக் கட்டியெழுப்பப்பட்ட சமூகத்தையும் விமர்சிக்கவும், தம்மை வெளிப்படுத்தவும் தமக்கான மொழியைக் கட்டமைக்கத் தொடங்கினர். தனது உடல், காதல் - காமம் குறித்து வெளிப்படையாக உரையாடுவதற்கான உரிமை பெண்களுக்கு எவ்வாறு மறுக்கப்பட்டிருந்ததோ அதேபோல அல்லது அதைவிடவும் வன்மையாக பெண்கள் தனியாகப் பயணிப்பதும் மறுக்கப்பட்டிருந்தது. உடல் பற்றிய தேடல் பெண்ணிய வெளியைக் கட்டமைப்பதில் எந்தளவு பங்களிப்பு செலுத்துகிறதோ, அதேயளவு பங்களிப்பினை - உலகு பற்றிய தேடலாய் அமையும் - பெண்களின் பயணங்கள் குறித்த பதிவுகளும் செலுத்தக்கூடும்.<br /><br />தனியாகப் பயணிக்குமொரு பெண்ணின் பயம் குறித்து Robin Morgan தனது The Demon Lover நூலில் கூறுகிறார்:<br /><br /></span><span style="font-size:85%;"><strong><em>Look closely at her.<br /><br />She crosses a city street, juggling her briefcase and her sack of groceries. Or she walks down a dirt road, balancing a basket on her head. Or she hurries toward her locked car, pulling a small child along with her. Or she trudges home from the fields, the baby strapped to her back.<br /><br />Suddenly there are footsteps behind her. Heavy, rapid. A man's footsteps. She knows this immediately, just as she knows that she must not look around. She quickens her pace in time to the quickening of her pulse. She is afraid. He could be a rapist. He could be a soldier, a harasser, a robber, a killer. He could be none of these. He could be a man in a hurry. He could be a man merely walking at his normal pace. But she fears him. She fears him because he is a man. She has reason to fear.<br /><br />It is the footstep of a man she fears. This moment she shares with every human being who is female.<br /><br />This is the democratization of fear. </em><br /></strong>(Robin Morgan, <em>The Demon Lover</em>)<br /><br />இது சனநாயகமயப்படுத்தப்பட்ட பயம். பல்கேரியக் கவிஞரான ப்ளாகா டிமிட்ரோவாவின் கவிதை வரிகளும் இங்கு குறிப்பிடத்தக்கன:<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>இன்னும் ஆண்களுடையதாகவேயிருக்கும்<br />இவ்வுலகில்<br />எங்கும் ஆபத்தும் தொல்லையும்தான்<br />இங்கு ஒவ்வொரு வளைவிலும்<br />அபத்தமான மோதல்களின் திடீர்த்தாக்குதல்கள்<br />காத்திருக்கும்.. </strong></em><br />(<em>அக்மதோவா: அக்கரைப் பூக்கள்,</em> தமிழாக்கம் - வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை)<br /><br />சாலையோரப் பெண்ணொருத்தியின் பாதையைத் தீர்மானிப்பதில் பெரும் தாக்கம் செலுத்துமொரு விடயம் இந்தக் கறுப்பு மனிதன் பற்றிய பயம். முதுகின் பின்னால் தொடருமொரு காலடியோசை முள்ளந்தண்டை எவ்விதம் சில்லிடச் செய்யுமென்பது, இரவில் யாருமற்ற நேரத்தில் தனியே நடந்து திரிந்த பெண்ணொருத்திக்குத் தெரிந்திருக்கும்.<br /><br />இதே பின்னணியில்தான் பெண்ணியப் பயண இலக்கியங்களை நாம் அணுகியாக வேண்டும். இங்கு என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவை மேலைத்தேயப் பெண்களின் பயண இலக்கியங்களே. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இதுவரை அப்படியெதுவும் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காதது வருத்தத்திற்குரியது.<br /><br /><strong>1. வேறுபாடு - பெண்ணுடலும் பாலினமும்</strong><br /><br />மேற்குலகிலேயே 18ம் நூற்றாண்டளவில்தான் பெண்கள் தனியே வீட்டையும் நாட்டையும் விட்டு பயணிக்கத் தொடங்கினர். இதே காலகட்டத்தில் அவர்களது அனுபவங்கள் பதிவுசெய்யப்பட்டு நூலுருப்பெற்று அதிக கவனமும் பெறத் தொடங்கின.<br /><br />இங்கு ஆண்களின் பயணம் - பெண்களின் பயணமென வேறுபிரித்துப் பார்க்கவேண்டிய அவசியமென்னவென்ற கேள்வியெழலாம். இரவுப் பொழுதில் ஒரு ஆண் தனியே தெருவைக் கடப்பதற்கும், பெண் கடப்பதற்குமிடையிலான அடிப்படை வேறுபாட்டிலிருந்து இந்தப் பாகுபாடு மேலெழுகிறது. பயணிகளென்ற அடிப்படையில் ஆண்களோ, பெண்களோ எதிர்நோக்கும் பொதுவான பிரச்சனைகளை விடவும் வேறுபட்ட சிக்கல்களுக்கு பெண்கள் - பெண்களாயிருக்கும் ஒரே காரணத்துக்காக முகங்கொடுக்க நேர்கிறது.<br /><br />பிரபல பெண் பயணியும், படைப்பாளியுமான Mary Morris கூறுவதன்படி, பெண்கள் ஆண்களை விட மிகவும் வேறுபட்ட முறையில் உலகினூடு பயணிக்கிறார்கள், நிலத்தையும் மனிதர்களையும் மிகவும் வேறுபட்ட முறையில் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், பிரச்சனைகள், குழப்பமான உணர்வுநிலை, உடல் அசௌகரியங்கள் என்பன ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. உதாரணமாக, பாலியல் துஷ்பிரயோகத்துக்காளாக நேரிடுமோவென்ற பயம், மற்றையது, Robin Morgan கூறுவது போல ஒரு சாதாரண நன்கு பழகிய நகரத்துத் தெருவை இரவில் - அசாதாரணமான பொழுதொன்றில் கடப்பதுகூட பெண்கள் உலகினூடு பயணிக்கும் விதத்தில் பாரிய தாக்கத்தினையேற்படுத்தி விடுகிறது. துஷ்பிரயோகமென்பது அத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை:<br /><br />Gwendolyn Maceven தனது Noman's Land நூலில், கெய்ரோவிலுள்ள நூதனசாலையைப் பார்வையிடச் செல்லும் பெண் பயணியொருத்தியைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு பெண் தொடர்ந்து தினமும் நூதனசாலைக்கு வருவது வெறுமனவே இந்தப் பொருட்களை வெறித்துப் பார்ப்பதற்காக இருக்காது என எண்ணமிடும் காவலர்கள் அவளையொரு பாலியல் தொழிலாளியென நினைத்து தொடர்ந்து கண்காணிப்பதையும், அவளை வளைத்துப் போட முயற்சிப்பதையும் ஆவணப்படுத்துகிறார். ஒரு பெண்ணுக்கு நூதனசாலைக் காட்சிப்பொருட்களில் ஆர்வமிருக்கக்கூடுமென்பதே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகி விடுகிறது.<br /><br />Christina Dodwell தனது தோழியுடன் ஆபிரிக்காவில் பயணிக்கையில், இரவில் அவர்களது தங்குமிடத்துக்கு வந்து திரும்பிச் செல்ல மறுத்த இராணுவ வீரனைத் துரத்த தானும் தோழியும் தங்களுக்கு சிரங்கு இருப்பதாக தலையையும், கைகால்களையும் மாறி மாறிச் சொறிந்து பாவனை செய்ததை Travels with Fortune: An African Adventure இல் நினைவு கூர்கிறார்.<br /><br />அதேபோல, ஜெனீவாவைச் சேர்ந்த Isabelle Eberhardt 18ம் நூற்றாண்டளவில் வட ஆபிரிக்கா முழுவதும் ஒரு முஸ்லிம் ஆணாக வேடமிட்டு அலைந்து திரிந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த Eliza Farnham தான் குளித்துக் கொண்டிருந்த தாழ்ப்பாளற்ற விடுதி அறைக்குள் நுழைய முயன்ற மனிதனைத் தடுக்க, பெரிய துணிப் பெட்டிகளை கதவோடு சாத்தி வைத்து, தானும் கதவைத் தள்ளிக்கொண்டிருந்ததாக Life in Prairie Land நூலில் குறிப்பிடுகிறார்.<br /><br /><em>The reality of a woman on the road is often a personal reality. This does not mean that the woman traveller is not politically aware, historically astute or in touch with the customs and language of the place. </em><br /><br />ஆனால், ஒரு பெண் தனது உடல் பற்றிய, தனது பாலினத்தின் மீதான வேறுபட்ட பண்பாடுகளின் வரையறைகள் குறித்த விழிப்புணர்வின்றி பயணிக்கவே முடியாது என்கிறார் Mary Morris. உதாரணமாக, மத்தியகிழக்கில் பயணம் செய்யுமொரு பெண்ணின் பயணத்தில் தாக்கம்செலுத்தும் உடை தொடர்பான வரைமுறைகள். காற்சட்டையுடன் பயணம் செய்த Gwendolyn Maceven ன் Kali, அராபியச் சிறுவர்களால் கல்லெறிபடுகிறார். ஒரு ஆணுக்கு இத்தகைய பாலின ரீதியான வரையறைகளையோ, கட்டுப்பாடுகளையோ எதிர்கொள்ளும் வாய்ப்பு கிட்டுவதில்லை. இந்த விழிப்புணர்வு பெண்களின் பயண அனுபவங்களுக்கு ஒருவித செறிவினை (richness) வழங்குவதுடன், அவர்களது அனுபவங்கள் மாறுபட்டவையாக அமையவும் காரணமாகின்றது.<br /><br />மற்றையது, உணர்வுகள். புறவுலகில் பயணிக்கும்போதே அகவுலகிலும் பயணித்தபடி, தான் நினைத்தது உணர்ந்ததையும் எழுத்தில் பதிவதனூடாக இரண்டு உலகங்களினூடான தனது பயணத்தைச் சாத்தியமாக்கும் Mary Morris தான் லெனின்கிராடில் தங்கியிருந்தபோதுதான் கர்ப்பம் தரித்திருப்பதை உணர்கிறார். அதன் பின்பான பொழுதுகளில் தனது பார்வையில் லெனின்கிராட் ஒரு வெறும் நகரமாக மட்டுமே தோற்றமளிக்கவில்லையென்கிறார்.<br /><br />கனடாவின் புகழ்பெற்ற ஓவியரான Emily Carr மேற்குக் கனடாவின் தொல்குடியினர் வாழும் காட்டுப் பிராந்தியத்திலமைந்த கிராமமொன்றுக்குப் பயணிக்க நேர்ந்த அனுபவத்தைப் பதிகையில், இரவு தன்னைத் தனியே ஊர் நாய்களுக்கு நடுவே நடுத்தெருவில் விட்டு விட்டு அனைவரும் வீடுகளுக்குள் சென்றுவிட்டதாகவும், தன்னை அவர்களுள் ஒருவராய் சேர்த்துக்கொள்ள அவர்கள் தயாரில்லையென உணர்ந்தபோது தனக்குக் கத்தியழ வேண்டும்போல இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.<br /><br />ஆண்கள் உலகத்தையோ, ஒரு அந்நிய நிலப்பரப்பினையோ புறவயப்பட்ட பார்வையுடன் எதிர்கொள்கின்றனர். அவர்களது பயண இலக்கியங்கள் பெரும்பாலும் அது என்னவாக அல்லது யாராக இருந்தது, யாருக்காகக் காத்திருந்தது, எதை இழந்திருந்தது அல்லது எதைப் பெற்றிருந்தது என்பவற்றை விபரிப்பதுடன் நின்றுவிடுகின்றன. ஆனால், பெண்களின் நோக்கு இதற்கு முற்றிலும் வேறுபட்டதாக அகவயப்பட்டதாகவும், நிலப்பரப்பை அதன் மனிதர்களை - வெறும் தரவுகளென்பதற்குமப்பால் - உயிர்ப்புடன் எதிர்கொள்வதாகவும் அமைந்திருக்கக் காணலாம்.<br /><br /><strong>2. தூண்டுசக்தி</strong><br /><br />அனைத்துப் பெண் பயணிகளும், பயணிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ அல்லது மேலும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ கிளம்பியவர்களல்ல. நான் மிகவும் ரசித்த பயணம் Maud Parrish னுடையது. வெறும் ஒன்பது பவுண்ட் எடையுள்ள பயணப் பொதியுடனும், banjo வுடனும், அவர் வீட்டை விட்டு விலகியோடுகிறார், அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால்,<br /><br /><strong><em>"..So I ran away. I hurried more than if lions had chased me. Without telling him. Without telling my mother or father. There wasn't any liberty in San Francisco for ordinary women. But I found some. No jobs for girls in offices like there are now. You got married, were an old maid, or went to hell. Take your pick." </em><br /></strong>(Maud Parrish, <em>Nine Pounds of Luggage</em>)<br /><br />திருப்தி தராத திருமணத்தினை முறித்துக்கொண்டு ஓடுகையில் அவர் பதின்மங்களையும் கடந்திருக்கவில்லையென்பது இன்னமும் சுவாரசியமான விடயம். இது மேலைத்தேயவுலகம் - அவர்களது சமத்துவம், சமவுரிமை - பற்றி நாம் கொண்டிருக்கும் உயர் அபிப்ராயங்களைத் தகர்த்தெறிகிறது. சில காலம் முன்புவரை மேலைத்தேயப் பெண்கள் கீழைத்தேயவர்களை விட எந்தவிதத்திலும் மேம்பட்ட நிலையில் இருக்கவில்லை. பதினைந்து பதினாறு வயதுகளில் திருமணம் முடிப்பதும், வீட்டில் கணவனுக்கு பணிவிடை செய்தபடி வாழ்வதுமே அவர்களதும் யதார்த்தமாகவிருந்தது. சான் பிரான்சிஸ்கோ போன்ற பெரு நகரமொன்றில் கூட பெண்களுக்கு வேலையிருக்கவில்லையென அறிய நேர்வது - இது நிகழ்ந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - வியக்கவைக்கிறது.<br /><br />இதேபோல Isabelle Eberhardt ம் தனது வீட்டை விட்டு தப்பியோடும் நோக்கிலேயே பயணிக்கிறார். பெற்றோரை, துணைவரை அல்லது குழந்தைகளை இழந்து அந்த இழப்பிலிருந்து விடுபடுமுகமாகப் பயணித்தவர்களுமிருக்கின்றனர். அதேவேளை இன்னும் சிலர் புதிய பிரதேசங்களை அறிந்துகொள்ளவும், துணைவர்களைத் தொடர்ந்தும், மிசனரிகளாகவும் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.<br /><br />பயணித்தலென்பது பெண்கள் பலருக்கு ஆற்றுப்படுத்தலாகவும், இனியும் சமரசம் செய்துகொள்ள முடியாத சூழலில் இருந்தான விடுபடலாகவும், மென்மேலும் அறிவை விசாலப்படுத்தும் திறவுகோலாகவும், அனைத்துக்கும் மேலாக ஓர் பேருவகையாகவுமிருந்திருக்கிறது.<br /><br /><strong>3. தனித்துவமும் முக்கியத்துவமும்</strong><br /><br />கனேடிய ஓவியரான Emily Carr ன் அனுபவம் பெண்கள் பயணிப்பதன் முக்கியத்துவத்தினையும் அதன் தனித்துவத்தினையும் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.<br /><br />புகழ்பெற்ற ஓவியரான இவர் கனடாவின் வடமேற்குப் பகுதியிலமைந்த போக்குவரத்து வசதிகளற்ற Kitwancool எனும் தொல்குடியினரின் கிராமத்துக்குப் பயணிக்கிறார். அவர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் totem poles (வினைத்திறனுடன் செதுக்கப்பட்டு நிறமூட்டப்பட்ட உயரிய மரக்குற்றிகள்) னை படமாக வரைந்து வருவதே அவரது நோக்கம். விசாரித்தவரை அனைவரும் அக்கிராமத்துக்குப் பயணிப்பது இயலவே இயலாத காரியமென எடுத்துக்கூறியும், இறுதியாக கிராமத் தலைவரின் மகன் அருகிலுள்ள சிறிய நகரமொன்றுக்குப் பொருட்களை ஏற்றிச்செல்ல வந்து போவதறிந்து அவனுடன் இணைந்துகொள்கிறார். கிராமத்தில் வந்திறங்கியதும் அவர்கள் அவரை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ள மறுத்து நள்ளிரவில் தனியே நாய்களுக்கு நடுவில் வெளியே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். பின்னர், கிராமத்துத் தலைவரை விட அதிக அதிகாரமும் மரியாதையும் கொண்ட அவரது மனைவி Emily Carr வந்த நோக்கமறிந்து அவரை ஏற்றுக்கொள்வதுடன் தமது வீட்டிலேயே தங்கவும் அனுமதிக்கிறார். அவர்களது குடும்பத்துக்குச் சொந்தமான totem poles னை படமாக வரைந்து, அதன் பிரதியொன்றை பின்னர் அனுப்பி வைப்பதாய் வாக்குறுதியுமளித்துத் திரும்புகிறார் Emily.<br /><br />அக்கிராமத்திலிருந்து திரும்பியதும் பொலிஸார் அவரை விசாரிக்க வருகின்றனர். அப்பழங்குடியினர் அவரை எவ்வாறு நடத்தினர், அவருடன் எவ்வாறு பழகினரென அறிய விரும்பும் அவர்கள், அப்பழங்குடியினர் தமக்குத் தந்த தொல்லைகளையும் - மிசனரிமாரை துரத்தியமை, மக்கள்தொகை கணக்கெடுப்பாளர், நில அளவையாளர் போன்றோரைக் கோடரிமுனையில் விரட்டியடித்தமையென - பட்டியலிடுகின்றனர். அம்மக்கள் தம்மத்தியில் வெள்ளையரை அனுமதிக்க விரும்பாமையையும், அங்கு செல்ல தாம் யாரையும் அனுமதித்திருக்க மாட்டோமெனவும், அதுவும் குறிப்பாக ஒரு பெண்ணை தனியே செல்ல விட்டிருந்திருக்கவே மாட்டோமென பொலிஸார் கூற, பதிலுக்கு Emily,<br /><br /><strong><em>"Then I am glad I did not ask for your advice. Perhaps it is because I am a woman that they were so good to me"</em> என்கிறார்.</strong><br />(Emily Carr, Klee Wyck)<br /><br />அவரது இப்பதில் மிகக் கவனத்திற்குரியது. எந்தவொரு வெள்ளையினத்தவரையும் தம்மிடையே அனுமதிக்க மறுத்த அத்தொல்குடியினரின் நம்பிக்கையை ஒரு பெண்ணாயிருந்த காரணத்தினால் தன்னால் வென்றுவிட முடிந்ததென அவர் கூறுமிடத்து, ஒரு இனக்குழுமத்தை ஒரு பெண் அணுகுவதற்கும் ஆண் அணுகுவதற்குமிடையிலான வேறுபாட்டினை உணர்ந்துகொள்ள முடிகிறது. அவரதந்த அணுகுமுறை அவரது அருகாமையில் பாதுகாப்பாய் உணரவைப்பதாலேயே அம்மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தலைப்படுகின்றனர். இதே கிராமத்துக்குப் பயணித்து வந்த ஒரு ஆணின் பயணக்குறிப்பு நிச்சயம் Emily யின் குறிப்புக்கு நேர்மாறானதாக - பொலிஸாரின் கருத்தினையொத்ததாக - இருந்திருக்கக்கூடும். அதேபோல, மார்க்கோ போலோ அல்லது தொன் ஜுவானினிடத்து ஒரு பெண் பயணித்திருப்பாளாயின் உலக வரலாறு இன்றைக்கிருப்பதற்கு முற்றிலும் நேர்மாறானதாக அமைந்திருந்திருக்கலாம். ஆகக்குறைந்தது, தென்னாபிரிக்க மற்றும் தென்னமெரிக்க தங்கச் சுரங்கங்கள் கொள்ளையடிபடுவதும், பல தொன்மையான இனக்குழுமங்களும் நாகரிகங்களும் அழிந்து போவதும் கொஞ்சமாவது பிற்போடப்பட்டிருந்திருக்கலாம்.<br /><br />ஒரு பண்பாட்டை எவ்வாறு புரிந்துகொள்வதென்பது எம்முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி. இந்தியாவில் பலியும், காளைச் சண்டையும் தடைசெய்யப்பட்டிருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது போன்றதுதான் இதுவும். மனிதநேயம் மற்றும் விழுமியங்களினடிப்படையில் அவை சரியானதாகத் தோன்றலாம், ஆனால் ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்வது, அதன் நிலைபேற்றுக்குத் துணைநிற்பதென்றதனடிப்படையில் இத்தடைச்சட்டங்கள் தோல்வியடைந்துவிட்டனவெனவே கூறவேண்டும். குறித்ததோர் மக்கள் குழுவொன்றன் நம்பிக்கைகள் எமது நவ நாகரிக விழுமியங்களுடன் ஒத்துவராமற் போனமைக்காக அவற்றை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்துவது எந்தவகையில் நியாயமென்ற கேள்வியெழுகிறது. புராதன நாகரிகங்களும் பண்பாடுகளும் இவ்வாறுதான் சிறிது சிறிதாகச் சிதைக்கப்பட்டன. ஒரு முஸ்லிம் பெண் பர்தா அணியலாமா இல்லையாவென்பதை அவள்தான் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மற்றவர்களல்ல (இந்த மற்றவர்களுள் மேற்குலகின் சமத்துவவாதிகளும் உள்ளடங்குவரென்பதையும் கவனத்திற்கொள்ளவும்), ஆனால் அவளை அவ்வாறு அணிந்துகொள்ள நிர்ப்பந்திக்கும் புறக்காரணிகளை வேண்டுமானால் விமர்சிக்கலாம். இந்தவகையில்தான் Rebecca West, Mostar ல் பெண்கள் அணியும் - பர்தாவினையொத்த - ஆடையினை விமர்சிக்கும் விதமும், Anna Leonowens சீயத்தின் அரண்மனை மகளிர் பற்றி எடுத்துக் கூறுவதும் (இவரது The English Governess at the Siamese Court நூலின் பயணக்குறிப்புக்களைத் தழுவி Anna and the King of Siam எனும் நாவல் Margaret Landon னால் எழுதப்பட்டது. பின்னர் அக்கதை திரைப்படமாக வெளியாகி பெரும் புகழ் பெற்றிருந்தது) முக்கியத்துவம் பெறுகின்றன.<br /><br /><strong><em>"..The austere yet lubricious beauty of the coat gives a special and terrifying emphasis to the meaning inherent in all these Eastern styles of costume which hide women's faces. That meaning does not relate directly to sexual matters; it springs from a state of mind more impersonal, even metaphysical, though primitive enough to be sickening. The veil perpetuates and renews a moment when a man, being in league with death, like all creatures that must die, hated his kind for living and transmitting life, and hated woman more than himself, because she is the instrument of birth, and put his hand to the floor to find filth and plastered it on her face, to affront the breath of life in her nostrils. There is about all veiled women a sense of melancholy quite incommensurate with the inconveniences they themselves may be suffering. Even when, like the women of Mostar, they seem to be hastening towards secret and luxurious of humorous love-making, they hint of a general surrender to mortality, a futile attempt of the living to renounce life."</em><br /></strong>(Rebecca West, <em>Black Lamb and Grey Falcon</em>)<br /><br />இத்தகைய ஆடையணிவது மடத்தனம், அல்லது மேலாதிக்கமென ஒரேயடியாக மறுக்காமல் அதன் பின்னணியிலான ஆடையின் அரசியல் குறித்து ஆராய்வது சுவாரசியமெனப் படுகிறது. அத்துடன் அசௌகரியத்தை புறவயமாக மட்டும் பார்க்காமல் அதன் பின்புலத் தோற்றப்பாடுகள் சாராம்சங்களையும் தனது அபிப்ராயமாக வெளியிடுகிறார் Rebecca West. முகத்தினை மறைத்த ஆடைகள் வெறுமனவே ஆடையென்ற நிலையையும் கடந்து ஆண்மனதின் தொன்மைவாய்ந்த தாழ்வுச்சிக்கலின் வெளிப்பாடாகத் தோன்றுகின்றன அவருக்கு. இந்தவிடத்தில், இத்தகைய ஆடைகளுக்கு ஆண்களால் அளிக்கப்பட்டு வந்த விளக்கமும் அதன் நியாய அநியாயங்களும் மீள்வாசிப்புச் செய்யப்படுகின்றன.<br /><br /><strong>4. பயணங்கள் கட்டமைக்கும் பெண்ணிய வெளியும் தமிழ்ச்சூழலும்</strong><br /><br /></span><span style="font-size:85%;"><strong><em>ஒரு நிறைவேறாத காதலில்<br />துடைத்தெறிய முடியாத<br />இரு கண்ணீர்த்துளிகளாய்த் தேங்கித்<br />ததும்புகின்றன</em><br /></strong>(குட்டிரேவதி, <em>முலைகள்</em>)<br /><br />பெண்ணுடலின் ஓர் அங்கமான முலைகள் மீதான ஆண்களின் கவர்ச்சி, காமம் சார் மதிப்பீடுகளைத் தகர்த்தெறிந்து மீந்திருக்கும் உணர்வுகளின் தடயமாய் அவற்றைப் படிமமாக்குகிறார் குட்டிரேவதி. உடல் பற்றிய பெண்ணியவெளி இதிலிருந்து உருக்கொள்கிறது. அதேபோல, உலகு பற்றிய பெண்ணியவெளியின் தோற்றத்தினை Mary Morris இவ்வாறு குறிப்பிடுகிறார்:<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>"The late John Gardner once said that there are only two plots in all of literature. You go on a jouney or a stranger comes to town. Since women, for so many years, were denied the journey, they were left with only one plot in their lives - to await the stranger...</strong><br /><br /><strong>..From Penelope to the present, women have waited - for a phone call, a proposal, or the return of the prodigal man from sea or war or a business trip. To wait like patients for a doctor, commuters for buses, prisoners for parole, is in a sense to be powerless. If we grow weary of waiting, we can go on a journey. We can be the stranger who comes to town."</strong></em><strong><br /></strong>(<em>The Virago Book of Women Travellers:</em> Edited by Mary Morris)<br /><br />காத்திருத்தல் அதிகாரமற்றிருத்தலைக் குறிக்கிறது; பயணித்தல் அதனைக் கைப்பற்றிக்கொள்வதாகிறது. இதுகாலம் வரை பெண்களுக்கென விதிக்கப்பட்டிருந்த - அன்பினையோ, வேறெதனையோ நோக்கிய - காத்திருத்தலை விடவும், அதனை நாடிச் செல்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பெண்களுக்கானதோர் அல்லது பெண்களது பார்வையிலான வெளியொன்றினைக் கட்டமைப்பது சாத்தியமாகிறது. சபிக்கப்பட்ட திருமண வாழ்க்கையை விட்டு விலகியோடும் பெண்ணுக்கு பயணம் விடுபடலாகிறது; எதிர்பாராதவிதமாக குடும்பத்தினரையோ உறவினரையோ இழந்தவளுக்கு ஆற்றுப்படுத்தலாகிறது; இன்னும் சிலருக்கு அறிவு; அழகு; அனுபவம்; சமயங்களில் பேருவகை. இவை அவற்றுக்காகக் காத்திராமல் அவற்றை நாடிப் பயணித்தமையாலேயே சாத்தியமாகின. இனி, அந்த வெளியானது குறித்த பெண், அவளைச் சுற்றியுள்ள மனிதர்கள், சமூகம், ஏன் நிலப்பரப்பு அனைத்தையும் சார்ந்து இயங்கத் தொடங்குகிறது. மாற்றுவெளிகள் தமக்கிடையே சமாந்தரமாகப் பயணிக்குமிடத்து மட்டுமே சமத்துவம் நிலவக்கூடும். தூர நோக்கின், இப்பயணங்கள் ஆண்-பெண் எனும் எதிர்நிலைகளுக்கிடையிலான சமாந்தரமான இயக்கத்தை நடைமுறைச் சாத்தியமாக்கவும்கூடும்.<br /><br />உடலும் உலகமும் தமக்கிடையே இடைவெளிகளின்றி தொடர்ந்தும் இடையீடு செய்தபடியே இருக்கின்றன, காலந்தோறும். உலகினையூடறுத்துப் பயணிக்கையில் ஒரு பெண் தனது உடல், அது பிரதிநிதித்துவப்படுத்தும் பாலினம் மற்றும் அது வெளியிடும் கவர்ச்சி தொடர்பான விழிப்புணர்வுடனிருக்க வலியுறுத்தப்படுகிறாள். அதேபோல, உடலினையூடறுத்துப் பயணிக்கையில் உடல் பற்றிய உலகின் மதிப்பீடுகள், கட்டுப்பாடுகள், வரையறைகளனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியவளாகிறாள். தற்போதைய தமிழ்ச்சூழலில் உடல் குறித்த உரையாடல்கள் தீவிரமாக நிகழ்ந்துவருகின்ற போதும், பெண் பயணிகளின் பயணப் பதிவுகள் மிக அருமையாகவே காணக்கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்ணியப் பயணவிலக்கியங்களென நோக்கின் வெறுமையே மிஞ்சும். பெண்கள் தனித்துப் பயணித்தல் இன்னமும் முறையாகத் தாராளமயப்படுத்தப்படாத சூழலில் இவ்விலக்கியங்களை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், உடலைப் போலவே உலகமும் மிக ஆழமான நுண்ணுணர்வுடன் ஆராயப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டியதொன்றென்ற பிரக்ஞை பெண்களுக்கு இருந்தாக வேண்டியது அவசியம். மற்றையது, உலகு பற்றிய தேடலின்றி - பெண்கள் தாம் தனித்தியங்க ஏதுவான - முழுமையான பெண்ணிய வெளி சாத்தியமில்லையென்ற புரிதலும் வேண்டும்.</span>Unknownnoreply@blogger.com17tag:blogger.com,1999:blog-19146565.post-84285553047810190712008-02-10T11:10:00.000-05:002008-02-10T11:16:06.221-05:00புழுவென மரணமூறும் தெருக்கள்<span style="font-size:85%;"><br /><br />இந்த நாள் ஒரு விசர்க்கனவோட விடிஞ்சது. அக்கா ஒரு பெரிய கட்டடத்திலையிருந்து கீழை குதிச்சு தற்கொலை செய்யுறா.. நான் கீழையிருந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறன் அவா விழுறதை.. ஒவ்வொரு மாடியாய்க் கடந்து கடந்து அவாட உடம்பு கீழை விழுந்து சிதறித் தெறிக்கிறதை பார்த்துக்கொண்டேயிருக்கிறன்.. எனக்குப் பக்கத்திலையிருந்த அப்பா அதைப் பார்க்கச் சகிக்காமல் நெஞ்சு வெடிச்சு இறந்து போறார்.. அப்பாவுக்காக அழுறதா, அக்காவுக்காக அழுறதா என்டிருக்கு எனக்கு.. இந்தா இந்த அழுகை அப்பாவுக்கு, இந்த அழுகை அக்காவுக்கென்டெல்லாம் சொல்லி வைச்சா மனுசர் அழுவினம்.. அழக்கூட திராணியில்லாமல் நான் தேம்புறன், தேம்பிக் கொண்டேயிருக்கிறன்.. அப்படியே தூக்கம் குழம்பினது.. இது வெறும் கனவுதான் என்டு நினைக்க கொஞ்சம் ஆறுதலாயிருந்தாலும், உண்மையாவே நான் தேம்பிக் கொண்டுதானிருந்திருக்கிறனென்டும் விளங்கினது.. தனியாப் படுக்கிறதும் ஒருவகையில் நல்லம்தான் போல..<br /><br />............<br /><br />'<span style="font-style: italic;">சுமிதாட அப்பாவை சுட்டுப்போட்டாங்கள்'</span><br /><span style="font-style: italic;">'யார் சுமிதா?</span>'<br /><span style="font-style: italic;">'சுமிதாவை நினைவில்லையா, அந்த மெலிந்த கேர்ள், துர்க்காட செட்</span>'<br /><br />அண்டைக்கு நானுமிருந்தன் அந்த இடத்தில், அது நடக்கிறதுக்கு சில நிமிஷம் முன்னுக்கு.. ஏதோ கனவு காணுறதைப்போல இருக்கு.. கனவெல்லாம் உண்மை போலவும், உண்மையெல்லாம் கனவு போலவும்.. ஏதோ கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறி வந்த நண்பனொருத்தன் தன்ரை கேர்ள் பிரெண்ட் க்கு கடைசியா ஏதோ குடுக்கவேண்டுமென்டு என்னட்டைக் குடுத்து அவட்ட குடுக்க சொன்னான்.. சரி சேர்ச்சில் சந்திப்பம் 7 மணிக்கென்டன்.. அவனைச் சந்திச்சு கதைச்சுத் திரும்பி வீட்டை வந்து சேர ஊடக நண்பரொருவரிட்டயிருந்து தொலைபேசியழைப்பு வருது, சேர்ச்சுக்கு முன்னுக்கு யாரையோ சுட்டுப்போட்டாங்கள், எங்கை நிக்கிறீங்களென்டு..<br /><br />'<span style="font-style: italic;">நான் இப்பதானெ அங்கயிருந்து வாறன்'.. </span><br /><span style="font-style: italic;">'இப்பதான் நடந்தது'..</span><br /><br />அப்பாட உடம்பில் ஏழு சூடு, அம்மாவுக்கு ஒன்டு.. பார்த்துத்தான் குடுத்திருக்காங்கள் போல, எல்லாத்திலயும் துணைக்கு நின்டவ இதிலையும் வாங்கட்டுமென்டு.. ஏன் இப்படி குரூரமான யோசனை வருதெனக்கு.. இதைவிட்டால் வேறை எதைத்தான் யோசிக்க..<br /><br />...........<br /><br />'<span style="font-weight: bold; font-style: italic;">மா</span><span style="font-style: italic;"> எங்கை பிடிக்கிறீங்கள்.. ஆள் இந்த உலகத்திலை இல்லை போல.. இன்னும் கொஞ்சம் தள்ளிப் பிடியுங்கோ இன்னும் தள்ளி..'</span><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">ககா மமா பப/ ககமம பபதத//</span><br /><br />வயலின் நடு ஓட்டைக்குள்ளயிருந்து புழுவொன்டு வந்து தண்டிக்கு மேலால் ஊர்ந்து போகத் தொடங்கினது.. சீஈஈ, புழூ.. அருவருத்து முடிய முதல் குவியல் குவியலாய் புழுக்கள் ஓட்டைக்குள்ளால் வந்து வயலின் முழுக்க ஊரத் தொடங்கினது.. விரலுக்கு மேலால், வில்லுக்கு மேலால்.. மிஸ்ஸ்ஸ், புழூஊஊ...<br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">மமா பபா தத/ மமபப ததநிநி//</span><br /><br />பக்கத்திலை இருந்த நண்பியை முழங்கையால் இடிக்கிறன். புழு.. அவள் திரும்பிப் பார்க்கிறதாவே காணேல்லை.. மிஸ்ஸ் என்டு திரும்ப, மிஸ் இருந்த இடத்தில் கோழியொன்டிருந்து வயலினுக்கால் வழிந்த புழுக்களை கொத்திக் கொண்டிருந்தது.. வியந்துபோய் வயலினைப் பார்த்தால் வயலின் ஒரு மலைப்பாம்பாய் மாறி என்ரை கையை சுத்திக்கொள்ளத் தொடங்கினது..<br /><br />அம்மாஆஆஆ..<br /><br />கத்திக்கொண்டு தூக்கியெறிந்தன்.. அம்மா எனக்கு இங்கையிருக்க பயமாயிருக்கு, எனக்கு பயமாயிருக்கு.. ஏன் என்னை இங்கை கூட்டிக்கொண்டு வந்தனீங்கள்.. என்னைத் திரும்ப கூட்டிக்கொண்டு போங்கோ.. எனக்கு இங்கையிருக்க ஏலாது.. ஏலாது.. புழு.. புழு.. தெருவெல்லாம் புழு.. வயலினுக்குள்ளயும் புழு.. என்ரை கையெல்லாம் புழு.. இது என்ரை கையில்லை.. எனக்கு இந்தக் கை வேணாம்.. புழு அரிச்ச கை.. கழட்டி வீச வேணும்.. எனக்கு வேணாம்ம்ம்ம்..<br /><br />...........<br /><br />வகுப்பு முடிஞ்சு வாறன்.. பொலிஸ் ஸ்டேஷனுக்கு முன்னுக்கு அந்த ஆன்ரி..<br /><br />'<span style="font-style: italic;">எங்கடை மகனை நேற்றுப் பிடிச்சுப் போட்டாங்களம்மா'</span><br /><span style="font-style: italic;">'அண்ணாவையோ ஏன், எப்ப?'</span><br /><span style="font-style: italic;">'இங்க தெரிஞ்ச பொடியன்ட வீட்டை வந்த நேரம்.. நேற்றிரவிருந்து றோட்டிலை உட்கார்ந்திருக்கிறன்.. இப்பதான் போய் சாப்பாடும் குடுத்துட்டு வந்தனான்.. இன்னும் கொஞ்ச நேரத்திலை விடுறனென்டு சொன்னவங்கள்..'</span><br /><span style="font-style: italic;">'ஐசி எல்லா வைச்சிருந்தவர் தானே..'</span><br /><span style="font-style: italic;">'ஓ.. வேலை செய்ற இடத்தின் கார்ட் எல்லாம் வைச்சிருந்தவன்'</span><br /><span style="font-style: italic;">'அப்ப கெதியா விட்டுடுவினம்.. நீங்கள் ஒன்டும் யோசிக்காதீங்கோ'</span><br /><span style="font-style: italic;">'விட வேணும்..'</span><br /><span style="font-style: italic;">'விடுவினம்'</span><br /><br />மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் புழுக்கள் பின்னுக்காலை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கு.. ஓடப் பார்க்கிறன்.. வெள்ளம் மாதிரி அடிச்சுக்கொண்டு வந்த புழுக்களோட நானும் அள்ளுப்பட்டுக்கொண்டு போறன்.. புழுவோட புழுவாய்.. இனி நானும்.. அம்மாஆஆஆஆஆ....<br /><br /><br /></span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19146565.post-58964320756649885732007-12-31T12:17:00.000-05:002007-12-31T12:27:58.444-05:00அரியத்திலுருளும் உணர்வுகள்<span style="font-size:85%;">பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் நான்<br />வலியெடுத்துக் கதறுமோர்<br />குழந்தையின் குரலில்<br />செய்தவைக்காகவும்<br />செய்யாமல் தவிர்த்தவைக்காகவும்<br />கதைத்தவைக்காகவும்<br />சமயங்களில் </span><br /><span style="font-size:85%;">கதைக்க மறுத்ததற்காகவும்<br />சுற்றியிருக்கும் அனைவருக்கும்<br />வெறுப்பினையே பரிசளித்தமைக்காக<br />பிறர் முதுகில் சுமையிறக்கி<br />ஆறுதலாக இளைப்பாறியமைக்காக<br />புன்னகைகளைக் கிழித்தெறிந்து<br />கருந்திரைகளைத் தொங்கவிட்டமைக்காக<br />இன்னமும் எனதன்பே,<br />விரல்கள்<br />நடுங்க மந்திரக்கோலைக் கைவிடும்<br />சூனியக்காரியொருத்தியின் பாவனையுடன்<br />உனதந்தச் சிவப்பு ரோஜாக்களை<br />வெளிறச் செய்தமைக்காக.</span>Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-19146565.post-57015248336405873662007-12-13T13:47:00.000-05:002007-12-14T10:59:30.268-05:00உனக்கும் எனக்குமிடையே ஒரு மூன்றாவது மனிதனைப்போல<strong><span style="font-size:85%;">காலம்:</span></strong><strong><span style="font-size:85%;"><em> இறுதித் தீர்ப்பு நாள்<br /></em>இடம்: </span></strong><span style="font-size:85%;"><strong><em>நியாய சபை<br /></em>நேரம்:<em> விஜயன் வேட்டையாடப் போவதற்கு சற்று முன்பு</em></strong><br /><br /><br />நாம் அங்கு காத்திருந்தோம் அந்நியர்களென,<br />தனிமையின் சுவரை எமக்கு நேரே வளர்த்திவிட்டு..<br />மௌனம் எமக்கிடையே<br />ஒரு மூன்றாவது மனிதனைப்போல அமர்ந்திருந்தது<br />எத்தனை குழந்தைகள் உன்னைச் சுற்றிலும், குவேனி*<br />தோளையும் முலைகளையும் பற்றித் தொங்கியபடி<br />காலை சுற்றிக்கொண்டு நகர விடாமல்<br />நான் கத்தியழ விரும்பினேன்<br />'நீ எனதும் அம்மாதானில்லையா?'<br />ஒரு பிடி நேசம்<br />சில கொத்து புன்னகை<br />சிறு துளி இடம் உன் மடியில்<br />வேறென்ன கேட்டேன் உன்னிடம்..<br />கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு<br />ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை<br />புதைத்து வைத்திருக்குமாற் போல<br />'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய்<br />இல்லாதுவிட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து தப்பித்திருக்க மாட்டாய்<br />உன்னிடத்திலோர் அரக்கி இருந்திருந்தாலும்..<br />ஆனால், இன்று அவர்களுன்னை அரக்கியென்கிறார்கள்<br />கைப்பற்றிக் கொண்டதை தங்களதாம்..<br />தீர்ப்பு வழங்கப்பட்டு உரலில் தலையிடிபட<br />சிதறும் சதைத்துணுக்குகளை தேங்காய்த் துருவலென<br />பொறுக்கியெடுத்து ஏப்பமிடுகின்றனர் உனது குழந்தைகள்<br />இது ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வேளையல்ல என்பது மட்டும் புரிகிறது<br /><br /><br />*குவேனி - இலங்கை பூர்வீகக்குடியொன்றின் அரசி. விஜயன் அவளைத் திருமணமுடித்து நாட்டைக் கைப்பற்றுகிறான். பின்னர் அவளைக் கைவிட்டு நாயக்க வம்ச அரசியொருத்தியை மறுபடி திருமணம் செய்கிறான். குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ள தனது குடியினரிடம் திரும்பிச் செல்பவள் காட்டிக்கொடுத்த துரோகியெனக் கருதப்பட்டு அவர்களால் கொல்லப்படுகிறாள்.<br /><br /><strong><em>(for the country I love, and for a life that demands us much more than it deserves..)</em></strong> </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:78%;"><strong>தலைப்பு </strong></span><span style="font-size:78%;"><strong>நன்றி : அருந்ததி ரோய்</strong> - 'The silence sat between grandniece and baby grandaunt like a third person' (pg.22), <em>The God of Small Things</em></span><em> </em>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-19146565.post-53760250617951569742007-12-07T21:39:00.000-05:002007-12-07T22:26:01.935-05:00பிரதிகளை மீளப் பதிதல் - 3<strong>See No Evil, Hear No Evil, Speak No Evil..!<br /></strong><br /><span style="font-size:130%;"><strong>Funny Boy</strong><br /></span><strong><em>- Shyam Selvadurai<br /></em></strong><br /><span style="font-size:85%;">குழந்தைகள் தொலைந்து கொண்டிருக்கும்<br />நாட்டை<br />பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு<br />நேசித்தல் என்பதுகூட<br />நம்மை நாமே சிதைத்து<br />உருவழிப்பதுதான்...<br /><br />(இளங்கோ -<em> நாடற்றவனின் குறிப்புகள்</em>)<br /><br /><br />1.<br /><br /></span><span style="font-size:85%;"><strong><em>Right and wrong, fair and unfair had nothing to do with how things really were. I thought of Shehan and myself. What had happened between us in the garage was not wrong. For how could loving Shehan be bad? Yet if my parents or anybody else discovered this love, I would be in terrible trouble. I thought of how unfair this was and I was reminded of things I had seen happen to other people, like Jegan, or even Radha Aunty, who, in their own way, had experienced injustice. How was it that some people got to decide what was correct or not, just or unjust? It had to do with who was in charge; everything had to do with who held power and who didn't. If you were powerful like Black Tie or my father you got to decide what was right or wrong. If you were like Shehan or me you had no choice but to follow what they said. But did we always have to obey? Was it not possible for people like Shehan and me to be powerful too? I thought about this, but no answer presented itself to me.<br /></em></strong>(Selvadurai, Shyam - Funny Boy <em>pg.274</em>)<br /><br /><br />பேசுவதற்கும் சொல்வதற்கும் எதுவுமற்றுப் போன பொழுதொன்றில், அனுமானங்கள்.. போலிகள்.. வாதங்கள்.. வாய்ப்புக்கள்.. என நீண்டுகொண்டே போகும் பரீட்சைக் குறிப்புகளைத் தூக்கியெறிந்து கட்டிலில் கால் நீட்டியபடியமர்ந்து சுவாரசியமாய் எதையும் வாசிக்க ஆரம்பித்தாலும்.., இப்படித்தான் எங்காவதோர் புள்ளியில் வாசிப்பின் தொடர்ச்சி அறுபட்டுவிட, சாளரங்களுக்கப்பால் வெளிறலாய் விரிந்திருக்கும் வானத்தை வெறித்தபடி சிந்தனையில் ஆழ்ந்துவிட வேண்டியிருக்கிறது. வீட்டினருகில் நின்ற மாமரம் வெட்டப்பட்டதில் இப்போதெல்லாம் யன்னல் முழுவதையும் நிறைத்திருப்பது அந்த வெளிறிப்போன வானம் மட்டும்தான். அம்மாமரத்துக் கிளைகளினூடு ஓடித்திரிந்து கொண்டிருந்த அணில்குஞ்சு இப்போது எங்கே தஞ்சமடைந்திருக்கும்? மயில்நீலநிற செண்பகமொன்று வந்து குரலெழுப்பியபடியிருக்குமே, அது எங்கே போயிருந்திருக்கும்? காகங்கள், குயில்கள், புழு பூச்சிகள்.. எத்தனைக்கு உறைவிடமாயிருந்திருக்கும் அம்மரம்? இன்று அதன் இருப்பைப் பறைசாற்றிப்போக எஞ்சியிருப்பது, அது இருந்த இடத்தை இப்போது நிறைத்துக் கொண்டிருக்கும் வெறுமை.. வெறுமை மட்டுமே. எதிர்வீட்டுக்காரர்கள் மரத்தை ஏன் வெட்டினார்கள், எதற்கு வெட்டினார்களென்பது பற்றி நாம் கேள்விகேட்க முடியாது.. இஷ்டத்துக்கு வெட்டித்தள்ள அதென்ன உங்கள் தனிப்பட்ட சொத்தா என வாதிடவும் முடியாது.. வாழைப் பொத்திகளாய் மனிதவுடல்கள் அறுபட்டுவிழும் தேசமொன்றில் வாழ்ந்துகொண்டு மரத்தைப் பற்றிக் கேள்வியெழுப்ப எமக்கு எந்த அருகதையுமில்லை.. ஆமாம், எதற்குமொரு தகுதி/ அதிகாரம் வேண்டும்.<br /><br />Funny Boy வாசித்துக்கொண்டிருந்தபோது, இந்தப் புள்ளியில்தான் என் வாசிப்பு அறுபட்டது.<br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHYsKyofX6MWhlNDU1ruwwqEEyE1W8iokbuj41yn9ISlP1Hx3WtsLyKDh2mlpT_rQmEziIoMS0sxbdhQDCJL-B5FstEFwDM4HgbxQBypQEClbSJMRm3zezgVopu2-j7wD35th51Q/s1600-h/funnyboycover.jpg"><span style="font-size:85%;"></span></a><span style="font-size:85%;">கொழும்பின் உயர்மட்டத் தமிழ்க் குடும்பமொன்றில் பிறந்த அர்ஜூன் (அர்ஜி) எனும் சிறுவனின் பார்வையில் 70 மற்றும் 80 களில் கொழும்பின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை - அவற்றின் அபத்தங்களை - ஒருவித கிண்டல் தொனியுடன் விமர்சித்திருக்கிறார் ஷ்யாம் செல்வதுரை. Funny Boy என குறிப்பிடப்படும் அர்ஜி தனது Homosexuality யுடனும், இனங்களுக்கிடையே கடும் முறுகல் நிலை காணப்படும் சமூகத்தில் தனது இருப்பினை நிலைநாட்டவுமான போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்கிறானென நீள்கிறது கதை.<br /><br /></span><span style="font-size:85%;">பால்/ பாலினம் ஆகிய கருத்தாக்கங்கள் தொடர்பான போதிய விளக்கம் கதையுடன் தொடர்வதற்கு அவசியமாகின்றது. பால் வேறுபாடானது உயிரியல் ரீதியாகவும், பாலின வேறுபாடானது சமூக ரீதியாகவும் பெண்களையும் ஆண்களையும் வேறுபடுத்துவது இங்கு கவனிக்கத்தக்கது. பால் வேறுபாடெனப்படுவது உயிரியல் ரீதியாக, இனப்பெருக்க உறுப்புக்களின் வேறுபாடுகளினடிப்படையில், பிறப்பின் மூலம் தீர்மானிக்கப்படுவது. இங்கு உறுப்புக்களே பெண்/ ஆண் ஆகிய அடையாளங்களைத் தோற்றுவிப்பனவாக இருப்பதுடன், இவை வெறும் உடல்சார் வேறுபாடுகளாக மட்டுமே காணப்படுகின்றனவே தவிர, இக்கருத்தாக்கத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமிருப்பதில்லை. ஆனால், நடைமுறை வாழ்வில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண் அவனை விடத் தாழ்ந்தவளாகவும் காணப்படுவதான மனநிலையைக் கட்டியெழுப்புவதில் பாலினம் என்ற கருத்தாக்கத்தின் பங்கு அளப்பரியது. இது சமூகத்தில் பெண்/ ஆணின் நிலையினைத் தீர்மானிப்பதாக அமைவது. பெண்பிள்ளை காலை அகட்டி உட்காரக் கூடாது, சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது.. ஆண்பிள்ளை அழக்கூடாது.. என்பவற்றில் தொடங்கி, பெண் குழந்தைக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஆண் குழந்தைக்கு நீலநிறத்திலும் உடுப்பு தைப்பது முதல்.. சமைத்தல், கூட்டுதல், துவைத்தல், பிள்ளைகளைப் பராமரித்தலாகிய இன்னபிற வேலைகள் பெண்களுக்கானவை.. வேலைக்குப் போதல், சம்பாதித்தல், காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு பத்திரிகை வாசித்தல் போன்ற வேலைகள் ஆண்களுக்கானவையென்பது வரையான அனைத்தும் பாலின வேறுபாட்டுக்குள் உள்ளடங்குபவை. இதனடிப்படையில் தான், <strong>பெண்ணியமென்பது 'பெண்' பற்றியதோ, 'பெண்'ணிடம் பேசுவதோ, 'பெண்'களால் பேசப்படுவதோ அல்ல. பெண்ணியம் பாலின அடிப்படையில் தொழிற்படும் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியதென</strong> அ.மங்கை எடுத்துக்கூறுகிறார். அந்தவகையில் ஷ்யாம் செல்வதுரையின் அர்ஜி, இந்தப் பாலின அடிப்படையில் செயற்படும் ஒட்டுமொத்தச் சமூகத்தினை கேள்விக்குள்ளாக்குமொரு கதாபாத்திரமாக விளங்குகிறான். ஆழ்ந்து சிந்திக்கையில், எமது சமூகத்தின் உயிர்நாடியான இந்தப் பாலின ஒடுக்குமுறை சார் மனப்பான்மையை வேரோடு களைவதற்கான மாற்று வழியாக (An alternative way) Homosexuality யினை முன்வைக்கலாமெனவும் எண்ணத் தோன்றுகிறது.<br /><br />சிறுவயதிலேயே அர்ஜிக்கு பெண்களின் விளையாட்டுக்களில் ஈடுபாடு அதிகம். அண்ணன்மார் விளையாடும் கிரிக்கட்டை விடவும், பெண்பிள்ளைகளின் விளையாட்டுக்கள் அதிகளவு புதிதாக்கும் ஆற்றலுடையதாகக் (creative) காணப்படுவது அவனை ஈர்க்கிறது. அவர்கள் விளையாடும் bride - bride (மணப்பெண்) விளையாட்டில் கற்பனைக்கு இடம் அதிகம். ஒரு திருமண வீடு எப்படியிருக்குமென கற்பனை செய்து, அதேபோல அலங்கரிப்பதும், வெளிக்கிடுவதும், அதை அப்படியே - ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக - செய்துபார்ப்பதும் என்றும் சுவாரசியமானவை. தேங்காய் சிரட்டைகளையும், காலியான தகர டின்களையும் கொண்டு திருமண கேக் ஒன்றை அலங்கரிக்கும் விதத்தை அர்ஜி கண்டுபிடிப்பதோடு, தனது கண்டுபிடிப்பு குறித்து பெருமையும் அடைகிறான். அண்ணன்மாரின் கிரிக்கட் அவனைப் பொறுத்தவரை வெறும் வறண்டுபோன விளையாட்டே, ஒரே பந்தை மாறி மாறி அடிப்பதும், பிடிப்பதுமென.. அதில் கற்பனைக்கு இடமில்லை.. சுவாரசியமுமில்லை.<br /><br />சிறுவயதில் நாங்கள் விளையாடிய விளையாட்டுக்கள் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றன. அக்கா, நான், இன்னும் எங்கள் ஒழுங்கையில் வசித்த இரண்டு மூன்று தோழிகள் சேர்ந்து விளையாடுவதில் எனக்கு அதிகம் பிடித்தது செத்தவீடு கொண்டாட்டம். இப்போது யோசிக்கத்தான் அந்த வயதிலேயே நாங்கள் எவ்வளவு குரூரமானவர்களாக இருந்திருக்கிறோமென்பது மனதில் உறைக்கிறது. மண்ணைக் கிண்டி எறும்பு, புழு, பூச்சியெல்லாம் பிடித்து அவற்றைக் கொன்று தீப்பெட்டிகளில் அடைப்போம். இது அக்காவினதும், வயதில் மூத்த மற்ற தோழிகளினதும் வேலை. பிறகு, எல்லாருமாகச் சேர்ந்து தீப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒழுங்கை முழுக்க ஊர்வலம் போய் ஓரிடத்தில் அவற்றைப் புதைத்து, மலர் தூவி, ஈர்க்குக் குச்சியால் சிலுவை செய்து வைத்து, சுற்றிவர நின்று அழுவோம். யார் கூடவாய் அழுவதென்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். இப்போது நினைக்க, இந்த நாட்டில் வாழ்வதற்குத் தகுந்த விதத்தில்தான் சிறுவயதிலேயே பயிற்சி (training) எடுத்திருக்கிறோமென்பது புரிகிறது. அதுதான் இன்றும், மரணங் குறித்த எச்சலனமுமில்லாமல் நீரோ மன்னனாய் பிடில் வாசித்துக் கொண்டிருக்க முடிகிறது போலும்.<br /><br />மணப்பெண் விளையாட்டில் அர்ஜி தான் மணப்பெண். சாரி உடுத்துவதும், பெண்ணாய் வெளிக்கிடுவதும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. அவர்களது விளையாட்டில் மணமகனுக்குத்தான் கடைசி இடம். யாரும் அந்தப் பாத்திரத்தை வகிக்க விரும்புவதில்லை.. அவரைச் சீண்டுவதுமில்லை. மணமகன் இல்லாமலேயே இவ்விளையாட்டைக் கொண்டுநடத்த அர்ஜி விரும்பினாலும், திருமணத்தின்போது மிகவும் இன்றியமையாத ஒருவராக மணமகன் விளங்குவதால், அது தவிர்க்க முடியாததாவது, குழந்தைகளின் உலகில் வளர்ந்த ஆண்களின் இடத்தை தெளிவாகப் புலப்படுத்துவதாக அமைகிறது. அம்மாவின் நகைகளோடு விளையாடுவதும், மாமியின் மேக்கப் சாதனங்களை பரீட்சித்துப் பார்ப்பதுமென அர்ஜியின் 'பெண்தனங்கள்' (ஏனைய உறவினர்கள் குறிப்பிடுவதுபோல) குடும்பத்தினரின் கடும் விசனத்துக்கு அவனை ஆளாக்குகின்றன. இதன் விளைவாக பெண்களுடன் விளையாடக் கூடாதெனவும், அண்ணன்மாருடன் விளையாடும்படியும் அவன் நிர்ப்பந்திக்கப்படுகிறான்.</span><br /><br /><span style="font-size:85%;">மாற்றுப் பார்வையில்.., இவ்விடத்தே வெறுப்புக்காளாவதும், கேலிக்குள்ளாவதும் அர்ஜியெனும் சிறுவனோ அல்லது அவனது ஆளுமையோ அன்றி, பெண் தன்மையே எனலாம். பெண்களுக்கான தன்மையைக் கொண்டிருப்பதென்பது - அது பெண்ணாயிருக்கும் பட்சத்திலேயே Girly Girlish என கிண்டலுக்காளாகும் நிலையில் - ஒரு ஆணை சமூகத்தில் (இன்றளவும்) மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது. பொண்ணையன், ponds.. இன்னபிற பட்டப்பெயர்கள் காத்துக்கொண்டிருக்க, இந்தப் பெண் தன்மையினை நிர்ணயித்தது யார்/ எதுவென்ற கேள்வி - அத்தன்மை சமயங்களில் ஆண்களுக்கானதாகவும் இருக்கையில் - எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அர்ஜியின் மற்றுமொரு சகோதரி மீனா ஆண்பிள்ளைகளுடன் கிரிக்கட் விளையாடுவதைக் கண்டுகொள்ளாத சமூகம் அர்ஜியை மட்டும் பெண்பிள்ளைகளுடன் விளையாடுவதைக் கண்டித்தது ஏன்? ஒரு பெண், ஆணுக்குரிய தன்மைகளைக் கொண்டிருப்பது (அதாவது சமூகம் நிர்ணயித்த வீரம், கம்பீரம், etc. etc.) பொதுவாக பெருமைக்குரியதாகவே - பாரதியாரால் கூட - கருதப்பட்டிருக்க, ஒரு ஆண், பெண்ணுக்குரிய தன்மைகளைக் கொண்டிருப்பது கேலிக்குள்ளாக்கப்படும் பட்சத்தில் இங்கு உண்மையில் கீழ்த்தரமாக மதிக்கப்படுவது அந்த ஆணோ, வேறெதுவுமோ அல்ல. மாறாக, பெண்களுக்குரியதென கூறப்பட்டிருக்கும் பண்புகளே. 'பெண்'ணாக இருத்தலென்பது கேவலம்.. ஆணாக இருத்தல் பெருமை.. என்றவகையில் முடிவு பெறப்படுமானால், இந்த பெண்/ ஆண்தனங்கள் இருபாலாருக்குமிடையே விரவிக்காணப்படும் பட்சத்தில் இன்னவின்னது, இன்னாருக்கானதென இவற்றை வகைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமெனவும் நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />அன்றாட உரையாடலில் இடம்பெறும், 'அவளொரு ஆம்பிளை மாதிரி..' என்பது பாராட்டு/ ஒரு compliment ஆகவும், 'அவனா.. அவனொரு பொம்பிளை..' என்பது அதற்கெதிரான நக்கல் தொனியைக் கொண்டிருப்பதும் ஏனென்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. சராசரி மனிதர்களை விடுத்துப் பார்த்தாலும், ஆனானப்பட்ட அறிவுஜீவிகளாக, பெண்விடுதலையில் அக்கறை கொண்டவர்களாகத் தங்களை இனங்காட்டிக்கொள்ளும் பலரின் மத்தியிலும் இவ்வார்த்தைப் பிரயோகங்கள் சர்வசாதாரணமாகவிருக்க (உ+ம்:- ஆம்பிளைகள் மாதிரி ஸ்மார்ட்டாயிருக்கிறாள்), மனிதர்கள் எத்துணை சாமர்த்தியமாக தங்களது குரூர முகங்களையும், அறிவீனங்களையும் அறிவெனும் திரைக்குள் மறைத்துக்கொண்டு விடுகிறார்களென யோசிக்கையில், அறிவையே மறுதலிக்க வேண்டியிருக்கிறது. அவனொரு பொம்பிளையென எவரையாவது சுட்டிக்காட்டி எவரும் கூறுவார்களாயின், நரம்புகளைப் புடைத்துக்கொண்டு சீறியெழும் எனது கோபம் நியாயமானதுதானென அர்ஜி உணர்த்தி விட்டிருக்கிறானென்றே கூறவேண்டும். (அந்தக் கோபம் குறித்த ஆணின் மீதான பரிவினால் எழுந்ததல்ல; மாறாக, பெண்ணாய் இருப்பதென்பது அவ்வளவு கேலிக்குரியதாய்ப் போனதாவென்ற விசனத்தோடு எழுந்ததென்பதையும் கவனிக்க).<br /><br />இத்தகைய - சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிகளினடிப்படையிலான - பிறழ்வுநிலைக் குணாம்சங்கள் மிக இயல்பானதும், அதிகாரத்தினை எதிர்க்கும் மாற்றுவெளியை நோக்கியதுமானதென Funny Boy எடுத்துக் காட்டுகின்றது. எமது இயல்பு அதுதானென்றால், அப்படியிருப்பதற்காக நாங்கள் வருந்தத் தேவையில்லை.., குற்றவுணர்ச்சிக்கும் ஆளாக வேண்டியதில்லையென அர்ஜிக்கு உணர்த்தும் நண்பனாக ஷெஹான் அறிமுகமாகிறான். ஷெஹானுக்கும் தனக்குமிடையிலான உறவு சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல.. குடும்பத்தவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாகுமென்பது புரிந்தாலும், அவர்களைப்போல தன்னால் இருக்கமுடியாதென்ற தெளிவு அவனுக்கு ஏற்படுகிறது.<br /><br />சரிகள் எதுவுமே எப்போதும் சரிகளாகவேயிருப்பதில்லை. அவற்றைப் பிழையாக்குவதற்கான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் அவை பிழையாகியே தீரும். சரி பிழைகளும், நியாய அநியாயங்களும் எப்போதும் அதிகார வர்க்கத்துக்கு சார்பானவையே. சரிகள் பிழைகளாவதும், பிழைகள் சரிகளாவதும் அதிகாரத்திலிருப்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டது அர்ஜிக்கு நினைவு வருகிறது. அவனது மாமி ராதா, சிங்களவர் ஒருவரை நேசிக்கிறார். இருதரப்புப் பெற்றோரின் எதிர்ப்பும், நாட்டின் முறுகல் சூழ்நிலையும் இனங்களின் பெயரால் அவர்களைப் பிரிய நிர்ப்பந்திக்கின்றன. அடுத்து, அப்பாவிடம் வேலைபார்க்கும் அவரது பால்யகாலத்துத் தோழனின் மகனான ஜெகன். முன்னர், இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததைக் காரணம் சாட்டி கொழும்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர், எதுவும் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்படுகிறார். எனினும், வேலைத்தளத்தில் ஜெகனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் கூட (சிங்களவர்) அவரையோ, அவரது வார்த்தைகளையோ மதிக்கத் தயாரில்லை. அறைக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைக் கிண்டுவது, தகாத வார்த்தைகளை சுவர்களிலும், கதவுகளிலும் எழுதிவைப்பதென 'தமிழ்ப் பயங்கரவாதி' (?!) ஒருவருக்குக் கீழே வேலை பார்ப்பதற்கான தமது மறுப்பை வெளிப்படுத்துகின்றனர். தனது வியாபாரம் முடங்கிவிடுமென பயந்த அப்பா ஜெகனை வேலையிலிருந்து நீக்கி, மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கிறார். தமதேயான வழிகளில் இவர்கள் அதிகாரத்தினால் பாதிக்கப்படுகின்றனர். தமது வாழ்க்கை, தமது விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.</span><br /><br /><br />2.<br /></span><br /><br /><br /><p><span style="font-size:85%;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifEucMoxQVjvx5tMNQYorGBFJiQ2rX49hraRbiNv5Giveio_E2CHsq9ELiyFHVVwtylAxoaBTa5U_nFLHnqGfdLYnX2tmoTyRDqT7sv3ZiPlJD-_ypfxcp6Kg5dBIQ-97vLhmQWw/s1600-h/funnyboycover.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5141433445314803282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifEucMoxQVjvx5tMNQYorGBFJiQ2rX49hraRbiNv5Giveio_E2CHsq9ELiyFHVVwtylAxoaBTa5U_nFLHnqGfdLYnX2tmoTyRDqT7sv3ZiPlJD-_ypfxcp6Kg5dBIQ-97vLhmQWw/s320/funnyboycover.jpg" border="0" /></a><br />வேறெதனையும் விட ஷ்யாம் செல்வதுரையின் இப்பிரதி உணர்வுகளோடு மிக ஒன்றித்துப் போனமைக்கு மற்றுமொரு காரணம், கொழும்பு நகரைக் களமாகக் கொண்டு இக்கதை இயங்குவது தானென்பேன். பசுமையான பின்னணியுடனான அழகிய கிராமத்துக் கதைகள் நகரங்களில் வளர்ந்த எம்மைப் போன்றவர்களுக்கு கனவுலகப் பிரதிமைகளாக மட்டுமே தோற்றமளிப்பன. நகர வாழ்வினையும், அதன் இறுக்கங்களையும், சாதக பாதகங்களையும் எடுத்தாளும் கதைகள் தமிழில் எழுந்தது மிகக்குறைவு. ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையோ, பெரும்பாலும் மேலைத்தேய நகரங்களைச் சார்ந்தனவாக அமைந்திருப்பதால் - எமது நகரங்களுக்கும் அவர்களுக்குமிடையேயான - பாரிய பண்பாட்டுப் பொருளாதார வேறுபாடு அவற்றுடன் அதிகம் நெருங்க அனுமதிப்பதில்லை. ஆனால், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்வின் அத்தனை அம்சங்களையும் இக்கதையில் காணும்போது - அர்ஜி நடந்த தெருக்களில் நானும் நடந்திருக்கிறேன்.. British Council, Cinnamon Gardens க்கு நானும் போயிருக்கிறேன்.. Chariot ல் அமர்ந்து Lamprais (special preparation of rice and curry that is baked in a banana leaf) சாப்பிட்டிருக்கிறேன் என - உணரும் பரவசம் எல்லையற்றது.<br /><br /></span><span style="font-size:85%;">கதை நிகழ் காலத்தைய கொழும்பின் பதட்டமான சூழ்நிலை யதார்த்தபூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இன்று அதனை மறுபடியும் வாசிக்கையில், இன்றைக்கு இரண்டு அல்லது மூன்று தசாப்தகாலத்துக்கு முன்னரிருந்த கொழும்புக்கும்,</span><br /><span style="font-size:85%;">இப்போதைக்கிருக்கும் கொழும்புக்கும் பொருளாதார தகவல் தொழினுட்ப முன்னேற்றங்களுக்கப்பால், பெரிய வேறுபாடுகளெதுவுமில்லை. அன்றைய பதட்டமும் முறுகல்நிலையும் இன்றுவரையும் தொடர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.<br /></span><br /><span style="font-size:85%;">கொழும்பு நகரம் பல்லினக் கலாசாரங்களையும் ஒன்றிணைக்குமொரு தளம். நகரங்களுக்கேயுரிய எந்திர வாழ்க்கைக்கு இது மட்டும் விதிவிலக்கல்ல. குறிப்பிட்டளவுகாலம் இங்கு வசிக்கும் எவரும் சக மொழியுடன் ஓரளவாவது பரிச்சயம்கொள்ளும் சூழ்நிலையை அது வழங்கிவிடும். சக இனத்தவரைப்பற்றிய குறைந்தபட்சப் புரிதலுக்காவது இது உதவக்கூடும். ஆனால், யுத்தமும் அதன் தீவிரம் நாட்டின் கேந்திர ஸ்தானம் வரை நீட்சியடைந்தமையும் ஒருவித தடித்த திரையென இனங்களைச் சூழ நிரந்தரமாக கவிந்துகொண்டு விட்டதது.<br /><br />50 களில் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களில் அர்ஜியின் அம்மாச்சியின் அப்பாவும் (great grand father) கொல்லப்படுகிறார். அந்தச் சம்பவம் அம்மாச்சியை சிங்களவர்களையே வெறுக்கும் தீவிர இனவாதியாக மாற்றுகிறது. வடக்கே விடுதலைப் போராட்டம் வெற்றிபெற்று தனித்தமிழீழம் சாத்தியமாகும் நாளில் அங்கு செல்லும் முதல் ஆளாக நானிருப்பேன் என்கிறார் அவர். தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக பிற்காலத்தில் வேலைவாய்ப்புப் பெறுவதைக் கருதி அர்ஜியை சிங்கள மொழிமூலத்தில் அவனது அப்பா படிக்க அனுமதிக்கும்போது, அவர் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதாகக் குற்றம்சாட்டவும் செய்கிறார் அம்மாச்சி. ராதா மாமியின் காதலும் அம்மாச்சியால் இவ்விதமே நிராகரிக்கப்படுகிறது. இதே காழ்ப்புணர்வு அவர்களைச் சுற்றியிருந்த சிங்களவர்கள் மத்தியிலும் காணப்பட்டபோதும், 83' கலவரத்தில் அர்ஜியின் வீடு காடையர்களால் தாக்கப்பட்டபோது அவர்களுக்குப் புகலிடம் தந்து பாதுகாப்பதும் சிங்கள நண்பர்களே.. மிக எளிதாக எதனையும் (இனங்களுக்கிடையிலான உறவை/ புரிதலைக்கூட) பொதுமைப்படுத்திவிட முடியாதென்பதற்கு இதுவொரு தக்க சான்று.<br /><br />கலவரம் நீடித்திருந்த நாட்களின் நிகழ்வுகள் நாட்குறிப்புப் பதிவுகளாக - நேரடி சாட்சியமாக இடம்பெற்றுள்ளன. வீடுகள் முற்றுமுழுதாக தாக்கியழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டமையும், தெருக்களில் கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்பட்டுக் கிடந்தமையும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் உணர்வுகளைஅதிரச் செய்வதாகவுள்ளது. கலவரத்தைத் தூண்டிவிட்டது அரசுதானென்பது தெருக்களில் தமிழர்களின் கடைகள், வீடுகள் மட்டும் சரியாகக் குறிபார்த்துத் தாக்கப்படுவதிலிருந்தும் (வாக்காளர் பதிவிலிருந்து தகவல் திரட்டியதாகக் கூறப்படுகிறது), மிக நீண்டநேரத்துக்கு அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்காமல் இழுத்தடித்துக் கொண்டமையிலிருந்தும், இராணுவத்தினரும், பொலிஸாரும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமல் தெருவில் வேடிக்கை பார்த்தபடியிருந்தமையிலிருந்தும் தெளிவாகிறது. 78' ல் சிறிமாவின் அரசாங்கம் கவிழ்ந்து ஐதேக ஆட்சியைக் கைப்பற்றியபோது நிலைமை சீரடையுமென நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த அர்ஜியின் அப்பா இனியும் இந்த நாட்டில் வாழ முடியாதென முடிவெடுத்து குடும்பத்துடன் கனடாவுக்குப் புலம்பெயர முடிவெடுக்கிறார். கலவரம் தொடங்குவதற்கு சிலகாலங்களுக்கு முன்னரேயே நாட்டைவிட்டு வெளியேறுவோமென அர்ஜியின் அம்மா அடிக்கடி வலியுறுத்தி வந்தபோதும், வெளிநாட்டில் போய் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்வதா என மறுத்திருந்த அப்பா, பின்னர் அம்மா சூழ்நிலையின் தீவிரத்தை ஆரம்பத்திலேயே முன்னுணர்ந்ததை வலியுடன் வியந்து கொள்கிறார்.<br /><br />புலம்பெயர்கையிலும் அவர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்பா பெரிய தொழிலதிபர், ஹோட்டலொன்றும் நடாத்தி வருபவர். ஆனால், தனது சொத்துக்களையெல்லாம் கைவிட்டு வெறுங்கையோடு நாட்டைவிட்டு வெளியேற நேர்கிறது. பணமாக மாற்றிக் கையில் கொண்டுசெல்லவும் அரசாங்கம் தடைவிதித்ததுடன், ஒருவர் குறிப்பிட்டளவு பணம் மட்டுமே கையில் கொண்டுசெல்லலாமெனவும் சட்டமியற்றியிருந்தது. அனைத்தையும் கடந்து, பயணிப்பதற்கு முதல்நாள் ஷெகானைச் சந்தித்துவிட்டு வரும்வழியில் எரிந்து சேதமாகிக் கிடந்த தனது வீட்டைப் பார்க்கச் செல்கிறான் அர்ஜி. பெரும்பகுதி தீயில் கருகிக்கிடக்க, எரியாதிருந்த அனைத்துமே களவாடப்பட்டு வீடு நிர்வாணமாய் நின்றுகொண்டிருந்தது. பிறந்ததிலிருந்து இத்தனைகாலம் வாழ்ந்த அவ்வீட்டின் நிலை அவனைக் கதறச் செய்கிறது.<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>How naked the house appeared without its door and windows, how hollow and barren with only scraps of paper and other debris in its rooms. I felt hot, angry tears begin to well up in me as I saw this final violation. Then for the first time, I began to cry for our house. I sat on the verandah steps and wept for the loss of my home, for the loss of everything that I held to be precious. I tried to muffle the sound of my weeping, but my voice cried out loudly as if it were the only weapon I had against those who had destroyed my life.<br /></strong>(pg.311)<br /></em><br />ஷ்யாம் செல்வதுரை முன்வைக்கும் அரசியல், சாதாரண மக்களுள் ஒருவராக நின்று நிகழ்வுகளை விமர்சிப்பதாலேயே அதிக கவனிப்புக்குரியதாகிறது.<br /><br /><br />3. </span><span style="font-size:85%;"><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPZByrw6K4S5oql4leDEm0dce3Nt1cRbpmefkTxksvJf0FpSxsUBADCeX95fc7wGgYzlm-iQoJ7-DJyvsIlFL7yfb3qh_IbyYZ3JTl6tBnUPXjRyXuy39iuPzEdTeRuG1TLJTB-w/s1600-h/selvadurai_shyam.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5141433441019835970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPZByrw6K4S5oql4leDEm0dce3Nt1cRbpmefkTxksvJf0FpSxsUBADCeX95fc7wGgYzlm-iQoJ7-DJyvsIlFL7yfb3qh_IbyYZ3JTl6tBnUPXjRyXuy39iuPzEdTeRuG1TLJTB-w/s320/selvadurai_shyam.jpg" border="0" /></a></span><span style="font-size:85%;"><em><strong>Sometimes I wonder if it was all worth it in the end. To have made all those sacrifices. Life is a funny thing, you know. It goes on, whatever decisions you make. Whether you married the person you loved or not seems to become less important as time passes.</strong><br />(pg.81)<br /></em><br />சுவாரசியமான கதாபாத்திரமாக இடைநடுவே வருபவர் Aunty Doris - ராதா மாமி நடிக்கும் 'The Kind and I' நாடகத்தை நெறியாள்கை செய்யும் Burgher சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை. தமிழரொருவரைத் திருமணம் முடித்து தற்போது கணவனையிழந்து வயதாகிவிட்ட நிலையில் இத்தகைய நாடக நெறியாள்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டுள்ள இவர் திருமணங்கள் குறித்து முன்வைக்கும் கருத்து குறிப்பிடத்தகுந்தது.<br /><br />தமிழரொருவரை விரும்பித் திருமணம் முடித்ததால் Aunty Doris ன் அப்பா கடுங்கோபங்கொண்டு மகளுடனான தொடர்புகளை முறித்துக்கொள்ளுமாறு குடும்பத்தினரையும் நிர்ப்பந்திக்கிறார். சில காலங்களில் குடும்பத்தினர் அனைவரும் சொல்லிக்கொள்ளாமலேயே இங்கிலாந்துக்குச் சென்றுவிட, அம்மா இறந்ததைக்கூட நண்பரொருவரின் வாயிலாகவே Aunty Doris அறிந்துகொள்ள நேர்கிறது. அப்பா இறந்ததன் பிற்பாடு தனது சகோதரிகளுடன் அவரால் தொடர்புகொள்ள முடிந்தாலும், காலம் அவர்களை அந்நியர்களாக்கி விட்டமையால் முன்புபோல் நெருக்கமாகப் பழக முடியாத தனது இயலாமையையும் நொந்துகொள்கிறார். கணவரும் இறந்துவிட, வயதான காலத்தில் தனியே இருக்கும்போது, நானும் அவர்களுடன் இங்கிலாந்துக்குச் சென்றிருந்திருக்கலாமோ, இருந்தால் எனது வாழ்க்கை இன்று வேறுவிதமாக இருந்திருக்குமென்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது அவருக்கு. காதலுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தும் இறுதியில் அவை பெறுமதியானவையா என்ற சந்தேகமும் எழுகிறது. காலப்போக்கில், நாங்கள் திருமணம் முடித்தது நாம் விரும்பியவரையா, இல்லையா என்பது முக்கியமற்றதாகவே போய்விடுமென்ற அவரது கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதே.<br /><br />திருமணம் பற்றியதை விடுத்துப் பார்த்தால், இக்கதாபாத்திரத்தினூடாக மிகக் கூர்மையான அரசியல் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.<br /><br /><br />4.<br /><br />இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கிய பாடப்பரப்பில் Funny Boy ஒரு Text book ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை - அதன் அரசியலைக் கருத்திற்கொண்டு நோக்கின் - அதிசயம்தான். அண்மைய இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு நடந்தது, அவர்கள் நடாத்தப்பட்ட விதம் அனைத்தையும் அறிந்துகொள்வதற்கான ஒரு புனைவியல் (முழுக்க முழுக்கப் புனைவல்லாத போதும்) சாட்சியமாக இதனைக் கொள்ளலாம்.<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>The araliya tree was bare of its flowers. They, too, must have been stolen. I was struck then by a bitter irony. These araliya flowers would probably be offered to some god as a pooja by the very people who had plucked them, in order to increase their chances of a better life in the next birth.</strong><br />(pg.311)</em><br /><br />குருடராய், செவிடராய், ஊமையாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாலும் இதனை விடவும் அழகாக அதிகார மையங்களை, அதன் நியாய அநியாயங்களை, சமூகத்தின் முரண்நகைகளைக் கேள்விக்குட்படுத்த முடியுமா என்பது சந்தேகமாகத்தானிருக்கிறது. </span><br /></span></p>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-19146565.post-8184030821573779802007-11-08T15:17:00.000-05:002007-11-09T14:33:47.984-05:00பிரதிகளை மீளப் பதிதல் - 2<strong>Baudolino </strong><br /><span style="font-size:85%;">by Umberto Eco</span><strong><br /></strong><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>1.<br /></strong><br /><strong>வரலாறு நமக்குத் தேவைதான், ஆனால் அறிவின் தோட்டத்தில் சீரழிந்து, நோக்கமின்றித் திரியும் தறுதலைக்குத் தேவைப்படும் விதத்தில் அல்ல.</strong><br /><em>- நீட்ஷே (Nietzsche, Of <span style="font-family:lucida grande;">The</span> Use And Abuse Of History)<br /></em><br /><br />இந்த வரலாற்று மற்றும் மர்ம நாவல்கள் மீதான மோகம் அக்காவிடமிருந்து தொற்றிக் கொண்டதாயிருக்க வேண்டும். பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கப் பழகியிராத வயதுகளில், விழிகளை உருட்டி உருட்டி அக்கா கதைசொல்லும்போது வாய் பிளந்தபடி நானுமொரு கதாபாத்திரமாய் அந்தக் கதைகளுக்குள் வாழ்ந்திருக்கிறேன். அவளொரு சிறந்த கதைசொல்லி. சம்பவங்களை விழிமுன் படமென விரியச் செய்வதிலும், வரைபடங்கள் வரைந்து சமயங்களில் நடித்தும் காட்டுவதிலும் அவளை மிஞ்ச யாருமில்லை. கதை கேட்கும் ஆர்வத்துக்காகவே புத்தகம் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்து, கதை சொல்லி முடியும்வரை நல்ல பிள்ளையாக சொன்னபடியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு காலம்.<br /><br />ஒன்பதோ பத்து வயதில் வாசித்த பொன்னியின் செல்வனிலிருந்து வரலாறும் அதன் மர்மங்களும் மிகவும் ஈர்க்கத் தொடங்கின. ஆதித்த கரிகாலனின் கொலை குறித்து அக்காவுடனும், தோழிகளுடனும் மணிக்கணக்காய் விவாதித்துக் கொண்டிருந்ததாய் நினைவு. அதைத் தொடர்ந்து வாசிக்க நேர்ந்த வரலாற்று நாவல்களில் மனதில் இன்னும் நிலைத்திருப்பது Paul Doherty யின் <em>The House of Death</em> - மாவீரன் அலெக்ஸாண்டரினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகையைப் பற்றியது. மன்னர்களின் பலவீனங்களை, தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தும் ஒரு மர்ம வரலாற்று நாவல். மற்றும் சில படங்கள் - ராஜராஜசோழன் வகையறா தமிழ்ப்படங்களல்ல -<em> First Knight, Brave Heart, Troy</em> போன்ற ஹொலிவுட் வணிகப் படங்களும், <em>The Grief of The Yellow River</em> (2ம் உலகமகாயுத்தத்தின் போதான சீனாவைக் கதைக்களமாகக் கொண்டதோர் படம்), <em>Les miserables, Anna and The King</em> போன்ற கொஞ்சம் நடுத்தரப் படங்களும், <em>Europa Europa,</em> Sabiha Sumar ன் <em>Silent Waters</em>, <em>Lumumba</em> போன்ற குறிப்பிடத்தக்கனவும், இன்னும் பெயர் நினைவுக்கு வராத சிலவும் ஏதோவொரு வகையில் வரலாறும் மானுடமும் பற்றிய புரிதலுக்கு வழிவகுத்தன.<br /><br />இவை அனைத்திலுமிருந்து வரலாறு குறித்த சில முடிவுகளுக்கு வர முடிந்தது:<br /><strong>- மானுட குல வரலாற்று அத்தியாயங்கள் பெரும்பாலும் கறைபடிந்தவை. அல்லது, கறைபடிந்தவை மட்டுமே அழியாக் காவியங்களாக வரலாற்றில் நீங்கா இடம்பிடிக்கின்றன.<br /></strong>ஒன்று மட்டும் புரியவில்லை. எல்லாமே அழிந்து கொண்டிருக்க அழிவு மட்டும் எப்படி அழியாது நிலைத்திருக்கிறது? வரலாற்றின் இந்தக் கறைபடிந்த அத்தியாயங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன? அவை எமக்கு எதைப் போதித்தன? ஆக்கத்தைவிட - மாபெரும் நகரங்களின், நாகரிகங்களின், கணக்கற்ற மானிடவுயிர்களின் - அழிவுதான் புகழ்ந்து போற்றப்படுகிறது; வீரமென்று மதிக்கப்படுகிறது. இந்த 'வீரம்' என்பதன் வரைவிலக்கணம் என்ன? 'அழிவு' என்பதா? அதில் பெருமைப்படுவதற்கும் போற்றப்படுவதற்கும் என்ன இருக்கிறது?<br /><br /><strong>- வரலாறென்பது பாதி புனைவும், மீதி உருட்டுப் புரட்டுகளும் கலந்தது.<br /></strong>இந்தப் பொறுப்பு வரலாற்றாசிரியர்களைச் சார்ந்தது. வரலாறும், கடந்தகாலமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவையென்கிறார் ஜோன்.எச்.அர்னோல்ட் <em>(History: A Very Short Introduction).</em> வரலாறு கடந்தகாலத்தை முழுமையாக வெளிப்படுத்தாது ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கும் அதேவேளை, கடந்தகாலமென்பது எண்ணற்ற ரகசியங்களின் புதைகுழியென வரலாற்றின் எல்லைகளைத் தாண்டியும் விசாலமான வெளியினை நோக்கி விரிந்திருப்பது. அதிகார வர்க்கத்தினரின் நலன்களைச் சார்ந்தவையும், அவற்றுடன் முரண்படாதவையும் மட்டுமே பெரும்பாலும் வரலாற்றில் தொகுக்கப்படுகின்றன. எங்கிருந்தாவது ஒன்றிரண்டு ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் ஒடுக்கப்பட்ட குரல்களைக் கணக்கிலெடுக்காது பார்த்தால், இன்று எம்மால் வரலாறெனப்படுவது ஒருவகையில் அதிகார வர்க்கத்தினரின் வரலாறு மட்டுமேயெனலாம். அதிலும் திணிக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் அநேகம். இலங்கையின் வரலாறு இதற்குத் தக்க சான்று.<br /><br />உம்பர்த்தோ ஈகோவின் <em>Baudolino</em> வினை இவ்வாறு வரலாற்றின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் அதே 'வரலாற்று' நாவலாகக் கொள்ளலாம். இக்கதையினூடாக ஆசிரியர் மத்தியகாலத்து வரலாறென நாம் அறிந்ததை/ நம்பிக் கொண்டிருப்பதைக் கட்டுடைக்கிறார்.<br /><br /><br />2.<br /><br /><br /></span><span style="font-size:85%;"></span><span style="font-size:85%;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLVvS_sVfUq8z5ZIwjaslSR8mGnPjJ3AiVaKgrnM_dQi5uH10X8Cfcw9QdRIgz5r_PO2dZDv55BoUuDuOwZohOVUsnQBp4JXodUNOyjyQxPugd8oyZYE6QvlhJdJLq3KZ-0sAfog/s1600-h/bauudolino.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5130684253971404818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLVvS_sVfUq8z5ZIwjaslSR8mGnPjJ3AiVaKgrnM_dQi5uH10X8Cfcw9QdRIgz5r_PO2dZDv55BoUuDuOwZohOVUsnQBp4JXodUNOyjyQxPugd8oyZYE6QvlhJdJLq3KZ-0sAfog/s320/bauudolino.jpg" border="0" /></a> <strong>"It's not the truth, but in a great history little truths can be altered so that the greater truth emerges. You must tell the true story of the empire of the Romans, not a little adventure that was born in a far-off swamp, in barbarian lands, among barbarian peoples..."<br /><br />"It was a beautiful story. Too bad no one will find out about it."<br /><br />"You surely don't belive you're the only writer of stories in this world. Sooner or later, someone - a greater liar than Baudolino - will tell it."<br /></strong><em>(pg.521)</em><br /><br /><br />பிரதியின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள எப்போதும் இறுதிப் பக்கத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது, இதுவே இந்நாவலை இதுவரை வாசித்திராதவர்களின் சுவாரசியத்தை போக்கி விடக்கூடுமென்றாலும்..<br /><br />1204ம் ஆண்டின் ஏப்ரல் மாதம். பட்டு மற்றும் வாசனைத் திரவியங்களின் பாதையில் <em>(Silk and Spice Route)</em> கேந்திர நிலையமான கொன்ஸ்தாந்து நோபிள் நகரம் 4வது சிலுவைப்போரை முன்னின்று நடத்தும் தளபதிகளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கீழை ரோமப் பேரரசின் (Byzantine Empire) முக்கிய வரலாற்றாசிரியரொருவரை (Niketas) போர்வீரர்களிடமிருந்து காப்பாற்றும் <em>Baudolino </em>தனது சுய வரலாற்றினை அவரிடம் சொல்லத் தொடங்குகிறான்.<br /><br />இத்தாலியின் பின்தங்கிய கிராமமொன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த <em>Baudolino</em> வுக்கு இரண்டு அற்புதமான வரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன: ஒன்று, எந்த மொழியினையும் இலகுவில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல், மற்றையது பொய் சொல்லும் திறமை. சிறு வயதிலேயே இவனது துடிதுடிப்பையும், ஆற்றலையும் கண்டு வியந்து பேரரசர் Frederick Barbarossa அவனைத் தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டு பாரிஸுக்கு அனுப்பி கல்விகற்கச் செய்கிறார்.<br /><br />இடைநடுவே தனது வளர்ப்புத் தந்தையின் துணைவியாரின் மீது <em>Baudolino</em> காதல் கொள்வதும், சிலுவைப் போர்களும், தனது பிறந்த கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களால் பேரரசருக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்ட நகரமொன்றை அழிக்கவென முற்றுகையிடும் அரசரிடமிருந்து அதனை தனது அசாத்தியத் திறமையால் காப்பாற்றுவதும், அரசரின் பெரு விருப்புக்குரியவனாக விளங்குவதால் வரலாற்றையே புரட்டிப்போடும் வல்லமையை நண்பர்களுடனிணைந்து பரீட்சித்துப் பார்ப்பதுமென நகர்கிறது கதை. இவையனைத்துக்குமிடையில் அரசர் ஜெருசலேம் மீதான படையெடுப்பின்போது வழியில் தற்செயல் விபத்தொன்றில் இறந்துவிட, Baudolino மன்னருக்களித்த வாக்குறுதியின் பேரில் தனது நண்பர்களுடன் Prester John எனும் மதகுருவால் ஆளப்படும் கனவுத் தேசமொன்றைத் தேடி (இந்தியா) கீழை நாடுகளை நோக்கிப் பயணிக்கிறான்.<br /><br />உயர்ந்த அறிவும், ஞானமும் கொண்ட பெண்கள் மக்களது மத நம்பிக்கையைக் கெடுத்து விடுவார்களென்ற பயத்தில் சூனியக்காரிகளென முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்பட்டமையும் நாவலில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அழிக்கப்பட்ட Hipatia எனும் பெண்ணொருவரின் சிஷ்யைகள் கீழைத்தேசத்துக்கு தப்பியோடி, தமது குருவின் வழிநின்று பெண்களால் மட்டுமேயான சமூகமொன்றைக் கட்டமைத்து வாழ்ந்து வருவதும் ஒரு குறிப்பாக இடம்பெறுகிறது. இனப்பெருக்கத்துக்கு அவர்கள் வேறேதோ creatures ஐ நாடுவதால் தனி மனிதப் பிறவிகளாயல்லாமல், மனிதவுருவமும் இடுப்புக்குக் கீழே ஆட்டினையொத்த உருவத்துடனும் காணப்படுகின்றனர். Prester John ன் தேசத்தைத் தேடிப்போகும் நண்பர்கள் தலைகளற்ற, ஒற்றைக் கால்களுடனான, முழந்தாள் வரை தொங்கும் காதுகளையுடைய மனிதவுருவங்களைக் காண்கின்றனர். அம்மனிதர்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக - சிலர் இயேசு மனிதவுயிராக அவதரித்தாரென்பதை நம்புபவர்களாகவும், சிலர் அதை மறுப்பவர்களாகவும், சிலர் தூய ஆவி வடிவத்தினை மட்டுமே நம்புபவர்களாகவும் - காணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் மேற்குலகு குறித்த அற்புதக் கனவுகளுடனும், அளப்பரிய ஆர்வத்துடனுமிருப்பதைக் காணும் நண்பர்கள் கீழைத்தேசம் குறித்து தாம் கொண்டிருந்த கனவுகளையும் அதன் இயல்பு நிலையினையும் நினைத்து ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர்.<br /><br />பயணம் வெற்றியென்றும், தோல்வியென்றும் கூறமுடியாத நிலையில் முடிந்துவிட, பன்னிரண்டு நண்பர்களில் ஆறுபேரை இழந்து மீதி ஆறுபேர் மட்டுமே ஊர் திரும்ப முடிகிறது. சில சச்சரவுகளால் நண்பர்கள் பிரிய நேர்ந்துவிட்டாலும், Niketas இடம் கதைகூறி முடிந்ததும், தனது சில வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பொருட்டு தனியொருவனாக Baudolino மீண்டும் கீழை நாடுகளுக்குப் பயணமாகிறான்.<br /><br />இங்கு Baudolino வின் உள்ளார்ந்த சிக்கல்களையும் குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் நேசித்த தன் வளர்ப்புத் தந்தையின் மரணத்துக்கு ஒருவகையில் தான் தான் காரணமென்ற உண்மை அவனைப் படுமோசமாக உறுத்தியமையே தந்தைக்காக, மறுபடியும் அந்தக் கனவு தேசத்தினை நாடிப் போவதற்கு அவனைத் தூண்டியதெனலாம். தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும், தந்தைக்கும் ஒரு உண்மையான மகனாக அவனால் இருக்க முடியாமற் போனமை, தாய் இறக்கும் தறுவாயில் கூட அவளருகே நிற்க முடியாமற் போனமை தனது கடமையிலிருந்து தவறிவிட்ட குற்றவுணர்ச்சிக்கு அவனை ஆளாக்குகிறது. மறுபுறம் அவனது பிரியத்துக்குரிய பெண்கள் மூவர்: முதலாவது பெண், அவனது வளர்ப்புத் தந்தையின் துணைவி. பதின்மங்களில் ஆரம்பித்த அவள் மீதான மோகம் பின்னர் தந்தைக்கு துரோகம் செய்கிறோமோவென கவலைப்பட வைத்ததில் நீர்த்துப் போனது. அடுத்தவள், அவனது மனைவி. அவனை விட மிகவும் இளையவள். கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு விபத்தில் உயிர்துறக்கிறாள். தன்னை முழுமையாக நேசித்த ஒரு பெண்ணுக்கு நல்ல துணைவனாகத் தானிருக்கவில்லையே என்பது இறுதிவரை அவனை வாட்டுகிறது. மூன்றாமவள், கீழைத்தேசத்தில் அவன் கண்ட Hipatia சமூகத்தைச் சேர்ந்தவொரு பெண். அவன் மறுபடியும் கீழைநாடுகளுக்கு பயணிப்பதற்கு அவளும் காரணமாகிறாள்.<br /><br />இவ்வாறு, அவன் கூறிய கதையில் எது உண்மை எது பொய்யென என குழப்பமடையும் Niketas அவனது வரலாற்றையும் கதையாக எழுத விரும்பி நண்பருடன் உரையாடும் பகுதியே மேற்குறிப்பிட்டது.<br /><br /><br /><strong>3.</strong><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtBTakzlHtiOB5JWe-YsxdiyVkMiDVfUzIyKFJPe0hcBDJW9Qble0TZmmOeUpojeUETEGNCBzB5K-N8Q8qz36Tc4MVfaGV_3uCgvebwakUMCI1LNcyVu0VfNkewECgTG8UmWClOA/s1600-h/umbertoeco.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5130684249676437506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtBTakzlHtiOB5JWe-YsxdiyVkMiDVfUzIyKFJPe0hcBDJW9Qble0TZmmOeUpojeUETEGNCBzB5K-N8Q8qz36Tc4MVfaGV_3uCgvebwakUMCI1LNcyVu0VfNkewECgTG8UmWClOA/s320/umbertoeco.jpg" border="0" /></a><br />மத்தியகாலத்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், அரசர்களுக்குமிடையே நிலவிய அதிகாரம் சார் போட்டியினை கதையோட்டத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது. அரசு பற்றிய கோட்பாடுகள் மாறுதலடையத் தொடங்கிய அக்காலகட்டத்தில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை முன்வைத்து அரசர்களும் திருச்சபையும் முரண்படத் தொடங்கினர். அரச அதிகாரமானது இறைவனிடமிருந்து மன்னனுக்கு நேரடியாக வழங்கப்படுகிறதென மன்னர்கள் எடுத்துக்கூற, அதிகாரம் இறைவனிடமிருந்து திருச்சபைக்கும் திருச்சபையின் வழியே மன்னர்களுக்கும் கடத்தப்படுவதாக திருச்சபையினர் எதிர்க்கருத்தினை முவைக்கலாயினர். இங்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இறைவனுக்கும் தமக்குமிடையிலான நெருக்கத்தினை நிரூபிக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் மன்னர்களுக்கும், திருச்சபைக்கும் அவசியமாயிற்று. இதற்குச் சிறந்த உபகரணமாகப் பயன்பட்டவை திருச்சின்னங்கள்/ வரலாற்றுச் சின்னங்கள் (Relics). புனிதர்களின் உடலின் பகுதிகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும், இயேசுவுக்குச் சொந்தமானதென நம்பப்பட்ட பொருட்களையும் வைத்திருப்பது அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்கும், மக்களது நம்பிக்கையைத் தம்பால் இழுப்பதற்கும் இவர்களுக்கு உதவியது (இலங்கை வரலாற்றில் புத்தரின் புனித தந்ததாதுவுக்கு நேர்ந்த அதே கதி). இதன் விளைவாக பல போலிப் பிரதியெடுப்புக்களும் உலாவத் தொடங்கியதுடன், உண்மையான நினைவுச் சின்னத்துக்கும் போலிச் சின்னங்களுக்குமிடையிலான வேறுபாட்டைக் கண்டறிய முடியாதளவு அவை பரவலாகவும் தொடங்கின.<br /><br />கைப்பற்றப்பற்ற இத்தாலிய நகரமொன்றின் தேவாலயத்திலிருந்து, இயேசு பிறந்தவன்று அவரைச் சந்தித்த மூன்று அறிஞர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் Baudolino வுக்கு கிடைக்கப் பெறுகிறது. அதை மக்களுக்கு காட்சிப்படுத்தவெனக் கிளம்பும்போது அரசரின் தலைமை மதகுரு தடுத்து, இவ்வுடல்களைப் போர்த்தியிருக்கும் உடைகள் சற்று தராதரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றனவெனக் கூறியதையடுத்து கீழ்த்திசையிலிருந்து வந்த அந்த அறிஞர்களுக்கு இத்தாலிய தலைமைக் குருமார் (Archbishops) அணியும் ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இறுதியில் அந்த 'அறிஞர்கள்' கீழை நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருக்களாகிப் போகின்றனர்.<br /><br />இதற்கிடையில் போப்பாண்டவருக்கும் Frederick Barbarossa வுக்குமிடையே கடும் போட்டி உருவாகிறது (இந்தவிடத்தில் கதை சற்றுத் தெளிவாகப் புரியவில்லை. Anti-Pope என இன்னுமொருவர் குறிப்பிடப்படுகிறார். இவரைத் தமது ஏகாதிபத்திய நலன்களுக்கென அரசரது தலைமை மதகுருவே இரகசியமாக நியமித்ததாகவும் கூறப்படுகிறது). போப்பாண்டவரையும் விட மன்னரை அதிகாரம் மிகுந்தவராக எடுத்துக்காட்டும் பொறுப்பு Baudolino விடம் ஒப்படைக்கப்படுகிறது. Baudolino வின் ஆரம்பகால குரு Otto தான் இறக்கும் தறுவாயில், Prester John இன் சாம்ராஜ்யத்தை Frederick கண்டுபிடித்து அந்த மன்னருடன் தொடர்புகொள்வதன் மூலமே அவர் எதிர்பார்க்கும் உயரிய நிலையை அடைய முடியுமெனவும், அதற்கு உதவும்படியும் Baudolino விடம் கூறுகிறார். அப்படியொரு சாம்ராஜ்யம், பொன்னும் மணிகளும் தவழும், பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் வளம் பொருந்திய கனவுத் தேசமொன்று மிகத் தொலைவில் கீழைநாடுகளில் காணப்படுகின்றதென்ற நம்பிக்கை, அது இறைவனின் நேரடி வரம் பெற்ற கத்தோலிக்க மதகுரு/ அரசரொருவராலேயே ஆளப்படுகிறதென்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.<br /><br />இதை மனதிற்கொண்ட Baudolino தனது நண்பர்களுடனிணைந்து Prester John, Frederick க்கு அனுப்புவதாக ஒரு கடிதமொன்றைத் தயாரிக்கிறான். இக்கடிதம் மன்னருக்கு பெரும் புகழையும், மதிப்பையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, ஏனைய அரசர்கள் மத்தியிலும் பெற்றுத்தரக்கூடும். போப்பாண்டவரும் கூட தவிர்க்கவே முடியாமல் மன்னரை மதிக்க வேண்டி நேரிடும். ஆனால், அக்கடிதம் Baudolino வின் கவனயீனத்தினால் பைசாந்திய (Byzantine) உளவாளியொருவரின் கையில் அகப்படுகிறது. அதை உண்மையான கடிதமென அவ்வுளவாளி நம்பியதன் விளைவு, Baudolino வின் கற்பனைத் திறமையில் உருவான அக்கடிதத்தை Frederick பகிரங்கப்படுத்துவதற்கு முன்பே, பைசாந்திய மன்னரிடமிருந்து Prester John தனக்கெழுதியதாக இதே கடிதம் அச்சு அசலாக Frederick க்கிடம் திரும்பி வருகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள், போப்பாண்டவரும் Prester John தனக்கெழுதியதாக ஒரு கடிதத்தைக் காண்பித்து, அதற்குத் தானனுப்பிய பதிலையும் காட்சிப்படுத்துகிறார். அத்தகைய சாம்ராஜ்யமொன்றின் இருப்பே சந்தேகத்திற்காளாகியிருந்த நிலையில், இக்கடிதப் பரிமாற்றம் நிகழ்வது Baudolino வுக்கு பெரும் வேடிக்கையாகத் தோன்றுகிறது.<br /><br />கடிதமனுப்பும் முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மன்னரின் புகழை நிலைநிறுத்தும் பொருட்டு வழி தேடியலையும் நண்பர்களின் கவனத்தையீர்க்கிறது, இறுதி இராப்போசனத்தன்று இயேசு மதுவருந்திய கிண்ணம். அது பாலஸ்தீனிய அரசரொருவரின் வசமிருந்ததாகக் கேள்விப்பட்டு நண்பர்கள் அதைத் தேடத் தொடங்க, Baudolino தனது சொந்தத் தந்தையிடம் அவர் இறக்கும் தறுவாயில் அந்தக் கிண்ணத்தை விவரிக்கிறான். அது ஆயிரம் மணிகளின் ஒளிபொருந்திய பிரகாசத்துடனும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணத்துடனும் திகழுமென இவன் கதைசொல்ல இடைமறித்த அந்தக் கிழக்குடியானவத் தந்தை, ஒரு தச்சனின் மகன் மணிகள் பதிக்கப்பட்ட கிண்ணமொன்றில் மதுவருந்தியதாக எனக்குக் கதை சொல்கிறாயா எனத் திட்டத் தொடங்குகிறார். அந்தவுண்மை அப்போதுதான் உறைக்கிறது அவனுக்கும். தனது தந்தை இறந்த பிற்பாடு அவர் உபயோகித்திருந்த பழைய கிண்ணமொன்றைத் துடைத்தெடுத்து அதுதான் இயேசு பயன்படுத்திய Holy Grasal என்று மன்னர் தொடக்கம் அனைவரையும் நம்பவைத்து விடுகிறான். சிலர் அதிலிருந்து ஆயிரம் சூரியன்களின் ஒளி பரவுவதைக் கண்டதாகவும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணம் கமழ்வதாகவும் கூறித் திரியத் தொடங்கினர். இது அதனை உரியதாக்கியிருந்த மன்னரின் புகழை ஒரேயடியாக உயர்த்தி விடுவதுடன், அரும் பெரும் பொக்கிஷமாக தான் செல்லுமிடமெங்கும் அதனைக் காவிச்செல்லுமளவு மன்னரும் அதை மதிக்கிறார். பிற்காலங்களில் ஏராளம் மனக்கசப்புகளுக்கும், பிரச்சனைகளுக்கும் அக்குடியானவனின் வெறும் கிண்ணமே காரணியாவது வேறுவிடயம்.<br /><br />Prester John ன் சாம்ராஜ்யத்தைக் கண்டடைய முடியாது திரும்பும் நண்பர்கள் ஊர் திரும்புவதற்கு முதல் பணமும் புகழும் சேர்க்க, திருச்சின்னங்களைத் தாமே உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தொழுநோயாளியின் முகம் பதித்த துணி, இயேசுவின் திருமுகம் பதித்த திரைச்சீலையாகிறது; கொல்லைப்புறத்தில் கிடக்கும் சாதாரண துருவேறிய ஆணி இயேசுவைச் சிலுவையில் அறைந்த ஆணியாகிறது; இடுகாடொன்றில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புத் துண்டு புனிதரொருவரின் உடலின் ஒரு பகுதியாகிறது. கத்தோலிக்க தேவாலயங்களும் உயர் குடும்பத்தினரும் இத்தகைய நினைவுச் சின்னங்களை வாங்குவதற்குப் பெரும் பணத்தினைச் செலவளிக்கத் தயாராகவிருந்த நிலையில் இது செல்வம் கொழிக்கும் வியாபாரமாகத் திகழ்கிறது.<br /><br />இவையனைத்தும் வரலாற்றுச் சின்னங்களதும், சம்பவங்களதும் நம்பகத்தன்மை குறித்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்ற நாவலின் சில பகுதிகள் மட்டுமே.<br /><br /><br /><strong>4.<br /></strong><br />மிக எளிய வார்த்தைகளுள் கூறுவதானால், 'ஒரு பொய்யை நாம் தீவிரமாக நம்பத் தொடங்கும் போது அது உண்மையாகி விடுகிறது' என்பதே இந்நாவலின் தத்துவசாரமென நினைக்கிறேன். கதையின் ஒவ்வொரு சிறுசிறு சம்பவங்களிலும், கதையோட்டத்திலுமே கூட அதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.<br /><br /><strong>"Believing a relic true, you catch its scent. We believe that we, only we, need God, but often God needs us. At that moment I believed it was necessary to help him. That cup must truly have existed, if Our Lord had used it. If it had been lost, it had been through the fault of some worthless man. I was restroing the Grasal to Christianity. God would not have contradicted me."<br /></strong><em>(pg.280)</em><br /><br />திருவள்ளுவரும் இதைத்தான் சொல்லிப் போனார் போலும்.<br /><br /><strong>பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த<br />நன்மை பயக்கு மெனின்</strong><br /><em>(அதி.292)<br /></em><br />ஆனால், தத்துவங்கள் இடம்பார்த்து பிரயோகிக்கப்பட வேண்டியது அவசியம். இது வரலாற்றிலும் பிரயோகிக்கப்படும்போது அதன் விளைவுகள் என்னவாயிருக்கும்? ஆடம்பரமான கற்பனைகளையல்ல, திடமான உண்மைகளுக்கிடையேயுள்ள உறவுகளை முதன்மைப்படுத்துவதே வரலாற்றின் நோக்கமாயிருக்க வேண்டும். இது வரலாற்றாசிரியர்களின் கடமையும் கூட. அதிலிருந்து தவறுமிடத்து, வருங்காலத்தையே ஒரு தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதைத் தவிர அது சாதிக்கப் போவது வேறொன்றுமில்லை. வரலாறென்பது வெறும் கட்டுக்கதைகளின் மூட்டையெனக் கருதப்படுமிடத்து, வரலாற்று முதல்வாதம் போன்ற அணுகுமுறைகளின்மீதும் ஐயங்கொள்ள வேண்டியதாகிறது. விடயமொன்றன் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலமே அவ்விடயங் குறித்த தெளிந்த ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்ற அரிஸ்டோட்டிலின் கருத்து காலப்போக்கில் காலாவதியாகிவிடுமென்றே தோன்றுகிறது. </span>Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-19146565.post-45564972464019272382007-10-22T17:30:00.001-04:002007-10-22T17:35:51.557-04:00புகையெனப் படரும் பிணங்களின் வாசம்<span style="font-size:85%;"><strong></strong></span><br /><span style="font-size:85%;"><strong>1.</strong><br /><br />எந்தச் சந்தர்ப்பத்திலும் நீ அதை எதிர்கொள்ள நேரலாம்<br />காலப்புதைகுழியின் செவ்விய மண் மூடுண்ட<br />சிதைந்த சில உடலங்களைப் பற்றிய கதையொன்று<br />ஊர் நெடுக உலாவித் திரிந்தது தன் தலை சிலுப்பி<br />இழுத்து விரித்து என் படுக்கையில்<br />போர்த்தப்பட்டிருந்த ஒரு சவம்<br />தொண்டைக்குள் நுழைந்துகொண்டு<br />வார்த்தைகளை வடிகட்டியது<br />உடல் தின்று செரித்த கவிதை<br />வடக்கில் பொய்த்த மழை பேய்த்தூறல் தூவ<br />நீளும் விரல்களைத் தட்டிவிட்டபடி<br />கடந்து கொண்டேயிருக்கிறாய்,<br />எழுதப்படாத வார்த்தைகளுள்<br />உறைந்து கிடக்கும் என் பிணங்களை<br /><br /><br /><strong>2. </strong><br /><br />விரகம் புலியென வெறிகொண்டெழும் இரவுகளில்<br />இறுக்கிய தொடைகளின் இடுக்கில்<br />குரல்வளை நெரித்துக் கொன்ற தாபம்<br />பற்றைகளின் ஆழங்களில் புதையுண்டு கிடக்கிறது<br />ஒரு நெடுங்கால மர்மத்தைப் போல<br />யோனியெனுமொரு பாம்பு நீட்டிய நாக்குடன்<br />கால்களினூடு கசிய<br />என் கனவுகளெங்கும் பிணவாசம்<br />புகையெனப் படர்ந்தது<br />இனி, அகாலம் விடியும் வேளையில்<br />என் படுக்கையின் மீது<br />நிணக்கூழ் வடியும் கண்களுடன்<br />பிணமொன்று தவழும்<br />மழலையென</span>Unknownnoreply@blogger.com17tag:blogger.com,1999:blog-19146565.post-84102408518618892012007-10-22T09:57:00.000-04:002007-10-22T10:01:40.933-04:00எதிர்பாலினப் படிமங்கள்<span style="font-size:85%;"><strong>1.</strong></span><br /><span style="font-size:85%;"><br /><strong><em>நீண்டு வளரும் தெருவில்<br />அனாதையாக யாருமற்று<br />அலையும் தருணங்களில் உய்த்துணர்கிறேன்<br />உனது உதடுகளில் சிலபொழுது<br />கமழ்ந்த என் அன்னையின்<br />மஞ்சள் குங்கும நெற்றியின் வாசனையை<br /></em></strong>*(பக்.25)<br /><br />உனது அணைப்பில்<br />கஞ்சாவின் மணம்..<br /><br />நேற்றைய இரவில்<br />துரும்பாய் உனை மதித்து<br />தூக்கியெறிந்த குறட்டைகளின் நீட்சியில்<br />நான் தூங்கி வழிந்தது பொறுக்காமல்<br />அரைகுறையாய் நீ புகைத்துப் புகைத்து<br />வீணாக்கிய சிகரட்டின்<br />சாம்பல் மணம்..<br /><br />உனது குட்டி போட்ட பூனை நடையில்<br />அதிர்ந்ததிர்ந்து ஓய்ந்த<br />இரவின் மணம்..<br />நிலவின் மணம்<br /><br />உனது கரங்கள்<br />பேஸ்போல் மட்டை<br />கணம் ஒரு விந்தையுடன் இறுக்கும்<br />வார்ப்பிரும்புச் சங்கிலி<br /><br />கதறிக் கதறி நெக்குவிட்டுருகும்போதும்<br />ஒருபோதும் உய்த்துணர முடிந்ததில்லை..,<br />எந்தையின் மடியிலிருந்து கசியும்,<br />நான் விரும்பும்<br />காம்போதியின் குழைவுகளை..<br /><br /><br /><strong>2.</strong><br /><br /><strong><em>பச்சைக்கிளியின் வளர்ந்த இறகு<br />வழியில் கிடக்கிறது<br />இறகை எடுத்துப் பார்க்கும்போது<br />முழுப் பறவையும் தெரிகிறது<br /></em></strong>*(பக்.32)<br /><br />தத்துவவியல் சொன்னது:<br />இறகை வைத்து பறவையை மதிப்பிடாதே<br />வாய்ப்புக்கள் அபத்தமாகிப் போகும்<br />பறவையைக் கொண்டு இறகை மதிப்பிடாமல் விடாதே<br />முடிவுகள் சாத்தியமற்றுப் போகும்<br /><br />காற்றில் தவழ்ந்து கூந்தல் சிக்கிய வானம்பாடி இறகு சொன்னது:<br />பறவையுடன் இருப்பதால்<br />நானும் பறவையாவதில்லை<br />என்னைச் சுமப்பதால்<br />பறவை இறகாவதில்லை<br /><br />எனது ஒவ்வொரு அணுவும் அது 'நான் தான்'<br />'நான் தான்'<br />'நான் மட்டுமே தான்'<br />நீயற்ற எதுவும் நானாவதில்லை<br />என்னைப் பிரிந்த நீயும்..<br /><br /><br /><strong>3.</strong><br /><br /><strong><em>விழுங்கிய நாவல் பழம்<br />நான் பயந்தபடி வயிற்றில்<br />முளைத்துவிட்டிருக்கிறது<br />நாவல் பழக் கண்களோடு<br />என் மகள் படித்துக்கொண்டிருக்கிறாள்<br />இக்கவிதையை<br /></em></strong>*(பக்.33)<br /><br />விழுங்கும் எதுவும்<br />வயிற்றில் முளைக்குமாமெனில்<br />வெண்ணிலவை பிடுங்கித் தின்பேன்<br />நீலக்கடலை அள்ளிப் பருகுவேன்<br />சுட்டெரிக்கும் தீயை..<br />விசும்பை..<br />நெஞ்சை அள்ளிப் போன<br />ஹரஹரப்பிரியாவின்<br />ஜன்யமொன்றை..<br /><br /><br /><br />*சக்கரவாளக் கோட்டம் (ரமேஷ்-பிரேம்)<br /><br /><br /><em>(இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்பு - ஏறத்தாழ ஒரு வருடமாகிறது - பழக்கதோஷத்தில் வேடிக்கையாய் எழுதிவைத்தது.. ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக் கோட்டம்' தொகுப்பிலிருந்த ரசித்த/ முகஞ்சுளித்த சில கவிதைகளின் உணர்வுகளை ஒரு பெண்ணாய் மீளப் பதிதல்..)</em></span><br /></span>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19146565.post-76790987920692500792007-10-15T19:55:00.000-04:002007-10-16T00:38:01.993-04:00பிரதிகளை மீளப் பதிதல் - 1<strong>-The God of Small Things</strong><br /><br /><span style="font-size:85%;">1.<br /><br />மிகவும் வசீகரித்த புத்தகமொன்றைப் பற்றி குறிப்பெழுதவென உட்காரும்போது எங்கிருந்து தொடங்குவதென்ற கேள்வியெழும். முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்க முடியாது. காரணம், இந்தக் கதை காலங்களுக்கிடையே முன்னும் பின்னுமாக மிக மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பது, சில அபாயகரமான இராட்டினங்களைப் போல.<br /><br />அண்மையில், அவிசாவளையில் அமைந்திருக்கும் Leisure World க்கு தோழிகள் சிலர் போயிருந்தோம். Space Ship என்ற பெயரில் ஒரு இராட்டினம். விஷயம் தெரிந்தவர்கள் புத்திசாலித்தனமாக நழுவிக் கொண்டார்கள், தலைசுற்றுகிறதென்று. பெயருக்கேற்ற மாதிரி ஒரு கூண்டு. முழுக்க முழுக்க கம்பிகளால் அடைக்கப்பட்டு, போதாக்குறைக்கு இறுக்கமான சீட் பெல்ட்களுடன். இரண்டு கூண்டுகள். ஒன்று கீழேயிருக்கும். மற்றையது பனையளவு உயரத்தில் இதற்கு நேர்மேலே இருக்கும். ஒரு கூண்டில் நான்கு பேர் வீதம் (இருவர் இருவராக) ஒரே நேரத்தில் எட்டுப்பேர் பயணிக்கலாம். அந்தக் கூண்டு பூமியைப்போல தன்னைத்தானேயும் சுற்றும் (அப்படி சுற்றும்போது நாங்கள் தலைகீழாக இருப்போம் கூண்டுக்குள்), மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், முன்னுக்கும் பின்னுக்கும் சுற்றும்.<br /><br />இருக்குமிடத்திலிருந்து மெதுவாக முன்னேறுவதைப் போலிருக்கும், திடீரென்று வேகமெடுத்து ஒரு உலுக்கு உலுக்கி திசைதிரும்பி மறுபடியும் வேகம் குறையும். அடுத்தகணம், ஒரே வீச்சில் பின்புறமாக சுழலத்தொடங்கும். இடம் வலம் மறந்து திசைகள் பற்றிய பிரக்ஞையற்று தலைசுழல அமர்ந்திருப்போம். அதே அனுபவம் இப்பிரதியை வாசிக்கும்போதும்.. நிகழ்காலத்தில் தொடங்கும் கதை, கடந்தகாலங்களுக்குச் சட்டென்று தாவி, நிகழ்காலத்துக்கும், கடந்தகாலத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களுக்குமிடையே ஊடாடி மாறி மாறிப் பயணித்து, இறுதியாக கடந்தகாலத்தின் ஏதோவொரு புள்ளியில் சடுதியாக வந்து நின்றுவிடுகிறது.<br /><br />அது அருந்ததி ரோயின், <em><strong>The God of Small Things.</strong></em><br /><br /></span>2.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrds5wyHUDSIRT8HKrJzCTNggsKdXcXQlejMFXiV-d0Gc7OxPMflYrbnLRWJNInhaDXuY0EBjsXSLXxWIUFKS6x57osP3FDNijbxh4a4sM6v7-cRc4BVErxoii4nomtaQszeMUoQ/s1600-h/godof2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5121722252024564002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrds5wyHUDSIRT8HKrJzCTNggsKdXcXQlejMFXiV-d0Gc7OxPMflYrbnLRWJNInhaDXuY0EBjsXSLXxWIUFKS6x57osP3FDNijbxh4a4sM6v7-cRc4BVErxoii4nomtaQszeMUoQ/s320/godof2.jpg" border="0" /></a> <span style="font-size:85%;"><em><strong>Once he was inside her, fear was derailed and biology took over. The cost of living climbed to unaffordable heights; though later Baby Kochamma would say it was a Small Price to Pay.<br />Was it?<br />Two lives. Two children's childhoods.<br />And a history lesson for future offenders.</strong></em><br /><em>(pg.318)</em><br /><br />இறுதி அத்தியாயத்திலிருந்து தொடங்குவதுதான் மிகப் பொருத்தமாயிருக்கக்கூடும். சிறிய குடும்பம், சிறிய விடயங்கள், சிறிய தவறுகள்.. ஆனால், அவற்றுக்கு விலையாகக் கொடுக்க நேர்ந்ததோ, இரண்டு உயிர்களும், இரு குழந்தைகளின் குழந்தைமையும்.<br /><br />Estha, Rahel - ஐந்து அல்லது ஆறு வயது நிரம்பிய (ஆண்,பெண்) இரட்டைக் குழந்தைகள், அவர்களது விவாகரத்துப் பெற்ற அம்மா மூவரையும் முக்கிய கதாபாத்திரங்களாகவும், கேரளாவின் Ayemenem எனும் ஊரைக் களமாகவும் கொண்டு நகர்கிறது கதை. இங்கு, The God of Small Things எனக் குறிப்பிடப்படும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அம்மாவுடன் தொடர்புவைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்நண்பராகிய Velutha வும் முக்கிய இடம்பெறுகிறார். பிரதியைப் புறக்கணித்து, காலமாற்றங்களின் அகரவரிசைப்படி கதையைச் சுருக்கமாகக் கூறுவதானால்,<br /><br />பரம்பரை பரம்பரையாக ஊரில் பேரும் புகழும் பெற்ற ஒரு கிறிஸ்தவக் (Syrian Christians) குடும்பம். அதில், கதையின்படி நான்காவது தலைமுறை அம்மாவும், Chacko வும். அம்மா சிறிய வயதிலேயே வீட்டை விட்டுப்போய் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து கல்கத்தாவில் குடியேறுகிறார். அளவுமீறிய குடிப்பழக்கமுடைய கணவன், ஏதோவொரு தவறில் வேலையை இழக்கும் நிலைக்காளாகிறார். கணவரது மேலதிகாரி, அவரது அழகான மனைவியின் மீதுள்ள நெடுநாள் நாட்டத்தில் வேலை இழப்பைத் தவிர்ப்பதாயின் மனைவியைச் சிலகாலம் தன்னுடன் தங்க அனுமதிக்கும்படி யோசனை கூறுகிறார். கணவரும் இதே யோசனையை அம்மாவிடம் எடுத்துரைக்க, இயலாத கட்டத்தில் அம்மா விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோரின் ஊருக்குத் திரும்பி வருகிறார். ஆண்குழந்தையை கணவரிடமே விட்டுவிட அம்மா விரும்பினாலும், பிள்ளைகள் எப்போதுமே தாயின் பொறுப்பாக (சட்டரீதியான குழந்தையாயிருந்தாலென்ன, சட்டத்துக்குப் புறம்பானதாயிருந்தாலென்ன) மட்டுமே கருதப்படுமொரு சமூகத்தில் அது இயலாததாகிவிடுகிறது.<br /><br />அம்மாவின் அண்ணா Chacko, Oxford பல்கலைக்கழகத்தில் பட்டதாரிப் படிப்பு முடித்து, அங்கேயே ஆங்கிலேயப் பெண்ணொருவரையும் திருமணம் முடித்து, ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்த நிலையில், மனைவி விவாகரத்து வேண்டிவிட ஊருக்குத் திரும்பி வந்து, தனது அம்மாவின் ஊறுகாய், மற்றும் பதப்படுத்திய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் (Paradise Pickles & Preserves) பொறுப்பேற்று நடத்துகிறார்.<br /><br />அது கம்யூனிஸம் கேரளாவில் பரவத் தொடங்கியிருந்த காலகட்டம். Chacko நிறுவனமொன்றின் முதலாளியெனினும், Oxford காலத்திலிருந்தே கம்யூனிஸத்தின் தீவிர ஆதரவாளர். சாதி வேறுபாடுகளை மறுப்பவர் (ஆனால், தனது வீட்டுக்குள் தாழ்ந்த சாதியினரை அனுமதிக்க மாட்டாதது வேறுவிடயம்). பாட்டி, Baby Kochamma, வேலைசெய்யும் Kochu Maria உட்பட 7 பேரைக்கொண்ட குடும்பத்தில் நாட்கள் வெகு சாதாரணமாக நகர்ந்து கொண்டிருக்க, திடீர் திருப்பம் Chacko வின் ஆங்கிலேய மனைவி Margaret மற்றும் மகள் Sophie Mol வருகையுடன் நிகழ்கிறது. Margaret தனது இரண்டாவது கணவர் விபத்தொன்றில் இறந்ததையடுத்து, அதனை மறப்பதற்காகவும், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்கும் நோக்கிலும் மகளுடன் கேரளா வருகிறார். அவர்கள் வந்து சில வாரங்களில் அம்மாவுக்கும், தச்சுவேலை செய்துவரும் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த Velutha வுக்குமிடையிலான தொடர்பு வீட்டாருக்குத் தெரியவருவதுடன் (இது Velutha வின் மரணத்துக்கு வழிகோலுகிறது), எதிர்பாரா விபத்தொன்றில் Chacko வின் மகள் Sophie Mol இறக்கவும் நேரிடுகிறது. உயிருக்குயிராய் நேசித்திருந்த மகளை இழந்த Chacko வின் துயரம், ஒருவகையில் அம்மாதான் அதற்குக் காரணமென Baby Kochamma நம்பவைத்துவிட அம்மாவின் மீதான கோபமாக மாறி, அம்மாவையும் குழந்தைகளையும் வீட்டை விட்டுத் துரத்த வைத்துவிடுகிறது.<br /><br />தொடர்வது, அழகிய குடும்பமொன்றின் சிதைவு. தம்மை ஒருவரிலிருந்து மற்றொருவரென வேறுபிரித்துப் பார்த்திராத, எப்போதும் நான், அவள்/ன் எனக் கருதாது 'நாம்' எனவே சிந்தித்துப் பழக்கப்பட்ட Estha வும், Rahel ம் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம். Estha அப்பாவிடம் கல்கத்தாவுக்கு அனுப்பப்படுகிறான். Rahel ஊரிலேயே தங்க அனுமதிக்கப்படுகிறாள். அம்மா வீட்டை விட்டு அனுப்பப்படுகிறார். குழந்தைகளைப் பராமரிக்கப் போதுமான ஊதியத்தைத் தரக்கூடிய வேலையொன்றை அம்மா பெற்றுக்கொண்டதன் பின்னர் அனைவரும் மறுபடியும் ஒன்றாக வாழலாமென்ற நம்பிக்கையுடன் மூன்றுபேரைக்கொண்ட அச்சிறிய அன்பால் பிணைக்கப்பட்ட குடும்பம் பிரிகிறது.<br /><br />அவர்கள் மறுபடியும் இணைவதற்கான சந்தர்ப்பம் கிட்டுவதற்கு முன்னரே அம்மா - 31 வயதளவில்.. <strong><em>Not old. Not young. But a viable die-able age. </em></strong> இறந்துவிடுகிறார் (இறுதிவரை அப்படிப்பட்டதொரு வேலை அவருக்குக் கிடைக்கவேயில்லை, பாடசாலையொன்றை நடாத்த வேண்டுமென்ற அவரது கனவும் நிறைவேறவில்லை).<br /><br />Rahel திருமணம் முடித்து அமெரிக்காவில் குடியேறுகிறாள். ஏறத்தாழ இருபது, இருபத்துமூன்று வருடங்கள் இப்படியே கடந்து போக, இவர்களின் அப்பா அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர், இனியும் தனது மகனைத் தன்னால் பராமரிக்க முடியாதெனக் கூறி திரும்ப ஊருக்கு அனுப்பி விடுகிறார். Estha ஊருக்கு வந்ததை அறிந்துகொண்ட Rahel (தற்போது கணவரை விட்டுப் பிரிந்தாயிற்று) அமெரிக்காவிலிருந்து ஊருக்குத் திரும்பி வந்து காலவோட்டத்தில் அசாதாரணமான முறையில் அமைதியாகிப்போன சகோதரனைக் காண்கிறாள். தற்போது அவர்கள் - two-egg twins - முற்றிலும் மாறுபட்டவர்கள், அவள் மீள்நிரப்பமுடியா வெறுமையுடனும், அவன் அசாதாரணமான அமைதியுடனும்.<br /><br />இது சிக்கார்ந்த கதையின் மிக மிக எளிமையாக்கப்பட்ட சுருக்க வடிவம். உண்மையான பிரதி இப்படித் தொடங்கி, இதேபோல முடிவதல்ல; இது மட்டுமேயல்ல.<br /><br /><br />3.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfvX9FsmptT0dd8xn95L_h8PfxVy1Ld02soDGgVom8psx0Hfi4bN881U4TctGJCmI2du0wpahLOVimDB4U7s4fv3yHHJl60cLlFUwB1JOD5oxMfr0aNVwhvLhQVihTd4NsheN6vw/s1600-h/arunthadi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5121722252024563986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfvX9FsmptT0dd8xn95L_h8PfxVy1Ld02soDGgVom8psx0Hfi4bN881U4TctGJCmI2du0wpahLOVimDB4U7s4fv3yHHJl60cLlFUwB1JOD5oxMfr0aNVwhvLhQVihTd4NsheN6vw/s320/arunthadi.jpg" border="0" /></a> வியக்க வைக்கும் அம்சம் பாத்திர வடிவமைப்பும் வர்ணனையும். ஒவ்வொரு மனிதரையும் செதுக்கியெடுத்திருக்கிறார் ரோய். அவர்களது தோற்றம், நடத்தை, சிந்தனைகளென்பன உருவத்துடன் மறுவிம்பமாக மனதில் விரியும் அதேவேளை உருவமற்ற எண்ணங்களின் அதிர்வுகளுக்கு வடிவங்கொடுத்தவாறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அம்மாவின் கனவில் வந்த ஒற்றைக்கை மனிதனைப் பற்றிய விவரணையில்,<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>The God of Loss.<br />The God of Small Things.<br />The God of Goosebumps and Sudden Smiles.<br />He could do only one thing at a time.<br /><br />If he touched her, he couldn't talk to her, if he loved her he couldn't leave, if he spoke he couldn't listen, if he fought he couldn't win.</strong>(pg.312)</em><br /><br />அம்மாவையும், சகோதரனையும் விட்டு விலகியிருந்த நாட்களில் Rahel பல பாடசாலைகளுக்கு தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறாள். ஆசிரியையொருத்தியின் வாசலுக்கு வெளியே பசுமாட்டின் சாணத்தை பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தமைக்காகவும், கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தமைக்காகவும், மூத்த மாணவிகளுடன் முரண்பட்டமைக்காகவும், தலைமையாசிரியையால் கண்டிக்கப்படுகிறாள். காரணம் கேட்டபோது, தனது மார்புகள் நோகுமா என்பதைப் பரிசீலிப்பதற்காகவே அப்படிச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். கிறிஸ்தவ நிறுவனங்களைப் பொறுத்தவரை மார்புகளின் இருப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையாதலாலும், புகை பிடித்தமைக்காகவும், வகுப்பாசிரியையின் பொய்த் தலைமுடியை எரித்தமைக்காகவும் பாடசாலையை விட்டு விலக்கப்படுகிறாள்.<br /><br /><strong><em>She remained free to make her own inquiries: into breasts and how much they hurt. Into false hair buns and how well they burned. Into life and how it ought to be lived. </strong><br />(pg.18)</span></em><span style="font-size:85%;"><br /><br />இருந்தபோதும், காலம் அவளை வெறுமையின் உறைவிடமாக மாற்றிவிடுகிறது. அமெரிக்காவிலிருந்து வளர்ந்த பெண்ணாக வெறுமையையும் கூடவே அழைத்துக்கொண்டு அவள் திரும்பி வருகையில், அவளது சகோதரன் Estha ஒரு கிழவனின் வாயுடன் கூடிய இளைஞனாக வாழ்ந்துகொண்டிருப்பதைக் காண்கிறாள்.<br /><br /><strong><em>He carried inside him the memory of a young man with an old man's mouth. The memory of a swollen face and a smashed, upside-down smile. Of a spreading pool of clear liquid with a bare bulb reflected in it. Of a bloodshot eye that had opened, wandered and then fixed its gaze on him. Estha. </strong><br />(pg.32)</span></em><span style="font-size:85%;"><br /><br />காலமும், அனுபவங்களும், தொலைந்துவிட்ட குழந்தைமையும் அவர்களை அவ்விதம் மாற்றிவிட்டிருந்தன. The Quietness & The Emptiness.<br /><br />அம்மாவின் உணர்வுகள் எடுத்துக்காட்டப்படும் விதமும் மிகச் சிறப்பானது. தன் குழந்தைகளின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்த போதும், சமயங்களில் தனது உணர்வுகளை முன்னிலைப்படுத்துவதில் அவள் தயக்கம் காட்டவில்லை. பகல் கனவொன்றின் போது ஒற்றைக் கை மனிதனுடன் கடற்கரையோரத்தில் அவள் தனித்து அலைகிறாள், அந்தக் கனவில் தனது குழந்தைகளை விட்டு அவள் வெகுதூரம் விலகிவிட்டிருந்த போதும் அந்தக் கனவு மனிதனின் மீதான நேசத்தையும் விட்டுக்கொடுத்தாளில்லை. குழந்தைகள் அவளது வயிற்றின் பிரசவக் கோடுகளையும், தையல் தடங்களையும் தடவிக்கொடுத்து முத்தமிடுகையில்கூட அதை மூர்க்கமாகப் புறக்கணிக்கிறாள்.<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>Ammu grew tired of their proprietary handling of her. She wanted her body back. It was hers. She shrugged her children off the way a bitch shrugs off her pups when she'd had enough of them.</strong><br />(pg.211)</em><br /><br />இது அம்மாமாரின் மற்றும் தாய்மையின் புனிதம் பற்றி காலங்காலமாக நாம் கொண்டிருந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிவதாகவுள்ளது. தனது உடல் குறித்தான கரிசனை கொண்டவளாக Estha, Rahel ன் அம்மா சித்தரிக்கப்படுகிறாள்; ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிடவும்படுகிறாள். அம்மாமாரைக் கடவுளரின் மறுவுருவமாகவல்லாது (தந்தைவழிச் சமூகத்தின் நலன்களைப் பேணுவதும், பெண்களின் கருப்பையைக் கட்டுப்படுத்துவதுமே இந்தக் கடவுளர் மயமாக்கலின் அடிப்படை நோக்கம்), சராசரி உணர்வுகளுடன் கூடிய மனுசியாக அணுகுமிந்தப் பார்வை இன்னமும் விரிவாக நோக்கப்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான உறவு வீட்டாருக்குத் தெரியவந்து அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொழுதில் நடந்தது புரியாமல் திகைத்து நிற்கும் குழந்தைகளைப் பார்த்து அவள் கத்துகிறாள்:<br /><br /><strong><em>If it wasn't for you I wouldn't be here. None of this would have happened. I would have been free. I should have dumped you in an orphanage the day you were born. You're the millstones round my neck. </strong><br />(pg.240)</span></em><span style="font-size:85%;"><br /><br />அவளது இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் உணர்வே இங்கு முக்கியம் பெறுகிறது. நீங்களில்லாவிடில் இந்த இடத்தில் நானிருந்திருக்கவும் மாட்டேன்; இப்படியெல்லாம் அவமானப்பட்டிருந்திருக்கவும் மாட்டேன்; சுதந்திரமாக இருந்திருப்பேன் என்கிறாள். குழந்தைகளைப் பொக்கிஷமாகக் கருதும் எமது ideal தாய்மாருடன் ஒப்பிடுகையில் குழந்தைகளைச் சுமையெனத் திட்டும் இவளை எங்கே கொண்டுபோய் வைப்பது? ஆனால், யதார்த்தம் பெரும்பாலும் இப்படித்தானிருக்கிறது. குழந்தைகள் தாயின் பொறுப்பாக சுமத்தப்படுவது அவளது சுதந்திரத்துக்கான தடைக்கல்லாக அக்குழந்தைகளை மாற்றிவிடுகிறது. அதேயிடத்தில் ஆனானப்பட்ட தாய்மையின் 'புனிதம்' வெறும் myth ஆகிவிடுகிறது. <strong>But, she's the real woman. </strong><br /><br />4.<br /><br />நாவலில் அதிகம் ரசிக்க வைப்பது அருந்ததி ரோயின் மொழிநடையும் கதை சொல்லும் பாணியும். சிறுவர்களின் உலகை மிக மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் அல்லது வாழ்ந்து காட்டியுள்ளாரெனலாம். சமயங்களில், சிறுவர்களது சிந்தனை வியக்க வைப்பது. நாம் சற்றும் எதிர்பார்த்திராத அதிக கவனம் பெற்றிராத மிகச் சிறிய விடயங்கள் கூட சிறுவர்களால் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. அவர்களுடன் பழகுவதை நாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அவர்களது கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொல்கிறோம். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் எமக்கு பலதையும் கற்றுக் கொடுப்பவர்களாகவும், தம் சந்தேகங்களால் எம்மை அசைத்துவிடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது கேள்விகளை சிடுசிடுத்துக்கொண்டு புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம் அதற்கான பதில் எமக்குத் தெரிந்திராமைதான். சிறுவயதில் அத்துணை சாமர்த்தியசாலிகளாகவிருப்பவர்கள் வளர்ந்ததும் வெகு சாதாரண மனிதர்களாகி விடுகின்றமைக்கு அவர்களது அலட்சியத்துடன் எதிர்நோக்கப்பட்ட கேள்விகளும் பெரியவர்களது புறக்கணிப்புக்களுமே காரணமாகவிருக்கலாம். அல்லது 'சின்னத்தனங்களிலிருந்து' விடுபட்டு பெரியவர்களின் உலகுக்குள் நுழையும் பேரவாவில் தாமாகவே தமது சிந்தனையைச் சுருக்கிட்டுக் கொண்டதாகவும் கருதலாம். எம்மால், சிறுபிள்ளைத்தனங்கள் எனக்குறிப்பிடப்படுபவை உண்மையில் சிறுபிள்ளைத்தனமானவையா என்ற கேள்வியும் எழுகிறது.<br /><br />Sopie Mol ஐ ரோய் இப்படி விபரிக்கிறார்,<br /><br /></span><span style="font-size:85%;"><strong>The seeker of small wisdoms: <em>Where do old birds go to die? Why don't dead ones fall like stones from the sky?</em><br />The harbinger of harsh reality: <em>You're both whole wogs and I'm a half one.</em><br />The guru of gore: <em>I've seen a man in an accident with his eyeball swinging on the end of a nerve, like a yo-yo</em></strong><em>(pg.17)</em><br /><br />மற்றையது, சில விடயங்களை அவர் எடுத்துச் சொல்லும் பாணி,<br /><br /></span><span style="font-size:85%;"><strong><em>While other children of their age learned other things, Estha and Rahel learned how history negotiates its terms and collects its dues from those who break its laws. They heard its sickening thud. They smelled its smell and never forget it.<br />History's smell.<br />Like old roses on a breeze.<br />It would lurk forever in ordinary things. In coat hangers. Tomatoes. In the tar on roads. In certain colors. In the plates at a restaurant. In the absence of words. And the emptiness in eyes. </strong>(pg.54)</em><br />வரலாற்றின் தன்மை, Estha, Rahel ன் அம்மா சமூகத்தின் (வரலாற்றின்) விதிகளை மீறியதை அந்தக் குழந்தைகள் உணரும் விதம்..<br /><br />அவர்களது வாழ்வு இப்படித் தடம்புரண்டு போனமைக்கு Sopie Mol ன் வருகையும், அவள் இறந்தமையும்தான் காரணமென்பது வெறுமனவே ஒருபக்கத்தால் மட்டும் அவ்விடயத்தை அணுகுமொரு முறைதான். உண்மையில் இவையனைத்தும் இந்தக் கதை நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதிக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டிருந்தன.<br /><br /><strong><em>That it really began in the days when the love laws were made. The laws that lay down who should be loved, and how. And how much.</strong><br />(pg.33)</span></em><span style="font-size:85%;"><br /><br />யார், எப்படி, எந்தளவு நேசிக்கப்பட வேண்டும் என்ற அன்பின் விதிகள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் பிரச்சனைகள் முளைவிடத் தொடங்கிவிட்டிருந்தன. அம்மா இந்த விதிகளை மீறினார். யார் யார் நேசிக்கப்படத் தகுந்தவர்களென்ற பட்டியலில் இடம்பெற்றிராத தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவரை அவர் நேசித்தார். அத்தகையவர்களை எப்படி நேசிக்கவேண்டுமென்ற விதிகளைக் கடந்து, எந்தளவு நேசிக்கவேண்டுமென்ற அளவு கடந்து எல்லைதாண்டி நேசித்தார். அவரது அந்த நேசம் அவரால் நேசிக்கப்பட்டவரின் உயிரையும், அவர் குழந்தைகளின் குழந்தைமையையும் விலையாகப் பெற்றுக்கொண்டது. ரோய் சொல்வது போல, <strong><em>however, for practical purposes, in a hopelessly practical world... </strong>(pg.34)</em><br /><br />ஆண்குழந்தை Estha தியேட்டரொன்றில் வைத்து குளிர்பான விற்பனையாளனொருவனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்காளாக்கப்படுகிறான். அவ்விற்பனையாளனின் ஆணுறுப்பைக் கையில் பிடித்திருப்பதற்குப் பரிசாக குளிர்பானமொன்று அவனுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தான் துஷ்பிரயோகத்துக்காளாவது புரியும் வயதில் அவனில்லையெனினும், அந்த அருவருப்பு, அச்சம்பவம் அவனில் ஏற்படுத்திய தாக்கம், இது தெரியவந்தால் அம்மா தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற பயம் (குழந்தைகள் எப்போதும் தாம் நேசிக்கப்பட வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள்), அந்த மனிதனை மறுபடியுமொருமுறை சந்திக்க நேருமோ என்ற கலக்கம், அதேநேரம் தனது சகோதரியை அந்த மனிதனிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு அனைத்துமிணைந்து வீட்டை விடப் பாதுகாப்பானதோர் இடத்தை ஆற்றுக்கு அப்பால் தேர்ந்தெடுக்க அவனை வழிநடத்துகின்றன. ஒருவகையில் இதுவே Sopie Mol ன் மரணத்துக்கும் காரணமாயமைகிறது. பிற்காலத்தில் அவனது ஆளுமையிலும் பாரிய மாற்றத்தையேற்படுத்துகிறது. சிறிய, சாதாரணமாகத் தோற்றமளிக்கின்ற விடயங்கள் எப்போதும் அதனையொத்த விளைவுகளை மட்டுமே தந்துவிடுவதில்லையென்பதை இது உணர்த்திச் செல்கிறது.<br /><br />சமூகத்தில் ஆண்களையும் பெண்களையும் நடாத்தும் விதத்திலுள்ள பாரிய வேறுபாட்டையும் இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. விவாகரத்துப் பெற்றுக்கொண்ட Chacko வின் Men's needs னைப் புரிந்துகொண்ட அவரது அம்மா (மம்மாச்சி) பெண்கள் தொந்தரவின்றியும், யார் கண்ணிலும் படாமலும் அவரது அறைக்கு பின்புறமாக வந்து செல்லக்கூடியவாறு புதிய வாயிலொன்றையும் அமைக்கிறார். உணவுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளையும், குடிகாரக் கணவன்மாரையும் கொண்ட தொழிற்சாலைப் பெண்கள் பணத்துக்காக தாராளமாக அங்கு வந்து போயினர். ஆனால், அதேவேளை அதேபோல விவாகரத்துப் பெற்ற அம்மாவின் Women's needs புரிந்து கொள்ளப்படாதது ஆச்சரியத்துக்குரியதே. அம்மாவுக்கும் வேலுதாவுக்குமிடையேயான தொடர்பு தெரியவந்ததும் சீறிப்பாயும் மம்மாச்சி அம்மாவை அறையொன்றினுள் அடைத்து வைக்குமளவு கோபம் கொண்டமையும், இது வெளியில் தெரியவந்தால் குடும்பத்தின் மானம் மரியாதை என்னாகுமென்று வருந்துவதும் கவனிக்கத்தக்கது. குடும்பத்திலுள்ள ஆண் என்ன செய்தாலும் தொலையாத மானமும், மரியாதையும் பெண் என்றவுடன் கண்காணாத் தொலைவுக்குப் பறந்து விடுகின்றன. இங்கு மறுபடியும் 'அன்பின் விதிகளின்' (யார் நேசிக்கப்பட வேண்டும், எப்படி & எந்தளவு) ஆட்டம் தொடங்குகிறது.<br /><br /><br />5.<br /><br />கேரளாவில் அப்போது பரவிக்கொண்டிருந்த மார்க்ஸிஸம் மற்றும் பூகோளமயமாக்கலுக்கெதிரான வலிமையான விமர்சனம் நாவலினூடு முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் வேறெந்தப் பாகத்தையும்விட கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகளவு பலம் பொருந்தியதாக விளங்கியமைக்கு அங்கு கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழ்ந்தமையையும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. மார்க்ஸிஸத்தை கிறிஸ்தவத்துடன் ஒப்பிடும் ரோய் கிறிஸ்தவமும் மார்க்ஸியமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒத்த தன்மைகளைக் (similar characteristics) கொண்டிருப்பதனால், இந்துக்களை விட கிறிஸ்தவர்கள் அதில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு வாய்ப்புண்டாகியிருக்கலாமென்கிறார்.<br /><br /><strong><em>Marxism was a simple substitute for Christianity. Replace God with Marx, Satan with the bourgeoisie, Heaven with a classless society, the Church with the Party, and the form and the purpose of the journey remained similar. An obstacle race, with a prize at the end.</strong><br />(pg.64)</span></em><span style="font-size:85%;"><br /><br />ஆனாலும், இந்தக் கோட்பாட்டிலிருந்த குழப்பம் யாதெனில் கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்கள் யாவரும் பெரும்பாலும் தோட்டங்கள், தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்களான நிலப்பிரபுக்களாகவே இருந்தமை; மரணத்தை விடப் பயங்கரமான விடயமாக கம்யூனிஸத்தைக் கருதும் இந்தக் கிறிஸ்தவர்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்தும் வந்தமை. கேரளாவில் கல்வியறிவு உயர்நிலையில் காணப்பட்டமையும் கம்யூனிஸத்தின் பரவலுக்கு ஒரு காரணமாகக் கருதப்பட்டது. ஆனாலும் உண்மையில், சாதிப்பாகுபாடுகளுக்குள்ளான, மரபார்ந்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற சமூகத்தை ஒருபோதும் கேள்வி கேட்காத மறுசீரமைக்கும் அமைப்பாக மட்டுமே கம்யூனிஸம் கேரளாவில் அறிமுகமானதெனலாம். அதன் ஆதரவாளர்களும் சாதிப் பாகுபாடுகளுக்குட்பட்டே செயற்பட்டமையும் குறிப்பிடத்தகுந்தது.<br /><br /><em><strong>The Marxists worked from within the communal divides, never challenging them, never appearing not to. They offered a cocktail revolution. A heady mix of Eastern Marxism and orthodox Hinduism, spiked with a shot of democracy.</strong><br />(pg.64)<br /></em><br />கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கிய நம்பூதிரிபாட் தேர்தல்களில் பங்குபெறுவதிலும், தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதிலும் நம்பிக்கை கொண்டிருந்தமையும், அதன் விளைவாகக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டமையும், தீவிரவாதப் பிரிவினர் நக்ஸலைட்டுகளாகச் செயலாற்றத் தொடங்கியமையும் மேலும் கவனத்திற்கொள்ளத்தக்கன.<br /><br />கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக (card holding member) இருந்த வேலுதாவின் மீது அம்மாவின் குடும்பத்தினர் பொய்யான குற்றப்பதிவு தாக்கல் செய்தபோது, தனிப்பட்ட விடயங்களில் தலையிட முடியாதென கட்சியும் அவனைக் கைவிட்டு விடுகிறது. இறுதியில் பொலிசாரினால் அடித்து நொறுக்கப்பட்டு இறக்கும் தறுவாயில், இதுவரைகாலமும் கடவுளாலும், வரலாற்றாலும் கைவிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவனை இப்போது மார்க்ஸும் கைவிட்டுவிட்டாரென்கிறார் ரோய்.<br /><br />பூகோளமயமாக்கலின் விளைவுகளுக்குச் சிறந்த உதாரணமாக, கதைநிகழ் காலத்தைய Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் திகழ்கின்றனர். செய்மதித் தொலைக்காட்சி மூலம் உலகத்தில் ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்வுகளையும் நாள் முழுதும் அறைக்குள்ளிருந்தே கண்டுகளிப்பதுடன், அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டு இரு தடவை வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் இருவரும். Baby Kochamma தனது வீட்டிலிருக்கும் தளபாடங்கள் பொருட்கள் மீது அளவற்ற பிரியம் கொண்டவர்.அவரது மார்க்ஸிய - லெனினிஸம் மற்றும் புரட்சி பற்றிய பழைய பயங்கள், BBC யில் ஒளிபரப்பப்படும் வறுமை, யுத்தங்கள் பற்றிய செய்திகளால் மீள்வடிவம் பெறுகின்றன. வறுமையும், படுகொலைகளும் அவருக்குத் தனது வீட்டுத் தளபாடங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விளைவிக்கும் காரணிகளாகவே தோற்றமளிக்கின்றன. எந்தக் கணத்திலும், தொலைக்காட்சியில் தென்படும் யாரேனுமோர் வறியவன் தனது பொருட்களைத் திருடிக்கொண்டு விடலாமென்ற பயத்தில் யன்னல்களைக் கூட எப்போதும் மூடியே வைக்கிறார். மெய்மறந்து தொலைக்காட்சியை இரசிக்கும் நேரங்களில் Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் ஒரே கிண்ணத்திலிருந்து வேர்க்கடலையை அள்ளியெடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வது, பூகோளமயமாக்கமும், செய்மதித் தொலைக்காட்சி நிகழ்வுகளும் அந்தப் பழைய வீட்டிலும் சமத்துவத்தைக் கொண்டுவந்து விட்டனவெனக் கிண்டல் தொனியுடன் குறிப்பிடப்படுகிறது.<br /><br />சுருக்கமாகக் கூறுவதாயின், அருந்ததி ரோயின் இந்த நாவல், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததும், தன்னால் போற்றப்பட முடியாததுமானவற்றை அழிப்பதற்கு மனிதருக்குள்ள தீராத ஆவலை எடுத்து விளம்புவதாகவுள்ளது.<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>Feelings of contempt born of inchocate, unacknowledged fear - civilization's fear of nature, men's fear of women, power's fear of powerlessness.<br />Man's subliminal urge to destroy what he could neither subdue nor deify.<br />Men's Needs.</strong><br />(pg.292)</em><br /><br />இங்கு விலையாகக் கொடுக்கப்பட்டவை (மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கு மீள்கிறோம்):<br /><br /></span><span style="font-size:85%;"><em><strong>இரு குழந்தைகளின் குழந்தைமை<br />பெண்ணின் நேசம்<br />மற்றும், The God of Small Things</strong></em><br /><br />வரலாற்றின் விதிகளை மீறுபவர்களுக்கு இது மிகச் சாதாரணமான தண்டனையாக/ விலையாகத் தோன்றலாம்.<br />ஆனால்..,<br />நிச்சயமாக அது சாதாரணமானது தானா??<br /><br /><br /><em>(நன்றி:- புத்தகத்தை அன்பளித்த தோழனுக்கு...)</em></span>Unknownnoreply@blogger.com29tag:blogger.com,1999:blog-19146565.post-69535237196381874692007-10-12T11:43:00.001-04:002007-10-12T12:08:16.087-04:00ஒரு துண்டும் சில தகடுகளும் குறித்து...<span style="font-size:85%;"><em>'நச்சுப் பொய்கையொன்றின் நடுவே ஒரு செந்நிறத் தாமரை பூத்தது. அதுக்கு தான் *வெடிபலவன் மாதிரி இருக்கவேண்டுமென்று விருப்பம். தன்ரை கண்ணைக் குத்துற சிவப்பு அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி வெள்ளையாய் இருக்கோணும். தன்ரை கால் சேத்துக்குள்ளை புதைஞ்சிருக்கிறதும் அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி கால்கள் பற்றின உணர்வேயில்லாமல் பறந்து திரியோணும். </em></span><br /><span style="font-size:85%;"><br /><em>தண்ணியில் கழுவிக் கழுவி தன்ரை சிவப்பில் கொஞ்சத்தை ஒருவழியா போக்கிக் கொண்டது. சரியா நொந்ததென்டாலும் தன்ரை காலை சேத்துக்குள்ளையிருந்து பிடுங்கியும் கொண்டது அந்தப் பிடிவாதம் பிடிச்ச தாமரை. </em><br /><br /><em>இப்ப அது வெள்ளையில்லை, ஆனா <strong>சிவப்பாவும் இல்லை</strong>. இப்பவும் அதாலை பறக்க முடியேல்லை, ஆனா ஒரே இடத்தில் முந்திமாதிரி <strong>புதைஞ்சும் இல்லை</strong>.<br /></em><br /><em><strong>அது முக்கியம்</strong>. </em><br /><br /><em>தண்ணிக்குள்ளை தன்ரை பாட்டுக்கு மிதந்து திரிய முடிஞ்சது. அந்தமட்டில் அதுக்கு சந்தோஷம்தான்.'<br /></em><br /><br />ஏதோவோர் புள்ளியிலிருந்து தொடங்கியாகத்தான் வேண்டும், அல்லது கோட்டிலிருந்தாவது. ஒரு கதையெழுதவென உட்கார்ந்தேன்.. அந்தக் கதை என் மூளையிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கியது.<br /><br />..................<br /><br />மேசையின் மேலிருந்த அழைப்பிதழை அவள் வெறித்துக் கொண்டேயிருந்தாள். கணங்கள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலங்களாகி, மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, வருடங்கள் யுகங்களாகி காலம் அவள் கண்ணெதிரே ஒரு நீர்த்திவலையென உருண்டோடிக் கொண்டிருந்தது.<br /><br />இந்தத் திருமணத்துக்கு கட்டாயம் போகத்தான் வேண்டுமா?<br /><br />'<strong>வேண்டும்</strong>' என்பதற்கான காரணங்கள்:<br />- அது மிக மிக நெருங்கிய தோழியின் திருமணம்.<br />- பாடசாலைக் காலத்துக்கு முன்பே அறிமுகமாகி இன்றுவரையும் வாழ்வின் மேடு பள்ளங்கள், கோணல்மாணல்கள், இன்பதுன்பங்கள் அனைத்திலும் பங்குகொண்டவள்.<br />- கட்டாயம் வர வேண்டுமென்று நேற்றும் தொலைபேசியில் தனியாக அழைப்பு விடுத்திருந்தாள்.<br />- அவளது வாழ்வின் மிக முக்கியமான தருணமொன்றில் நான் கூடவிருந்தாக வேண்டியது கட்டாயம்.<br />- போகாவிட்டால் ஒருபோதும் என்னை மன்னிக்க மாட்டாள்.<br />- ஒரு அருமையான நட்பை இழந்து விடுவேன்.<br />- என்னில் அதிகம் அக்கறை கொண்டிருப்பவளை மனம் வருந்தச் செய்துவிடுவேன்.<br />- etc. etc.<br /><br /><strong>'வேண்டாம்' </strong>என்பதற்கான காரணங்கள்:<br />- அந்த இடத்தில் நான் நானாக இருக்க மாட்டேன்.<br />- சாறி உடுத்த வேண்டும், அது என்னால் முடியாது.<br />- காது கழுத்துக்கு ஏதாவது போட்டுக்கொண்டு போகவேண்டும், அதுவும் என்னால் முடியாது.<br />- ஆக மொத்தத்தில், என் சுயத்தை விட்டுக் கொடுக்க வேண்டிவரும்.<br /><br /><em>'நீ ஒன்டும் போடாமல் வந்தாலும் நான் எதுவுமே சொல்ல மாட்டன், வந்தால் காணும், எனக்கென்னமோ யோசனையாவேயிருக்கு வர மாட்டியோ என்டு''</em> (நன்றாகவே புரிந்து கொண்டிருப்பவள்).<br /><em>'எனக்கும் ஒன்டும் போடாமல் வர விருப்பம்தான்.. பிறகு உன் மாப்பிள்ளை மயங்கி எனக்குப் பின்னால் வந்தாரென்டால்.., வேண்டாம், என்னாலை ஏன் ஒரு கல்யாணம் குழம்ப வேணும்</em>'<br /><br />வேடிக்கையாகப் பேசுவதொரு வித்தைதான். இக்கட்டான சந்தர்ப்பங்களிலிருந்து அவ்வப்போது நழுவிக்கொள்வதற்கான சிறந்த உபாயம். யாரையும் காயப்படுத்தாமலும், அதேநேரம் பிடிகொடுக்காமலும் கேள்விகள், மற்றும் எதிர்பார்ப்புக்களிலிருந்து மிக இலகுவாகத் தப்பித்துக்கொள்ளலாம், அந்த நேரத்துக்கு மட்டும். அதுவொரு தற்காலிக தப்பித்தல்.<br /><br />சாறி கட்டத்தானே பிடிக்காது; சல்வார் இல்லாட்டி குர்தா ஏதும் போட்டுக்கொண்டு போகலாம். ஆனால், திருமண வீட்டில் அவள் மட்டுமொரு விநோதப் பிராணியாகிப் போவாள். ஆண்களை கோட் சூட்டுக்குத் தாவ அனுமதித்த திருமணங்களில் கூட பெண்களுக்கு சாறியிலிருந்து விடுதலையே இல்லை. 'எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்குடைய பெண்கள் மட்டும் ஆவதேயில்லை' எங்கேயோ வாசித்திருந்த கவிதை அவள் நினைவுக்கு வந்தது. எல்லாம் ஒன்றுதான். பண்பாடும், மரபும் பெண்களாலேயே கட்டிக் (சாறி கட்டி, தாலி கட்டி) காப்பாற்றப்பட வேண்டும். ஆண்கள் அனைத்தையும் மொனிட்டர் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.<br /><br />சாறி கட்ட, நகை போட ஏன் பிடிக்காது? இது அவள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பதில் (கேள்வியின் தோரணையைப் பொறுத்து) அவள் கைவசமிருக்கும்.<br /><br />அதிகாரத்துடன் அல்லது இளக்காரத்துடன் மூன்றாம் பேரால் கேட்கப்பட்டால்:<br /><em>'என் உடம்பு.. எதுவும் போடுவதும் போடாததும் என் இஷ்டம்.. நீங்கள் யார் அதைப்பற்றிக் கவலைப்பட'</em><br /><br />அக்கறையுடன், உண்மையாகவே அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் (மூன்றாம் தரவழி):<br /><em>'நானொரு உயிருள்ள மனுசி.. ஷோக்கேஸ் பொம்மையில்லை.'<br /></em><br />மிக நெருங்கிய யாரும் எந்தத் தோரணையுடன் கேட்டாலும்:<br /><em>'விருப்பமில்லை</em>'<br />வேறென்ன, மௌனம்ம்ம்...<br /><br />ஒருமுறை அப்பாவின் நண்பரொருவர் <em>'ஏன் தோடு போடுவதில்லை?</em>' எனக் கேட்டபோது, இதே கேள்வியைப் பல்லாயிரம் முறை எதிர்கொண்ட சலிப்பில் அமைதியாக அவரை நோக்கி 'ஏன் <em>போட வேண்டும்?</em>' எனத் திருப்பிக் கேட்டாள். சுவரில் மோதுண்ட பந்தைப் போல எதிர்பாராத மறுகேள்வியில் ஒருகணம் அதிர்ந்துபோய் வாயைப் பிளந்தார் அவர். <em>'she's really a smart girl..'</em> அவரது வியப்பு வார்த்தைகளில் தொனித்தது. <em>'அது எங்கடை tradition என்டதுக்கும் அப்பாலை இந்தக் கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. அடுத்தமுறை உங்களைப் பார்ப்பதற்கு முதல் இதுக்கு பதில் கண்டுபிடித்து விடுகிறேனா பார்ப்போம்'</em> என்றுவிட்டுப் போனார். அந்தக் கணத்தில் அவளுணர்ந்த சந்தோஷம், அது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. மிக மிக நுணுக்கமான முறையில் அவளை விளங்கிக்கொண்டவர் அவர் மட்டும்தான். மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன். எ+கா 4 அபத்தம்: ஆண்கள் கோட்சூட் போட்டாலும் தொலையாத பண்பாடு சேலை கட்டியவுடன் காப்பாற்றப்பட்டு விடும்) காரணங்களுக்கு அப்பால் எதற்காக சாறி உடுத்தவும், தோடு போடவும் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும் என்பது தான் கேள்வி.<br /><br />பெண்களுக்கான அடையாளங்களாய் சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டவற்றைப் புறக்கணித்து வாழ்வதன் சிரமம் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். 'என்ன தைரியம் உனக்கு இப்படிப் பண்ண' என்ற அதிகாரப் பார்வைகள், 'ஐயோ பாவம் அவ்வளவு வசதியில்லை போல' என்ற அங்கலாய்ப்புக்கள், 'வடிவாய் வெளிக்கிடத் தெரியாத பெட்டை' என்ற இளக்காரங்கள் கூடப் பரவாயில்லை. 'நீ இப்படியிருப்பதெல்லாம் மற்றவர்களிடமிருந்து உன்னை வித்தியாசமாய்க் காட்டிக்கொள்ளவும், மற்றவர்களது attention ஐ உன் பக்கம் திருப்பவும்தான், எல்லாரும் உன்னிடம் வந்து நீ ஏன் இப்படியென்று கேட்பதில் உனக்கு ஒருவித சந்தோஷம்' என்பதான அல்லது 'மற்றவர்களுக்கு முன்னால் உனது இமேஜை விட்டுக்கொடுக்காமலிருக்கத்தான் நீ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாய், மற்றபடி உண்மையில் உனக்கு விருப்பமில்லாமலில்லை' என்பதான 'நான் இப்படி' களை எதிர்கொண்டு எதிர்கொண்டு அவளுக்கு உண்மையில் 'தான் எப்படி' என்பதே ஒருவித குழப்பமாகிப் போனது.<br /><br />இருந்தாலும் அருமையான குடும்பமொன்று அவளுக்கு வாய்த்திருந்தது. 'இப்படி தோடு கூட போடாமலிருந்தால் கல்யாணத்துக்கு வாற சனமெல்லாம் எங்களுக்கென்னமோ வசதியில்லையென்டு நினைக்கும்' என அங்கலாய்த்தாலும், 'நாங்கள் வசதியாயிருக்கிறமா இல்லையா என்டதை ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன.. வசதியில்லாட்டியும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கிக்கொண்டு போட்டு அழகு காட்டுற ஆக்களைப் பார்த்த பிறகுமா இப்படிக் கேட்கிறீங்கள்' என திருப்பிக் கேட்கும் மகளை நினைத்து உள்ளூரப் பெருமைகொள்ளும் அம்மா. சாமத்தியப்பட்டபோது இதெல்லாம் ஒன்றுமேயில்லையென்டு உடனேயே வெளியில் திரிய அனுப்பினவா, இவ்வளவுக்கும் அவளின் தோழிகளெல்லாம் ஒரு மாதம் வரை அறையை விட்டே எட்டிப்பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சுதந்திரமாகச் சிந்திக்கப் பழக்கிய அப்பா. 'என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறீங்கள்' என்று விடுப்புக் கேட்பவர்களுக்கெல்லாம், 'என் பிள்ளையை நான் சராசரி பொம்பிளையா வளர்க்கவில்லை' என்று அடிக்கடி சொல்பவர். உண்மைதான்.., திருமணச் சந்தையில் விலைபோக தன் பிள்ளையை அவர் வளர்க்கவில்லைதான்.<br /><br />ஆனால், இந்தப் பாதுகாப்பும் பிடிவாதங்களும் இந்தக் குடும்பத்துக்குள் இருக்கும்வரை மட்டும்தானென்பதும் அவளுக்குத் தெரிந்துதானிருந்தது. திருமணம் போன்ற சட்டகங்களுள் அடைபட்டால் அதற்கேயான விதிகளுடன் தான் (அவரின் விருப்பம், பிள்ளைகளின் விருப்பம், இனசனத்தின் விருப்பமென்று - அவளது விருப்பத்தை யார் பொருட்படுத்துவார் - சுயம் துண்டு துண்டாய்ச் சிதறி திசைக்கொன்றாய்ப் பறக்க) தொடர்ந்து வாழவேண்டிவரும், எமது விதிகளையும் ஒழுக்கங்களையும் தொலைத்துவிட்டு. 'நானும் விழுமியங்களுடதான் வாழ்கிறேன். ஆனால், எனக்கான விழுமியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் நானே உருவாக்கிக் கொள்கிறேன்' (-அருந்ததி ரோய்?) எங்கேயோ வாசித்தது போல வாழ்ந்துவிட விருப்பம் தானெனினும், அதற்காகத் தனித்திருக்கவும் தயாரில்லை. ஏன் மனிதராய்ப் பிறந்த அனைவரும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், துணை தேடவும் சபிக்கப்பட்டிருக்கிறோம்..? நேசம் அவளது மாபெரும் பலவீனம்!<br /><br />எப்படிப் பார்த்தாலும் அவள் இன்று திருமணத்துக்கு போய்த்தானாக வேண்டும். தனது சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஒரு உறவை இழந்துவிட முடியாது. போகத்தான் வேண்டுமென்பதைக் கட்டாயமாக்கினால் பின்னும் அவள் முன் இரு தெரிவுகள்:<br />1. சாறி உடுத்திக்கொண்டு, நகையணிந்து போவது (சமூகத்துடன் ஒன்றிவாழும் முயற்சி. ஆனால், விருப்பமில்லாத ஒன்றை வருந்திச் செய்ததில் இயல்பாக இருக்க முடியாமற் போகும்)<br />2. வேறேதாவது இயல்பு குலையாமல் அணிந்து கொண்டு தான் தானாகவே போவது (ஆனால் நிறைய விநோதப் பிராணி பார்வைகளையும், கேள்விகளையும் எதிர்கொள்ள நேருமாகையால் அங்கும் இயல்பு குலையாமலிருக்குமா என்பது சந்தேகமே)<br /><br />உறவுகள் வேண்டுமென்றால் 'என்'னை இழக்கவேண்டிவரும். எனது 'என்' வேண்டுமென்றால் உறவுகளை இழக்கவேண்டி வரும். <strong>நான் நானாக.., இதே மனிதர்களுக்கு மத்தியில் அவர்களை நேசித்துக்கொண்டு வாழ்வது எப்படி???<br /></strong><br /><br />மனம் இவ்வளது தூரம் வட்டமிட்டு வரும்வரை அவள் அழைப்பிதழை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாளென்று எழுதிக்கொண்டு அவசர அவசரமாக கதையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விடுகிறேன்.<br /><br />.....................<br /><br />கேரளாவில் ஆதித்தாய்வழிச் சமுதாயம் நிலவியதன் எச்சங்களாக இன்றும் நிலைத்திருப்பவற்றுள் அங்கு பெண்கள் பெரும்பாலும் வெள்ளை நிற சேலை கட்டுவதைக் குறிப்பிடலாம் என்கிறார் ஜெயமோகன் (ஆழ்நதியைத் தேடி-கட்டுரைத் தொகுப்பு). வெள்ளை நிறச் சேலைக்கும் ஆதித்தாய்வழிச் சமுதாயத்துக்குமான தொடர்பு என்னவென்ற கேள்வியெழலாம். தாய்வழிச் சமுதாயத்தில் பெண்களுக்குப் பாலியல் சுதந்திரமிருந்தது. அங்கு அவர்கள் எவரையும் கவர்ந்திழுக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. கண்கவர் வண்ணங்களில் ஆடை அணிவதும், தம்மை அலங்கரித்துக் கொள்வதும் எதிர்பாலாரைக் கவர்ந்திழுக்க வேண்டிய, பெண்களுக்குப் பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட, தந்தைவழிச் சமுதாயத்திலேயே அறிமுகமாகியிருக்கலாமெனும் ரீதியில் தொடர்பை நிறுவுகிறார் அவர்.<br /><br />பெண்ணுடம்பு மிக மிக இயல்பாய்ப் பண்டமயமாதல் எனவும் தலைப்பிட்டிருக்கலாமோ?<br /><br /><br /><em></em><br /><em>*வெடிபலவன் - ஒருவிதத் தாவரம். பஞ்சைப்போல காற்றில் பறந்து செல்லும் கீழே ஒரு சிறிய விதையுடன்.</em></span><br /></span>Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-19146565.post-48941390910912157662007-09-02T13:09:00.000-04:002007-10-13T01:25:38.403-04:00மர்மங்கள் நிறைந்து வழிந்திடுமொரு வீடு<span style="font-size:85%;"><strong><em>கண்மூடித் திறப்பதற்குள்<br />சிறகுதிர்த்துப் பறந்து மறையும்<br />வண்ணப் பறவையொன்றன் நினைவில்<br />அலைவுறும் அடிமனம்..<br />இறுதியில், எனக்கென மிஞ்சுவதென்னமோ<br />கூந்தலிடை சிக்கிக்கொண்ட<br />மென்சிறகிலிருந்து துளிர்த்த கனவுகள் மட்டும்தான்.<br /></em></strong><br /></span><br /><span style="font-size:85%;">பல வருடங்களிருக்கலாம், நானதைக் கடந்து சென்று.<br />நினைவு தெளியாத வயதில்<br />அம்மாவின் காலை இறுக்கக் கட்டிக்கொண்டு<br />முகத்தை எதிர்ப்புறம் திருப்பியபடி<br />நடந்து சென்றிருந்திருப்பேன், அந்த வீட்டைக் கடந்து<br /></span><br /><span style="font-size:85%;">ஒவ்வொரு பொழுதும் வெவ்வேறு விதமாய்<br />நிறம்மாறிக் கொண்டிருந்தது வீடு<br />சூனியம் கடலாய்க் காவுகொண்டிருந்தும்,<br />வீறிட்டபடி வெளிக்கிளம்பும் பெண்ணின் அலறல்<br />திடீரென்று வந்து செவி துளைத்துப் போகும்<br />மறுகணம், குழந்தையின் கேவல் ஓங்கியெழுந்து<br />மனமதிரப் பண்ணும்<br />சமயங்களில்,<br />ஆக்ரோஷங் கொண்ட பத்ரகாளியின் உறுமலாய்<br />ஏதோவொன்று...<br /></span><br /><span style="font-size:85%;">அதன் புகை படிந்த யன்னல்களெங்கும்<br />வெந்நீர்த் திவலைகளெனத் துளிர்த்திருக்கும் மர்மம்<br />செங்கல் ஓடுகளினிடையே<br />மழைநீரென ஒழுகிக் கொண்டிருக்கும்<br />சுவரின் வெடிப்புக்களினூடு தலைநீட்டி<br />பல்லியொன்று கதை சொல்லித் திரிய<br />துள்ளி விழும் எனது நிழலும்<br />மர்ம வீட்டைப் பற்றிய பயம்<br />பாம்பைப்போல் சரசரவென்று<br />என் நாடி நாளங்களெங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது<br />ஒரு காலம்<br /></span><br /><span style="font-size:85%;">இப்போது நான் வளர்ந்தவள்..,<br />பருக்களெனத் துருத்திக் கொண்டிருக்கும் திமிரும்,<br />விறைத்த மூளையுமாய்<br />மரணத்துக்கே மசியாதவளை வீடென்ன செய்துவிடும்,<br />வெறும் வீடு?<br /></span><br /><span style="font-size:85%;">உளுத்துப்போன கூரையிலிருந்து<br />நம்பிக்கைகள் காரை காரையாய் பொடிந்து<br />உதிர்ந்திடத் தொடங்குமோர் பொழுதில்<br />விரிசல் விழுந்த மனத்தினளாய்<br />தனித்த மனுஷியாய்<br />மறுபடியுமொருமுறை அதைக் கடந்து போகலானேன்<br /></span><br /><span style="font-size:85%;">அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருக்க வேண்டும்..<br /></span><br /><span style="font-size:85%;">விரல் பிடித்து எழுதப்பழக்கியவள்<br />கதவுகளைத் தட்டித் திறக்கும் வழிசொல்ல மறந்திருந்தாள்<br />வாயிற்கதவின் ஆயிரமாயிரம் சிறு துளைவழியே<br />தயக்கத்துடன் எட்டிப் பார்த்து<br />ஒளிவீசும் பூச்செண்டுகொண்ட சிறுமியொருத்தி<br />எனை நோக்கி வரக்கண்டு<br />கவலைகள் மறந்து களித்துத் திரிந்திருந்தேன்<br />சில காலம்<br /></span><br /><span style="font-size:85%;">வடதிசையிலிருந்து சுழன்றடித்த புயற்காற்று<br />மனதுள் சுழித்து<br />வீட்டைச் சுற்றி பூத்தூறல் பொழிய<br />என் பிரியங்களனைத்தும் ரோஜா இதழ்களாய்<br />வழிநெடுக கொட்டுண்டு கிடக்கக் கண்டேன்<br />அவசர அவசரமாய் பொறுக்கி மடியில் கட்டி<br />தலைநிமிர்ந்திட முன்னம்<br />வெகுதொலைவில் அவள்<br />சிறுபுள்ளியெனத் தேய்ந்து கொண்டிருந்தாள்<br /></span><br /><span style="font-size:85%;">அது என் பிரமையென்கிறார்கள்..<br /></span><br /><span style="font-size:85%;">மடி இன்னமும் கனத்தே கிடப்பதும்<br />பூச்செண்டுக்காரி தூரத்தே மங்கலாய் ஒளிர்வதும்<br />கனவேயாகுமெனில்,<br />நனவுநிலைக்குத் திரும்பும் விருப்பு இப்போதைக்கில்லை<br />தவிரவும்,<br />வீடுகள் மீதான பிரியம்<br />அவ்வளவு விரைவில் நீர்த்து விடுவதுமில்லை..<br /><br /></span><em><span style="font-size:85%;"></span></em><br /><em><span style="font-size:85%;">(என் சிறகு முளைத்த பிரியமானவளுக்கு.., நெஞ்சுகொள்ளா நேசத்துடனும், மன்னிப்பு வேண்டியும். இப்படித்தான் காட்டமுடிகிறது எனதன்பை.. நல்லதை நாடிப் போகின்றவளை வாழ்த்துவதல்லாமல், அழுது வழியனுப்புவானேன்?)<br /><br /></span></em><em><span style="font-size:85%;"></span></em><span style="font-family:arial;font-size:85%;">There shall be showers of blessings..<br />this is a promise of love..<br />There shall be seasons refreshing..<br />la la la la la la laaa.. </span>Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-19146565.post-13234317784312770092007-07-24T23:20:00.000-04:002007-07-29T06:06:51.923-04:00முன்பனிக்காலத்துப் பிரியங்கள்<span style="font-size:85%;">செஞ்சொண்டுக் காகமொன்றன்<br />நிலம் பதியா நிழல்போல<br />அலைவுண்டபடியிருக்கும்,<br />ஒரேயொரு நினைவு மட்டும் எனக்குள்..<br />அழித்துவிட முடியாததும் நித்தியமானதுமாய்..<br />சிவனொளிபாதத்தின் உச்சியில் நின்றபடி<br />சூரியோதயத்தின் முதல் கிரணத்தின்<br />ஸ்பரிசத்தை ரசிக்கும் பரவசத்துடனும்..,<br />விளிம்பில் நின்றுகொண்டு<br />ஆழ்கிணற்றினுள் எட்டிப்பார்ப்பதான<br />கலவரம் நிறைந்த ஆர்வத்துடனும்..<br /><br /><br />இந்தக்கணத்தில் உலகின் எங்காவதோர் மூலையில் கணனிக்கு முன் அமர்ந்திருந்து நீங்கள் இதனை வாசித்துக் கொண்டிருக்கக் கூடும்.., கையில் தேநீர்க் கோப்பையுடனோ.. நொறுக்குத் தீனியுடனோ. மிகச் சில காலம் மட்டுமேயான இவ்வுலகத்து வாழ்தலில் ஒவ்வொரு கணமும், கணத்தின் கணமும் அளப்பரிய பெறுமதி வாய்ந்தவை. விரல் சொடுக்குமொரு நொடிப்பொழுதில் என்னவும் நடந்துவிடலாம்.. அம்மாவின் விரலைப் பிடித்துக்கொண்டு துள்ளிநடந்த சிறுவன், கண்மூடித் திறப்பதற்குள் வாகனமொன்றில் சிக்கி நடுத்தெருவில் வீழ்ந்து கிடக்கலாம்.. புகழ்பெற்ற ஓட்ட வீராங்கனையொருத்தி ஒரு செக்கன் வித்தியாசத்தில் தோற்றுப் போகலாம்.. தற்செயலாக வெளிப்பட்ட ஒற்றை வார்த்தையின் காரணமாக நெடுங்கால உறவுகளும் முறிந்திடலாம்..<br /><br />அந்தக்கணத்தை.., கடந்துபோன துர்ப்பாக்கியமான அந்தப் பொழுதை மறுபடியொருமுறை திருப்பித் தரும்படி, காலச்சக்கரத்தை ஒரேயொரு கணம் பின்னோக்கிச் சுழற்றும்படி நம்முள் எத்தனைபேர், எத்தனை தடவை கடவுளிடம் இறைஞ்சியிருப்போம்..<br /><br />ஓ.எல் லில் வணிகக்கல்வி கற்பித்த ஆசிரியை கணவருடனான மனத்தாங்கலில் ஒன்பது மாதக் கர்ப்பிணியாய் தற்கொலை செய்துகொண்ட போது, கணவர் தனது மனைவிக்காக ஒரு சில நிமிடங்கள் செலவளித்திருந்தால் அதைத் தடுத்திருந்திருக்கலாமென இப்போதும் தோன்றுவதுண்டு. சுகமில்லாமல் படுத்திருக்கும் அம்மாவுக்கு, 'என்னம்மா பண்ணுது' என்ற எமது ஒற்றை வார்த்தை வேதனைகளனைத்தையும் போக்கியிருந்திருக்கும். பாராட்டுவது, நன்றிகூறுவது, மன்னிப்புக் கேட்பதென இதுபோன்ற இன்னமும் சிறு சிறு விஷயங்களில்தான் வாழ்தலின் அழகு தங்கியிருக்கிறது போலும். அவற்றை விடுத்து, தத்தமது ஈகோவைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில் வாழ்வினதும், அதனை உயிர்ப்புள்ளதாக்கும் உறவுகளினதும் மகத்துவங்களைப் புரிந்துவிடத் தவறிக்கொண்டிருக்கிறோம்..<br /><br />.........<br /><br />எமது சந்திப்பு மிக மிகத் தற்செயலானதுதான். எழுதவென முடிவெடுத்த அந்தக் கணத்தினைத் தவறவிட்டிருந்திருப்பேனாயின் என்றென்றைக்குமாய் அவனையும் தொலைத்திருந்திருப்பேன். உலகின் ஒரு கோடியில் அவனும், மறுகோடியில் நானுமென எமது அன்றாட அலைக்கழிதல்களுக்குள் மூழ்கியிருந்திருப்போம், எதுவிதக் கரிசனைகளுமற்று. வாழ்வென்பதே ஒரு மிகப்பெரிய அதிசயம்தான்.. எப்படி அது மனிதர்களை இணைத்தும், பிரித்தும் வேடிக்கை பார்க்கிறது.. எந்தவொரு உயிராலும் பிறனிருக்கத் தான் தனித்து வாழ்தல் இயலாததாயிருக்க.., அரியமொன்றினுள் புளியங்கொட்டைகளையும், குண்டுமணிகளையும் போட்டு உருட்டி உருட்டி விதவிதமான வடிவங்கள் தோன்றுவதையும், சிறு சலனத்தின்போதும் மறைந்து இன்னொன்று தோன்றுவதையும் வாய்பிளந்து ரசிப்பது போல, வாழ்வு மனிதர்களை இணைப்பதையும், இமைப்பொழுதில் காததூரம் விலத்தி விடுவதையும் அதே லயத்துடன் ரசிக்க முடியாததாயிருப்பதும் ஏன் ?<br /><br />கடல் கடந்த வாழ்வின் சிரமங்களுக்கு மத்தியில் ஈழத்து நினைவுகளுடனும், கடந்தகாலத்தின் காயங்களுடனும் எஞ்சியிருக்கும் உயிர்ப்புடன் மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க நிபந்தனைகள் தேவைப்படுவதில்லை அவனுக்கு.. மனிதர்கள் விசித்திரமானவர்கள். எவருடனும் நெருங்கிப் பழக முன்னரே அவரைப்பற்றிய விம்பங்களை மனதில் வளர்த்துக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். பின்னர் பின்னரான பொழுதுகளில் நெருங்கிப் பழக சந்தர்ப்பம் வாய்த்தாலும், அந்த விம்பம் இடையிடையே குறுக்கிட்டு தொந்தரவுபடுத்தும். சமயங்களில் 'விம்பத்துடன் மட்டுமே வாழ்தல் மேல்' எனவும் தோன்றும். இறுதியில், விம்பமும் யதார்த்தமும் முரண்படுகிற புள்ளியில் விரிசல் வெடித்து வாக்குவாதம் முற்றி, நூலறுந்த பட்டமென உறவும் காற்றிலலையத் தொடங்கிவிடும். பிறகென்ன.., கண், காது, மூக்கு முளைத்த கதைகளும் அவலரைத்தல்களும் 'ஏனடா, இந்த மனுச சகவாசம்' என்ற நிலைக்கு இட்டுக்கொண்டுவந்துவிடும். அதையும் தாண்டி, மனிதர்களை அவரவரது இயல்புகளுடன் - அவனைப்போல எவராலும் - நேசிக்க முடிதல் அதிசயம்தான்.<br /><br />நான் சொல்வது மட்டும்தான் சரி.. உனக்கென்ன தெரியுமென்ற தோரணையுடன் 'கொம்பு முளைத்த ஆம்பிளை' களுக்கு மத்தியில், என்னையும் சக மனுஷியாய் மதித்து அவன் கதைக்க முற்பட்டதுதான் பெரும் ஆறுதலாகவிருந்தது. வேறெவரும் என்னைக் கதைக்க வைக்க இத்தனை முயன்றதாய் நினைவில்லை. ஒவ்வொரு சின்னச் சின்ன விடயத்திலும் நான் என்ன நினைக்கிறேன், என் கருத்தென்ன.. பார்வையென்னவென்பது குறித்து இந்தளவு எவரும் அக்கறை கொண்டதாயும் நினைவில்லை. எனக்குள்ளே இறுகிக்கிடந்த சுயத்தை, மெல்ல மெல்ல மௌனத்தின் கண்ணாடித் திரைகளை உடைத்து நொறுக்கி வெளிக்கொணர முடிந்தது அவனுக்கு. இத்தனை 'வளவளா' க்காரியா நான், என ஒருகட்டத்தில் என்னாலேயே நம்பமுடியாமல் போனது. நீண்டகாலமாக எவருடனும் மனந்திறந்து பேசாததையெல்லாம் சேர்த்துவைத்து அவனுடன் பேசுகிறேனாக்குமென நினைத்துக் கொள்வதுதான்.<br /><br />..........<br /><br />மரணம் கருநிழலென உன்னைப் பின் தொடர்கிறதென்கிறாய்.. பிறந்த நாளிலிருந்து, செம்மண் ஒழுங்கைகளெங்கும் பூனையாய் மெல்ல அடியெடுத்து அது உன்னைத் துரத்திக் கொண்டிருக்க, பிரக்ஞையற்றவளாய் இங்கேயமர்ந்து எதுவும் எழுதிக்கொண்டிருப்பதும் அபத்தமெனத் தோன்றுகிறது.<br /><br />நீயின்றி பூரணமடையப் போவதில்லை<br />எனது எந்த இருப்பும்<br />எல்லாப் பொழுதுகளிலும்<br />உனக்காகவே உன்னோடே<br />காலங்களின் விறைத்த கணங்களினூடு<br />நானும் உயிர்த்திருப்பேன்<br />குட்டி அலிஸாய்<br />உன் மனக்காடுகளில் துள்ளியோட<br />போதாது இப்பிறவி ஒருசிறிதும்...<br /><br />(தொலைதூரத் தோழனுக்கு வாழ்த்துக்களுடன்..)</span>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-19146565.post-88332812606657574182007-06-12T09:35:00.000-04:002007-06-12T09:50:04.052-04:00வெறுமைகளின் வன்முறை<strong>இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு..!<br /><br />- மால்கம் எக்ஸின் அட்டல்லாவுக்கும், எஸ்போஸின் குழந்தைக்கும் மற்றும் அனைவருக்கும்</strong>1.<br /><br /><span style="font-size:85%;">எப்போதும் எதையாவது பேசிக்கொண்டிருந்தாக வேண்டும்.<br />அல்லது, எழுதிக்கொண்டு..<br />குறைந்தபட்சம் வாசித்துக்கொண்டாவது.<br /><br />ஒன்றும் அடுத்ததுமான இரு நிகழ்தல்கள்<br />அல்லது, அசைவுகளுக்கிடையிலான இடைவெளி (space)<br />சகிக்க முடியாததாகவிருக்கிறது.<br />உ+ம்: குளியலின் கடைசிச்சொட்டு நீருக்கும் துவாலையின் முதல் ஸ்பரிசத்துக்குமிடையிலான.. அல்லது, தொண்டைக்குள்ளால் இறங்கும் கடைசிப் பருக்கைக்கும் கையலம்புகையில் முதல் துளி நீருடனான உறவாடலுக்குமிடையிலான இடைவெளி..<br />(பாடிக்கொண்டே குளித்தல், பேசிக்கொண்டே சாப்பிடுதல் போன்ற உபாயங்கள் கைகொடுக்காது போயின்..)<br />யுகமென நீளும் அக்கணநேர வெறுமையின் வாதையில்<br />இத்தனையாண்டுகால வாழ்தலும் அதன் சமரசங்களும்<br />வரித்துக்கொண்ட அர்த்தங்களின் மீதான - துவம்சம்<br />நிகழ்ந்தே விடுகிறது.<br /><br /><br />2.<br /><br />ஓ.. யாழ்ப்பாணமா..?!<br /><br />புருவம் நெரித்து<br />அடையாள அட்டையைப் புரட்டியபடியிருக்கும்<br />அதிரடிச் சட்டைக்காரனினருகில்<br />அசடு வழிய அரைமணி நேரம் தாமதித்து<br />பல்லைக் காட்டுவதும்...<br />(கவனிக்க: புன்னகைக்கும் பல்லிளிப்புக்குமிடையிலான வேறுபாடு)<br /><br />இயல்பு மறந்து சந்தேகப் பார்வையுடனேயே ஏறிட்டு நோக்கும்<br />அதிகார + இனவாத விழிகளை எதிர்கொள்வதும்...<br />(அவற்றைக் கடன்வாங்கிக்கொண்ட சடத்துவம், சடத்துவமல்லாத அனைத்தும் உள்ளடங்க)<br /><br />அதிகரித்துக் கொண்டிருக்கும்<br />வாழ்க்கைச் செலவினைக் குறைகூறியபடி<br />சமயங்களில் உணவையே தள்ளிப்போட்டு பட்டினி கிடப்பதும்...<br />(இணையச் செலவுக்காய்.. கஞ்சிக்கழுது கொண்டிருப்பவரின் முன்னே பூவுக்கும் பாலுக்குமழுவதைப்போல)<br /><br />இன்னபிறவும்,<br />மார்க்கோஸ் துணைவர மால்கம் எக்ஸுடன்<br />சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் -<br />வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் -<br />(மேலும், We believe that all men are created equally because they are created in the image of God. - ட்ரூமன்)<br />பூக்கோவிலிருந்து பூர்த்தியு வரை<br />அனைத்தையும் விவாதித்தபடி<br />பனி படர்ந்த வெளி தாண்டி அடியெடுத்து வைப்பதான - கனவுகளைப்<br />புறக்கணித்தபடியேயிருக்கும் எப்போதும்..,<br />ஒரு சொட்டு இரக்கமுமின்றி (ஈவுமின்றி).<br /><br /><br />3.<br /><br />இனியென்ன...<br /><br />சிந்தனைக்குக் கடிவாளமிட்டு<br />(திமிரால் விறைத்த ஒற்றைக் கொம்புடன் கூடிய unicorn என சபித்தபடி),<br />உடலின் ஒவ்வொரு அணுவையும் பிழிந்து சாறெடுத்து<br />இனியுமேலாதென சோர்ந்து வீழ்கையில்<br />படுக்கைக்குத் திரும்ப வேண்டும்..<br /><br />கனவினை ஆக்கிரமித்துக் கொள்ளும்<br />கருநிறைக் குருதி படிந்த தரையும்,<br />கோணிப்போன முகங்களும்,<br />எச்சிலாயும், இரத்தமாயும் கடைவாயிலிருந்து உயிர்வடிய<br />துளைக்கப்பட்ட மனித உடலங்களும்,<br />இன்னும் பலவுமென..<br />காட்சிப் படிமங்கள் யாவற்றையும் - வெறும்<br />கழிப்பறைக் காகிதமென<br />கடலின் அக்கரையிலேயே கசக்கியெறிந்து கைகழுவி<br />மஞ்சள் புற்பாய் விரித்த ஸ்தெப்பி வெளியெங்கும்<br />பட்டாம்பூச்சிகளைத் துரத்தித் திரிந்த<br />கஸாக்கியச் சிறுமியொருத்தியை<br />நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் (ஆறுதலுக்காகவாவது..).<br /><br /><br />4.<br /><br />அதற்கப்பாலும்...<br /><br />(உம்பர்த்தோ ஈகோ.. டெரிடா, சிமோன் தி பூவாவை விமர்சித்ததன் போதானதைப் போன்ற)<br />உரையாடல்களின் நீட்சியில் எடுத்தெறியப்படும்<br />ஒரு வார்த்தைக்கும் மற்றுமொரு வார்த்தைக்கும்,<br />எழுதப்பட முன்னரே மனதிலுறைந்து விட்ட கவிதையொன்றின்<br />ஒரு வரிக்கும் மற்றைய வரிக்கும்,<br />(போர்கேயின் கணிதவியல் மற்றும் மார்க்வெஸின் மாயா யதார்த்தவாத மற்றும் அதனுடன் கூடிய..)<br />பிரதிகளின் ஒரு பக்கத்துக்கும் அதனருகான அடுத்த பக்கத்துக்கும்<br />இடையிலான இடைவெளியில்<br />வெளியெங்கும் வியாபிக்கும் ஆன்மாவின் எஞ்சிய தடயங்களோடு<br />சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வேன்,<br />இனியொருபோதும்..<br />என் சின்னஞ்சிறு மயிர்க்கொட்டிகளை வெறுமை விழுங்காதிருக்க.<br /><br /><br />5.<br /><br />எப்படிச் சொல்வேன் நான்... நியூயோர்க்கின் ஆதுபான் அரங்கிலும், வவுனியாவின் வீடொன்றிலும் கண்முன்னே சுடப்பட்டிறந்த (அட்டல்லாவுக்கு ஆறு வயதாயிருந்திருக்கவேண்டும் அப்போது.. எஸ்போஸின் குழந்தைக்கு எட்டோ என்னமோ..) அவர்களது அப்பாக்களை என்னால் திருப்பித் தர முடியாது.. உயிர்ப்பிக்கவும் இயலாது. இன்மைகள் மனிதத் தடங்கள் மீது நிகழ்த்திய வன்முறையின் வெளிப்பாடென அதனை அடையாளப்படுத்துதல் மட்டுமே என்னால் சாத்தியமான போதிலும், அவர்களை அணைத்துக்கொண்டு சொல்வேன்..,<br /><br />"எனது அப்பாவை அவர்கள் எப்போது பறித்துக் கொள்வார்களென்று எனக்கும் தெரியாது. நீண்டநாட்களாக அந்தக் கணத்தை - அப்படியேதும் நடந்துவிடக் கூடாதென்ற பதைபதைப்புடன் - எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் குழந்தைகளுள் ஒருத்திதான் நானும். வெகு விரைவில், என் உள்ளுணர்வின்படி - வானத்தில் இன்னுமொரு புது நட்சத்திரம் முளைக்கும்போது (இறந்தவர்கள் நட்சத்திரமாக வானில் மின்னுவார்களென்று அம்மா சொல்வாள்), உங்களுக்கு இன்னுமொரு தோழி கிடைத்துவிட்டதை உணர்வீர்கள்.<br /><br />நாங்கள் அனைவருமிணைந்து எங்கள் அப்பாக்களுக்குக் கடிதமெழுதுவோம்:<br />'அப்பா, அப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், அப்பா, நீங்கள் இறந்திருக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்.'<br /><br />முகவரிகளற்ற உலகுக்கு அந்தக் கடிதங்களை அனுப்பி வைப்போம். அல்லாதுவிடில், எமது கனவுகளில் வளையவரும் வெண்சிறகணிந்த தேவதைகள் எமக்காய் அவற்றை எடுத்துச் செல்லட்டும்."<br /><br />ஓ.. என் பிரிய மயிர்க்கொட்டிகளே! எனக்கும் தெரியும். அப்பாக்கள் எப்போதும் கண்டிப்பானவர்கள்.. வீட்டிலிருப்பதைவிட அவர்கள் வெளியிலிருக்கும் நேரம் அதிகம்.. எங்களைவிட மற்ற அனைவர் மீதும் அதிக அக்கறை கொள்வார்கள்.. எங்களுக்கு பரிசுப்பொருள் வாங்கித் தருவதோ, அம்மாவுக்கு உடுப்போ, நகையோ ஒன்றுமில்லை..ஆனால், அவர்களுக்கு வேறு செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும்..<br /><br />இத்தனையிருந்தும், நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். ஏனென்றால், எமக்குத் தெரியும், அவர்கள் மற்றவர்களுக்காக உயிர்வாழ்ந்தவர்கள்.. மற்றவர்களுக்காக உயிர்துறந்தவர்கள். எங்களுக்காக அவர்கள் விட்டுச் சென்றது எதுவுமேயில்லை எனினும், மற்றவர்களுக்காக எங்களை விட்டுச் சென்றிருக்கும் எங்கள் அப்பாக்களை நாங்கள் எப்போதும் நேசிப்போம்!<br /><br />-Apr 20, 2007-</span>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19146565.post-76428560661996529522007-06-04T11:24:00.000-04:002007-06-04T11:29:20.031-04:00நேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல்<span style="font-size:85%;">உன்னுடனான சில நிமிட உரையாடலே போதுமானதாயிருக்கிறது.., உலகத்துக் கவலைகளை மறக்க; மறுபடியுமொருமுறை புத்துயிர் பெற்றெழ. உனது அன்புக் கட்டளையின்படி நேற்றிரவு, வேண்டாத விடயங்களில் மனது அலைபாய்வதைத் தடுத்து மனதுக்குப் பிடித்த விடயங்களையே நினைப்பதென்ற தீர்மானத்துடன் படுக்கையில் சாய்ந்தேன்.<br /><br />மனதுக்குப் பிடித்தது...? வேறென்னவாக இருக்கமுடியும் உன் நினைவுகளைத்தவிர. இறுதியாக என்ன பேசிக்கொண்டிருந்தோம்... ம்ம்ம்... பெரியார்.. மதம்.. மார்க்ஸியம். விவாதிப்பதற்கு அருமையான விடயங்களில்லையா.. இவை குறித்து உன்னுடன் இன்னும் எவ்வளவோ கலந்துரையாட வேண்டியிருக்கிறது; என் அரைகுறை அறிதல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது நம்பிக்கையீனங்களையும்.., எனக்கான கொள்கைகளை வகுப்பதில் தாக்கம் செலுத்திய நிர்ப்பந்தங்களையும்.., எனது நம்பிக்கைகள் எங்கே தொலைந்து போயினவென்பதையும்.. உன்னுடன் பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறது மனம். உனது நம்பிக்கைகளை நோக்குமிடத்தும்.., உன் அப்பாவைப்பற்றி நீ கூறியவற்றைக் கேட்டவிடத்தும் என் நிலைப்பாடுகளும் என்றேனுமொருகால் இப்படித் தடம்புரளுமாவென்ற கலக்கம்... அல்லது அப்படியேதும் நிகழ்ந்தால் இன்னும் நிம்மதியாய் உணர்வேனோவென்ற நப்பாசை... என்னவெல்லாமோ தோன்றுகின்றது.<br /><br />நானும் ஒருகாலத்தில் இத்தகைய நம்பிக்கைகளோடு வாழ்ந்தவள்தான். முருகன்... சைவசமயம் கற்றுத்தந்த கடவுளரில் என்னை மிகவும் கவர்ந்தவன். இன்றைக்கு சில வருடங்களுக்கு முன்பு அவனையொத்த வயதுகளில் நானுமிருந்தபடியாலோ என்னமோ... ஒரு தோழனாய் என் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது அவனோடு. கார்த்திகேயன்... அவனது பெயர்களில் மிகப் பிடித்தது.. நெஞ்சுகொள்ளாப் பிரியத்துடன் 'கார்த்தி' என்றே அவனை விளித்திருக்கின்றேன் (இந்தத் தாக்கத்தில்தான் என் நாட்குறிப்பிற்கும் கார்த்தி என்றே பெயரிட்டு.. இன்றுவரை அப்படித்தான்.. கார்த்தியோடு உரையாடுவதாய்த்தான் நாட்குறிப்பு எழுதிவருகிறேன்). மனம் கனத்துப் போகும் போதெல்லாம் அவனது படமொன்றினை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் அவனுடன் உரையாடியிருக்கிறேன். ஒருபோதும் 'பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.. அது வேண்டும்.. இது வேண்டும்..' என்று எதுவும் கேட்டுக்கொண்டதில்லை அவனிடம். இது தந்தால்.. அது தருவேனென என் அன்பினை/பக்தியை ஒருபோதும் வியாபாரமாக்கியதுமில்லை. நான் வேண்டியதெல்லாம், 'நீ எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும்.. என் ஒவ்வொரு இன்பத்திலும் துன்பத்திலும்... ஏற்றத்தாழ்வுகளிலும் ஒரு ஆறுதலாக நீ இருக்கவேண்டும்..' என்பதுதான். அவனும் இருந்தான்... உலகம் எனை வஞ்சித்துவிட்டதாய் உணர்ந்து மனமுடைந்து அழுதபோதெல்லாம், 'யாமிருக்க பயமேன்..?' என்று கூறிச்சென்றான்.. அசட்டுக் குழந்தையே என்று அடிக்கடி என்னைக் கடிந்தும் கொண்டான்.<br /><br />ஏன் இந்த நம்பிக்கையெல்லாம் சடுதியாகக் கைநழுவிப் போயிற்று..? சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள், மரபு வழிவந்த (மூட) நம்பிக்கைகளை எந்தக்காலத்திலும் நான் ஏற்றுக்கொண்டதில்லையெனினும் ஏன் கடவுளரை வெறுக்க ஆரம்பித்தேன், நான்..?<br /><br />வியாபாரமாகிப்போன பக்தி... தரகர்களாக மாறிப்போன பூசாரிகள்... கேலிக்கூத்தாய்ப்போன கிரியைகள்... மேலும் இந்தத் தெய்வ புத்திரர்கள்... கடவுளரின் மைந்தர்களாய்த் தம்மை அடையாளங்காட்டிக் கொள்பவர்களில் ஒருத்தியாய் - வெட்கித்தலைகுனிந்து - நானுமிருக்கக் கூடாதென்ற வீறாப்பில்தான் அவர்களைத் தூக்கியெறிந்தேன். இந்த மதமும், அதன் பாதுகாவலர்களும் என் பெண்மையை அவமதித்தபோது.., பெண்ணென்ற ஒரே காரணத்திற்காய் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைப் புறக்கணித்தபோது... வெறியும் திமிரும் கிளர்ந்தெழ... என்னை மதிக்காத எதையும், எவரையும் நானும் மதிக்கப்போவதில்லையென முடிவெடுத்து இவர்களின் போலி அரிதாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கினேன். இந்த இந்த நாட்களில் என்னை நெருங்காதே என்று எந்த இறைவன் வந்து சொல்லிப் போனானாம் இவர்களிடம்..?! இறைவர்களை விடுங்கள்.. இறைவியரைக்கூட நெருங்க வேண்டாமாம்... அநியாயமாயில்லை.. அபத்தமாயில்லை..?? நான் மிக மிகப் புனிதமானதாக மதிக்கும் தாய்மையை இவ்வுலகத்தின் சிருஷ்டிகர்த்தாக்களாகக் கூறிக்கொள்ளும் சக்திகளே அவமதிக்கும்போது நான் மட்டுமேன் அவர்களை மதிக்க வேண்டும்..<br /><br />மார்க்ஸியம் பற்றிய எனது அறிவு மிக மிகச் சொற்பமானதுதானென்றாலும், அந்தச் சொற்பத்திற்குள்ளும் ஆயிரத்தெட்டு முரண்பாடுகளை என்னால் அடையாளங்கண்டுகொள்ள முடிந்ததாலும்... - கம்யூனிஸமும் ஆணாதிக்கவழிச் சிந்தனையின் மற்றுமொரு வடிவமே.. என்னதான் சமத்துவம்பற்றி வலியுறுத்திக் கூறினாலும் பெண்கள் தொடர்பான ஆணாதிக்கமுறைமைச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளுக்கு முரணாகவோ, பாலினச் சமத்துவம் பற்றியோ அது அதிக கரிசனை காட்டவில்லை - இவர்களது மற்றுமொரு உழுத்துப்போன தத்துவக் கழிவுகளுள் ஒன்றாகத்தான் மார்க்ஸியத்தையும் கருதினேனென்றபோதும்... மனித சுயவுணர்வே உண்மையான, உயர்ந்த கடவுளென்று கூறிய மார்க்ஸ் என்ற தனிமனிதர் என்னை மிகவும் ஈர்த்ததும் இந்தக் காலங்களில்தான்.<br /><br />மானுட இயலுமைகளுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியொன்று இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்தான் என்றாலும், அவ்வமானுஷ்ய சக்தி/ பரப்பிரம்மம் ஒரு சமுத்திரமென்றால்... அதில் நானும் ஒரு சிறுதுளி... நீயும் ஒரு சிறு துளி... அவனும்.. அனைவரும். இப்படி எத்தனையோ துளிகள் ஒன்றிணைந்துதான் ஒரு சமுத்திரம் உருவாகின்றதென்ற புரிதல் ஏற்படும்போது... அதன்பிறகும் எவரையும் வெறுக்கவோ, அலட்சியப்படுத்தவோ எம்மால் முடியப்போவதில்லை.<br /><br />மனித இனத்தைக் கூறுபோடவும், ஒருசாராரை தீட்டு.. அந்த இந்தப் பணியாரங்களென்ற பெயரில் ஒதுக்கி வைக்கவும் வழிசெய்த மதங்களை/ கடவுளரை விடவும்... 'மனிதனே மனிதனுக்குக் கடவுளென்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற.., அடிமைப்படுத்துகின்ற.., புறக்கணிக்கிற.., கைவிடுகின்ற.. எல்லா உறவுகளும் தூக்கியெறியப்பட வேண்டும்..' என்றுகூறிய மார்க்ஸ் எனும் மாமனிதருக்கு... சக மனிதரை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுத்தந்த அந்த அற்புதமான ஆளுமைக்குத் தலைவணங்குகின்றேன்.<br /><br />நீ கூறியதுபோல மொஸ்கோவில் மழைபெய்கின்றதென்றவுடன் இங்கே குடைபிடிக்கின்ற அரைவேக்காடுகள், அவரையும் அவரது சிந்தனைகளையும் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகின்றது, எனக்கு. மார்க்ஸ் மதங்களை அவற்றின் இயல்பான பலவீனங்கள் காரணமாக மறுத்திருக்கலாம்.. ஆனால், ஒருபோதும் அவர் மதங்களைத் தூக்கியெறிய முயலவில்லை. 'மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி..' என்ற தெளிவு இருந்திருக்கிறது அவருக்கு.<br /><br />(தமிழ் மொழிபெயர்ப்பு அவ்வளவு வாய்க்கவில்லைதான் என்றாலும்) மார்க்ஸின் கவிதைகளில் கைவசமிருந்தவை..:<br /><br />நான் கெட்டவனல்ல, நல்லவனுமல்ல;<br />என்னிடம் வேகமில்லை, சுணக்கமுமில்லை<br />நான் நேற்று முன்னே சென்றால்,<br />நான் இன்று பின்னால் செல்வேன்.<br />ஒளிமிக்க மதவாதி நான்<br />பெண்குதிரையல்ல, ஆண் குதிரையுமல்ல;<br />sophocles, சாட்டை இருவருமே<br />என்னுடைய எழுச்சியின் ஊற்றுக்கள்<br /><br />....................................<br /><br />கான்ட்டும் Fichte யும் தொலைதூரத்திலுள்ள<br />உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள்;<br />நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்<br />அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்<br /><br />.....................................<br /><br />என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை<br />என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை<br />எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை<br />நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்<br />கடவுள்கள் அருளும் ஆசிகளை<br />அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,<br />ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,<br />கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்<br />எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்.</span>Unknownnoreply@blogger.com13tag:blogger.com,1999:blog-19146565.post-38034010133105334912007-05-14T10:36:00.000-04:002007-05-14T10:54:20.550-04:00மோகித்திருப்பதன் சாபங்களைக் கனவில் வரைதல்<span style="font-size:85%;">நேற்று<br />அவனென்னைப் பிரிந்தான்<br />அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்<br />எல்லாமே...<br /><br />நான் இன்னொருத்தனை மோகித்திருந்தேனாம்..<br /><br /><span style="font-size:78%;">(எப்போதும் உங்களுக்கென்று ஒருத்தியை பெயர் குறித்து நிச்சயித்துக் கொள்ளுங்கள். அவள் வேறெந்த ஆடவனையும் பார்க்கக்கூடாது.. பேசக்கூடாது, தீண்டவும் கூடாது. அதைவிடவும் கேவலம், நான் ஒருத்தனைக் காதலிக்கிறேனென ஒரு பெண் உங்கள் முன்னிலையில் உரத்துச் சொல்தலாகாது. பண்பாட்டின் பாதுகாவலர்களுக்கு நடத்தை கெட்டவளாயும், முற்போக்குவாதிகளின் பார்வையில் மேலாதிக்கத்துக்கு கொடிபிடிக்கும் மற்றுமொரு சராசரியாயும், வேறெப்படியும் முத்திரை குத்தப்பட விரும்பாதவரை ஒரு பெண்ணுக்கு எதையும் உரத்துப் பேசுதல் எப்போதும் மறுக்கப்பட்டதுதான்.) </span><br /><br />ஒரு வார்த்தை தானும் சொல்லிக்கொள்ளாமல்<br />பிரிந்தவனைத் தேடி<br />எலுமிச்சம்பழக் கிழவியொருத்தி<br />காட்டிய வழியில்<br />ஓரடியெடுத்து வைத்து பகலிரவைக் கடந்தேன்<br />நான் பலவீனமானவளென்பதை<br />அவர்கள் அறியாதிருக்கும் பொருட்டு<br />புன்னகைக்க புன்னகைக்க<br />பல்லெல்லாம் கொட்டுண்டு<br />கடைவாயிலிருந்து புன்னகை இரத்தமாய் வடிந்தது.<br />வேண்டும்போதெல்லாம்<br />நினைக்க முன்னரே மறுபடி முளைத்த<br />பற்களிடமிருந்து தப்பியோடி<br />தொலைந்துபோன கனவுகளெங்கும்<br />தேசாந்திரியாய் அலைந்து திரிய<br />இதோ இருக்கிறான் நீ தேடிக்கொண்டிருந்தவனென<br />அரைக்காற்சட்டைச் சிறுவனொருவன்<br />கைநீட்டிக் காட்டிய திசையில்<br />என் கனவு வெறும் நீர்க்குமிழியென<br />உடைந்து மறைந்தே போயிற்று.<br /><br />அதனைத் தொடர்ந்தது,<br />வெறுமைகளற்ற பாதாளங்களை நோக்கிய<br />உறவொன்றின் தற்கொலைப் பயணம்<br />மனங்கேளாத தங்கை<br />தனக்கு நீச்சல் தெரியாதென்பதையும் மறந்து<br />அவனைக் காப்பாற்றவென தானும் பாய்ந்து<br />மடிந்து போனாள், கையில்<br />கையடக்கத் தொலைபேசியுடன்<br />விளிம்பினை நெருங்கிவிட்ட என்னை<br />பிடித்திழுத்த கரங்களைச் சபித்தபடி,<br />வெட்டிப்போட வெறிகொண்டு<br />தெருக்களெங்கும் ஓலமிட்டுத் திரிந்தேன், சிலகாலம்.<br /><br />மற்றுமொரு மழைநாளில்<br />ஊரைவிட்டு விலகியோடவென ரயில் நிலையமடைந்து<br />அம்மாவுக்குத் தொலைபேசினேன்..<br />அம்மா என்னை மன்னித்துவிடு<br />நான் போகிறேன்<br />என்றென்றைக்குமாக போகிறேன்<br />இனி உன் சமையலை யாரும் குறைசொல்லப் போவதில்லை<br />கலைந்த துணிகளும், சிதறிக்கிடக்கும் புத்தங்களும் வரவேற்க<br />பொறுப்பற்றவளென இனி யாரையும் நீ பேசவேண்டியதில்லை..<br />என்னை மன்னித்துவிடு.<br />நீயும் போகாதையடி அசட்டுப் பெண்ணே..<br />எதிர்முனையில் அறுந்தது அவள் குரல்,<br />கையில் காசில்லாமல் போனதில்.<br /><br />பின்னமொரு பொழுதில்<br />என் விருப்பம் வேண்டி வழிதொடர்ந்தவனின்<br />வாசலில் பிச்சைக்காரியாய் கையேந்தியபடி<br />எனதிருப்பு...<br />நிராகரிப்பின் வலி படர்ந்த முகத்தை<br />புன்னகைப் பூச்சுக்குள் மறைத்துக்கொண்டு<br />உள்ளழைத்து உணவு தந்து<br />மரியாதையுடன் அவன் வழியனுப்பி வைக்க<br />மனம் இலேசாகி மிதந்து<br />கருமேகம் கவிந்திருந்த தெருவதனில் நினைவு வந்தது<br />அவன் வீட்டில் மறந்து விட்டிருந்த குடை<br /><br />இனிமேலும்,<br />எவரும் எனக்காகக் காத்திருக்கப் போவதில்லை<br />இழுத்தணைத்து நெஞ்சில் தாங்க<br />மார்பில் கிடந்தழ<br />எவரும் என்னை அனுமதிக்கப் போவதுமில்லை. </span>Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-19146565.post-76506683990047936282007-05-01T01:03:00.000-04:002007-05-01T23:20:48.896-04:00தேவதைகள் காத்திருப்பதில்லை<span style="font-size:85%;"><span style="color:#003333;">தேவதைகள்<br />சினங்கொள்ளக் கூடாதென்கிறார்கள்..<br />பெருந்தன்மை வாய்ந்தவையென்கிறார்கள்..</span><br /><br /><strong>எற்றுண்டு கிடத்தல்...</strong></span><span style="font-size:100%;"> </span><br /><span style="font-size:85%;"><br />மரணபீதியில் வெளிறியிருந்த பௌர்ணமி நிலவு<br />சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படும்<br />தமிழரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது<br />ஒன்றாய்.. ஒவ்வொன்றாய்..<br />மனங்கொள்ளா எதிர்பார்ப்புகள் பொய்த்திடப் பொய்த்திட<br />வானக் கந்தலிலிருந்து கழன்றுவிழும் தாரகைகள்<br />முக்கால் மணிநேரத்தில் முற்றத்தில் கிடந்த<br />முழுவாளி நிறைத்தன<br />அது விளிம்புடைந்த பழம் வாளியென்பது வேறு கதை.<br /><br /><strong>புறநிலைக் குறிப்பு</strong><br /><br />தனித்தனியே பொறுக்கியெடுத்து தூசு தட்டி<br />சேலை நெய்து அணிந்திட்ட ஒருத்தி<br />தேவதையாக உருக்கொண்டு - அவர்கள்<br />கதவுகளைத் தட்டத் தொடங்கினாள்<br />அகலத் திறந்த கோட்டைகளின் கதவுகள்<br />அல்லோலகல்லோலத்துடன் ஆடம்பரமாய் வரவேற்க<br />பாளம் பாளமாய் வெடித்திருந்த வறள் நிலத்தில்<br />முதல் துளியின் ஸ்பரிசத்தை உணர்ந்து ரசித்தவள்<br />'நீ மட்டுமா வந்தாய்' என்ற புருவமுயர்த்தல்களை<br />கவனிக்கத் தவறியதை எப்படிக் கண்டிக்க..<br /><br />எல்லாம் தேவதையாய் உருக்கொண்டதால் வந்த வினை<br /><br />விருந்துக்கும் உபசாரத்துக்கும் பரிகாரமாய்<br />இனி அவள் அரசர்களை அழைத்துவர வேண்டும்<br />வெடிச்சத்தங்களும், வாணவேடிக்கைகளும்,<br />தோரணங்களும், பந்தல்களுமென<br />கோட்டைகளும் இப்போது விழாக்கோலம் பூண<br />இம்முறை வரவேற்பு இன்னமும் பலமாகவிருக்கும்<br /><br />அரசர்களை உள்நுழைய அனுமதித்த பின்<br />கோட்டையின் சுவர்களிலிருந்து வெளிக்கிளம்பும் பிசாசொன்று<br />அவளைப் பிதுக்கி வெளித்தள்ள<br />அதிக காலமெடுக்காதென..<br />அவளது தயவின்றி அரசர்களின் அருட்கடாட்சம் கிட்டாதென்பது<br />அவர்களுக்குத் தெரியுமென - பாவம்<br />அவளெப்படி அறிவாள்?<br /><br /><strong>அகவயத் தெளிவு</strong><br /><br />கழுத்தைப் பிடித்து புறந்தள்ளப்பட்ட வேதனையுடன்<br />புழுதியில் கிடந்துகொண்டு<br />அண்ணாந்து பார்க்கிறேன்..<br />நெடிதுயர்ந்த மதில்களுக்கும் மேலால்<br />இன்னமும் ஓரிரண்டு தாரகைகள்<br />அந்தரத்தில் தொங்கிக்கொண்டுதான் கிடக்கின்றன<br /><br />இனியென்ன..<br />கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி<br />அடுத்த கதவினை நோக்கி விரைய வேண்டியதுதான்,<br />தூக்கியெறியப்படுதலை எதிர்பார்த்தபடி.<br />எனினும்<br />நீட்டிய கரங்களுடன் நீங்கள் ஓடிவருமோர் நாளில்<br />புறந்திரும்பி,<br />உங்கள் எல்லை கடந்து<br />வெகுதூரம் சென்றுவிட்டிருந்திருப்பேன்<br /><br />தேவதைகள் காத்திருப்பதில்லை எவருக்காகவுமே.</span><br /><br /><span style="font-size:85%;"><em>(2007-04-27)<br /><br /></em></span><span style="font-size:85%;"><em></em></span><br /><br /><br /><strong></strong>Unknownnoreply@blogger.com15